இழந்த பணத்தை திரும்ப பெற நீங்கள் அலைய வேண்டியதே இல்லை. இந்த சோழி இருந்தால் போதும் நீங்கள் இழந்தவையெல்லாம் உங்களை தானாக தேடி வரும்.

- Advertisement -

பணம் சம்பாதிப்பது ஒரு பெரிய கஷ்டமான காரியம் என்றால் சம்பாதித்த பணத்தை பத்திரமாக பாதுகாப்பது அதை விட கடினம். நம்மிடம் கஷ்டம் என்று யாராவது வந்து கேட்டால் உதவி செய்வது தான் மனித இயல்பு. அப்படி உதவியாக பெற்ற பணத்தை திரும்ப தராமல் இழுத்து அடிப்பது என்பது இன்றைய காலக்கட்டத்தில் அதிகமாக உள்ளது. அப்படி நாம் கொடுத்த பணம் நமக்கு திரும்ப கிடைக்க இந்த சோழி பரிகாரம் வழி செய்யும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பணத்தை சம்பாதிக்கவே அரும்பாடு படும் நாம் அதை சேர்க்க அதைவிட பாடுபட வேண்டியதாக இருக்கும். சில நேரங்களில் இப்படி பணத்தை கொடுத்து ஏமாந்து விடுவோம். பல நேரங்களில் நாம் வேலை செய்த பணம் கூட நமக்கு சரியான முறையில் வராது. அல்லது யாரிடமாவது நாம் உதவி கேட்டிருப்போம் தருகிறேன் என்று சொல்லி இருப்பார்கள். ஆனால் தரமால் நாட்களை நகர்த்தி கொண்டே இருப்பார்கள். இப்படி பணம் நம்மிடம் இருந்து சென்று வராமல் இருந்தாலும், நமக்கு வர வேண்டிய பணம் வராமல் இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. இப்போது இந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தைச் செவ்வாய்க் கிழமை அன்று தான் செய்ய வேண்டும். செவ்வாய்க் கிழமை காலை முதல் இரவு 8 மணி வரை எப்பொழுது வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை நாம் வீட்டின் பூஜையறையில் தான் செய்ய வேண்டும். அதற்கு மூன்று சோழிகளை மட்டும் நல்லதாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.

இழந்த பணத்தை திரும்ப பெற
செவ்வாய்க் கிழமை அன்று குளித்து முடித்து சுத்தபத்தமாக பூஜை அறையில் பூஜை வேலைகளை எல்லாம் முடித்த பிறகு, வீட்டில் ஏற்றிய தீபத்தின் முன் அமர்ந்து கொள்ளுங்கள். இந்த மூன்று சோழியை உங்கள் கையில் வைத்துக் கொண்டு உங்களுக்கு வரவேண்டிய பணத்தை குறித்து மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் இந்த ஒரு மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.

- Advertisement -

ஓம் கீரீம் பத் சுவாகா
என்ற இந்த மந்திரத்தை 441 முறை சொல்ல வேண்டும். இந்த எண்ணிக்கையில் சொல்லும் போது தான் இந்த மந்திரத்திற்கான பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. 441 முறை எண்ணிக்கையை நாம் சரியாக சொல்ல ஏதாவது ஒரு தானியம் அல்லது சிறு கற்கள், பாசி இப்படி ஏதாவது ஒன்றை 441 முதலில் எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு பூஜை அறையில் விளக்கேற்றிய பிறகு கையில் சோழியுடன் இந்த மந்திரத்தை சொல்லும் பொழுது நீங்கள் எண்ணி வைத்ததிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து வைத்தால் சரியான முறையில் பரிகாரத்தை முடித்து விடலாம்.

இத்தனை முறை இந்த மந்திரத்தை சொல்லி செய்யும் பரிகாரம் கொஞ்சம் சிரமமாகத் தான் தெரியும். ஆனால் நம்பிக்கையுடன் இதை செய்யும் பொழுது கண்டிப்பாக நீங்கள் இழந்த பணம், வர வேண்டிய பணம் அனைத்தும் திரும்ப கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: இதுவரை நீங்கள் அனுபவித்த துன்பங்களிலிருந்து மொத்தமாக விடுபட இன்றைய நாளை தவிர விடாமல் இந்த அரச இலை பரிகாரத்தை செய்து விடுங்கள். கடன் பிரச்சனை, குழந்தைகள் படிப்பு, குடும்ப ஒற்றுமை, குழந்தை பாக்கியம் அனைத்திற்கும் சேர்த்து ஒரே எளிய பரிகாரம்

எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்யும் பொழுது அதற்கான பலன் நிச்சயம் உண்டு. இந்த பரிகாரத்தையும் நம்பிக்கையுடன் சேர்த்து நீங்கள் பாடுபட்டு உழைத்த பணத்தை திரும்ப பெறலாம் என்ற கருத்து என்னோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -