இதுவரை நீங்கள் அனுபவித்த துன்பங்களிலிருந்து மொத்தமாக விடுபட இன்றைய நாளை தவிர விடாமல் இந்த அரச இலை பரிகாரத்தை செய்து விடுங்கள். கடன் பிரச்சனை, குழந்தைகள் படிப்பு, குடும்ப ஒற்றுமை, குழந்தை பாக்கியம் அனைத்திற்கும் சேர்த்து ஒரே எளிய பரிகாரம்

- Advertisement -

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதன் அளவுகள் வேண்டுமானாலும் மாறலாமே அன்றி பிரச்சனைகள் நிச்சயமாக இருக்கும். இது நாம் பிறப்பதற்கு முன்பே நம் கர்மாவினால் நமக்கு விதிக்கப்பட்டவை தான். இந்த துன்பத்திலிருந்து எல்லாம் விடுபட வேண்டும் என நினைப்பவர்கள் இன்று சனிக்கிழமை அரசு இலை பரிகாரத்தை செய்யும் போது அதற்கான பலன் நிச்சயம் உண்டு என்று சொல்லப்படுகிறது. இப்போது அந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பரிகாரத்தை செய்ய இன்று மிகவும் உகந்த நாள். இன்று பூசம் நட்சத்திரம் இதை விருத்தி நட்சத்திரம், குரு நட்சத்திரம் என்று சொல்வார்கள். அதே போல் குரு பகவானுக்கு உகந்த இலை அரச இலை. இன்றைய இந்த விசேஷமான நாளில் அவருக்கு உகந்த இந்த அரசு இலை பரிகாரத்தை சனிக்கிழமைக்கு உகந்த தெய்வமான ஆஞ்சநேயருக்கு செய்யும் பொழுது நம்முடைய துன்பங்கள் அனைத்தும் நீங்குவதுடன், இன்றைய தினம் செய்யும் இந்த பரிகாரம் இந்த வருடம் முழுவதும் செய்தற்கான பலனையும் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த பரிகாரத்தை இன்று இரவு 9 மணிக்குள் செய்துவிட வேண்டும். இதற்கு 21 அரச இலைகள் வேண்டும். இந்த இலைகளை மாலை 6:00 மணிக்குள் பறித்து விட வேண்டும். 6 மணிக்கு மேல் விருச்சங்களை நாம் தொந்தரவு செய்யக் கூடாது. அதே போல் இந்த பரிகாரத்தை வீட்டில் செய்வதாக இருந்தால் இரவு 9 மணி வரை செய்யலாம் .ஆலயத்திற்கு சென்று செய்வதாக இருந்த கொஞ்சம் முன்னதாகவே சென்று செய்து விடுங்கள்.

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவை 21 அரச இலை. அதன் பிறகு நாட்டு மருந்து கடைகளில் அஷ்ட கந்த சூரணம் விற்பார்கள் அதையும் வாங்கிக் கொள்ளுங்கள். அத்துடன் வெற்றிலை காம்பு அல்லது மாதுளை மரத்தின் குச்சி மா இலையின் குச்சி இதில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கஷ்டங்கள் தீர எளிய பரிகாரம்
இந்த பரிகாரம் செய்வதற்கு ஆஞ்சநேயர் படம் கட்டாயமாக வேண்டும். ஆஞ்சநேயர் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி விட்டு பூஜை அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் எடுத்து வைத்திருக்கும் 21 இலைகளிலும் அஷ்ட கந்த சூரணத்தை தொட்டு ஸ்ரீ ராமா என்ற நாமத்தை எழுத வேண்டும். இதை எழுதும் போது கைகளை பயன்படுத்தாமல் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் வெற்றிலைக்காம்பு, மாவிலைக் காம்பு இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி எழுதுங்கள். ஒரு வேளை உங்களுக்கு அஷ்ட கந்த சூரணம் கிடைக்கவில்லை என்றால் குங்குமத்தில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு குழைத்து வாசனைக்கு மல்லிகை ஆயில் ரோஜா ஆயில் போன்றவை கடைகளில் விற்பார்கள். அவற்றில் ஏதேனும் ஒன்று கலந்து கொள்ளுங்கள்.

21 இலைகளிலும் எழுதிய பிறகு அதை மாலையாக தொடுத்து ஆஞ்சநேயர் படத்திற்கு போட்டு தீபம் ஏற்றி வழிபாடை முடித்துக் கொள்ளுங்கள் இவ்வளவு தான் பரிகாரம். வீட்டில் ஆஞ்சநேயர் படம் இல்லையென்றால் இதை உங்கள் பூஜை அறையில் அமர்ந்து எழுதிய பிறகு கோவிலில் சென்று ஆஞ்சநேயர் சிலைக்கு இந்த மாலையை அணிவித்து வழிபட்டு வந்து விடுங்கள்.

- Advertisement -

இந்த ஸ்ரீராமா என்ற நாமத்தை எழுதும் போது உங்களின் எந்த பிரச்சனைகளுக்காக இந்த பரிகாரத்தை செய்கிறீர்களோ அதை மனதார சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். இந்த பரிகாரம் நிச்சயம் அதற்கான ஒரு நல்ல பலனை கொடுக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: நம் வாழ்க்கையில் இந்த ஒரு தானத்தை ஒரு முறையேனும் செய்தால் இறந்த பின்பு அதிகம் துன்பப்பட வேண்டாமாம் தெரியுமா? என்ன தானம் அது?

விசேஷமான இந்த நாளில் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் நம்முடைய அனைத்து துன்பங்களுக்கும் ஒரு விடுதலை கிடைக்கும் என்றால் நாம் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்யலாம். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இதை செய் தால் நல்ல பலன் கிடைக்கும் என்று தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -