கொடுத்த பணம் திரும்ப பெற பரிகாரம்

panja muga anjaneyar vilaku
- Advertisement -

சிலர் நல்ல முறையில் நம்மிடம் பழகி அவசர தேவைக்கு பணம் வேண்டும் என்று வாங்கிய பிறகு பணத்தை தராமல் ஏமாற்றி விடுவார்கள். இன்றைய காலகட்டத்தில் இது போல பல இடங்களில் நடக்கிறது. பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதிப்பவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். இப்படி நம்பி கொடுத்து ஏமாந்து விட்டால் அவர்களுடைய மனநிலை எவ்வளவு மோசமானதாக இருக்கும் என்று சொல்லி தெரிய தேவையில்லை.

அப்படியானவர்கள் இந்த தீப பரிகாரத்தை செய்யும் போது யார் உங்களிடம் பணத்தை வாங்கி ஏமாற்றினார்களோ அவர்களே மனம் மாறி உங்களிடம் பணத்தை திருப்பித் தருவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பாடுபட்டு கொடுத்த பணத்தை திரும்ப வராமல் தினம் தினம் வந்து கொண்டிருப்பவர்கள் தைரியமாக இந்த தீப பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கொடுத்த பணத்தை திரும்ப பெற

இந்த தீப பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால் தொடங்கிய நாளிலிருந்து 43 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த தீபத்தை காலை பிரம்ம முகூர்த்த வேளையில் ஏற்றுவது மிகவும் சிறந்தது. அப்படி ஏற்ற முடியாதவர்கள் காலை உணவை உட்கொள்வதற்கு முன்பாக செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்திற்கு ஒரு சிறிய மண் தட்டு அல்லது மண் அகல் வாங்கிக் கொள்ளுங்கள். அதில் கைநிறைய கல் உப்பை மலை போல குவித்து கொட்டி பூஜை அறையில் வைத்து விடுங்கள். இதற்கு நாம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் கல் உப்பையே பயன்படுத்தலாம் தவறில்லை. அடுத்து ஒரு வெள்ளை நிற தாளில் நீல நிற மையால் ஆன பேனாவில் நீங்கள் யாருக்கு பணத்தை கொடுத்தீர்களோ அவருடைய பெயர் எவ்வளவு கொடுத்தீர்களோ அதையும் எழுதி அந்த உப்பிற்கு மேல் மடித்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து தீபம் ஏற்றும் முறை தான் மிகவும் முக்கியம். இதற்கு இரண்டு மா விளக்கு செய்து கொள்ளுங்கள். நாம் எப்போதும் வீட்டில் மாவிளக்கு எப்படி தயார் செய்வோமோ அதே போல செய்து பஞ்சித் திரி போட்டு நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு வேறு எண்ணெயை பயன்படுத்தக் கூடாது. இந்த மாவிளக்கை வைப்பதற்கு வாழை இலையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு முன்பாக உங்களுடைய குலதெய்வம் இஷ்ட தெய்வம் விநாயகர் என அனைவரையும் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இந்த தீபத்தை ஏற்றி வைத்த பிறகு தீபத்தின் முன் அமர்ந்து அனுமன் சாலிசா தெரிந்தால் அதை 11 முறை படிக்க வேண்டும். தெரியாதவர்கள் யூடியூப்பில் போட்டு கேளுங்கள். அடுத்து பஞ்சமுக ஆஞ்சநேயர் கவசத்தை ஒரு முறை படிக்க வேண்டும். இதையும் தெரியாதவர்கள் யூடியூபில் போட்டு கேளுங்கள். ஆனால் இந்த இரண்டு ஸ்லோகத்தையும் படிக்க வேண்டியது மிக மிக முக்கியம்.

- Advertisement -

இந்த தீபமானது குறைந்தது அரை மணி நேரத்தில் இருந்து அதிகபட்சம் ஒரு மணி நேரம் வரை எரிய வேண்டும். அதே போல் தீபம் தானாக மலை ஏற வேண்டும். இந்த உப்பு நீர்த்துப் போவது போல் உணர்ந்தால் அதை வெள்ளி செவ்வாய் நாட்களில் மாற்றாமல் மற்ற நாட்களில் எடுத்து தண்ணீரில் கரைத்து விட்டு புதிதாக வேறு உப்புக் கொட்டி வைத்து விடுங்கள்.

இந்த மாவிளக்கை பசு மாட்டிற்கு தானமாக கொடுத்து விடுங்கள். பசுமாடு இல்லை என்பவர்கள் ஓடும் நீரில் கரைத்து விடுங்கள். இந்த தீபத்தை 43 நாட்களில் ஒரு நாள் கூட விடாமல் தொடர்ந்து ஏற்ற வேண்டும். பெண்கள் மாதவிலக்கு ஆன நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் தொடர்ந்து ஏற்றலாம். அதே போல் இந்த தீபத்தை ஏற்றுபவர்கள் ஆணும் பெண்ணும் இந்த பரிகாரம் முடியும் வரை அசைவத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.

இதையும் படிக்கலாமே: சௌபாக்கியம் பெருக வழிபாடு

இந்த பரிகாரத்தை செய்யும் போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது நாம் கொடுத்த பணம் நேர்மையான முறையில் நியாயமாக சம்பாதித்ததாக இருக்க வேண்டும். வட்டிக்கு பணம் கொடுத்து இருந்தால் அந்த பணம் திரும்ப வருவது சந்தேகம் தான். கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்கான இந்த பரிகாரத்தில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து இழுந்த பணத்தில் திரும்ப பெறுங்கள்.

- Advertisement -