சௌபாக்கியம் பெருக வழிபாடு

women prayer
- Advertisement -

ஒரு குடும்பம் லட்சுமி கடாட்சமாக திகழ வேண்டும் என்றால் அந்த குடும்பத்தில் இருக்கும் பெண்கள் லட்சுமி ஆகவே திகழ வேண்டும் என்று கூறப்படுகிறது. எந்த வீட்டில் பெண்கள் சந்தோஷமாகவும் சிரித்த முகத்துடனும் இருக்கிறார்களோ அந்த வீட்டில் மகாலட்சுமி அருள் கண்டிப்பான முறையில் இருக்கும். அப்படிப்பட்ட பெண்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைவதோடு குடும்பத்தில் அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் சௌபாக்கியம் பெருக பெண்கள் செய்யக்கூடிய வழிபாட்டை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

அனைத்து விதமான நன்மைகளும் தருவதை தான் சௌபாக்கியம் என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட நன்மைகளை பெறுவதற்கு வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் பல இருக்கின்றன. அவற்றுள் மிகவும் எளிமையாக மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே செய்யக்கூடிய ஒரு வழிபாட்டு முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம். இதை செய்வதன் மூலம் பல நல்ல மாற்றங்களை பெற முடியும்.

- Advertisement -

சௌபாக்கியம் பெருக பெண்கள் செய்ய வேண்டிய வழிபாடு
இந்த வழிபாட்டை எந்த கோவிலில் வேண்டுமானாலும் செய்யலாம். கண்டிப்பான முறையில் பெண்கள் தான் செய்ய வேண்டும். யார் செய்கிறார்களோ அவர்களுடைய நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் இல்லாத நாளாக தேர்வு செய்து இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அருகில் இருக்கும் ஏதாவது ஒரு ஆலயத்திற்கு செல்லுங்கள். அந்த ஆலயத்தில் இருக்கக்கூடிய பெண் தெய்வத்திடம் தான் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

இந்த வழிபாட்டிற்கு நமக்கு தேவைப்படும் சில முக்கியமான பொருட்கள். மஞ்சள் பட்டு துணி, மஞ்சள் தூள், மஞ்சள் கயிறு, வெற்றிலை பாக்கு, மஞ்சள் கிழங்கு, குங்குமம், நாணயங்கள், எலுமிச்சை பழம். மேலே சொன்னதில் ஏதாவது ஐந்து பொருட்களை மஞ்சள் பட்டு துணியில் வைத்து பெண் தெய்வத்தின் மடியிலோ அல்லது பாதத்திலோ வைத்து இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து மனதார வழிபட வேண்டும்.

- Advertisement -

பிறகு அந்த தெய்வத்தை 11 முறை வலம் வந்து இந்த பொருட்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வரவேண்டும். வீட்டு பூஜை அறையில் இந்த பொருட்கள் அனைத்தையும் வைத்து தீபம் ஏற்றி கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தையுமே உபயோகப்படுத்திக் கொள்ளலாம். மஞ்சள் துணியை தைத்துக் கொள்ளலாம். மஞ்சள் தூளை முகத்திற்கு தடவி குளிக்க வேண்டும்.

மஞ்சள் கயிறை கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். வெற்றிலை பாக்கை வயதானவர்களுக்கு தரலாம் அல்லது செடிகளில் போட்டு விடலாம். மஞ்சள் கிழங்கை இளைத்து முகத்தில் தடவிக் கொள்ளலாம். குங்குமத்தை தினமும் நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும். நாணயத்தை பணம் அல்லது நகை வைக்கும் பெட்டகத்தில் வைத்து விட வேண்டும். எழுமிச்சங்கனியை பூஜை அறையிலோ அல்லது நிலை வாசலிலோ வைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சுக்ர யோகம் கிடைக்க உதவும் தூபம்

இவ்வாறு மாதா மாதம் வழிபாடு செய்வதன் மூலம் வீட்டில் எந்தவித குறையும் இல்லாமல் சந்தோஷமும் சௌபாக்கியமும் நிலைத்திருக்கும். மேலும் எந்த வேண்டுதலை முன்வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்கிறோமோ அந்த வேண்டுதல் நிறைவேறும்.

- Advertisement -