இழந்த பணம் நகை சொத்துக்கள் அனைத்தையும் திரும்ப மீட்டு தரும் சக்தி வாய்ந்த தென்னை மர பரிகாரம்.

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் நாம் பணம் பொருள் எல்லாம் சேர்ப்பதே பெரும் பாடாக இருக்கும் பட்சத்தில், அப்படி பாடுபட்டு சேர்த்த பணமோ பொருளோ இழந்து விட்டால் அதனால் அடையும் துன்பத்திற்கு அளவே இல்லை. நாம் யாரையாவது நம்பி பணமோ நகையோ ஏதோ ஒன்றை கொடுத்து அவர்கள் அதை திருப்பித் தராமல் இழந்து இருந்தாலும், இல்லை நாம் வேறு எதிலாவது முதலீடு செய்து அந்த பணம் நமக்கு நஷ்டமாகி இருந்தாலும், இல்லை நமக்கு வர வேண்டிய நில புல சொத்துக்கள் வராமல் நம் கைவிட்டுப் போய் இருந்தாலும் இந்த ஒரு பரிகாரத்தை செய்யும் போது நிச்சயமாக இழந்தவை அனைத்தும் நமக்கு திரும்ப கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இப்படி இழந்தவைகள் எல்லாம் திரும்ப தரும் இந்த பரிகாரத்தை செய்ய எப்படி வேண்டும் என்பதை தான் இந்த பதிவு நமக்கு தெளிவு படுத்துகிறது.இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான ஒன்று தென்னை மரம். இரண்டு மரங்கள் ஒன்றாக இருக்கும் தென்னை மரத்தை தான் நாம் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பொதுவாக தென்னை மரங்களை ஒன்றோடு ஒன்று ஒட்டி வைக்க மாட்டார்கள். ஏனென்றால் தென்னை ஓலைகள் பெரிய அளவில் வளரக்கூடியது ஒன்றுடன் ஒன்று ஒட்டியபடி வைக்கும் போது அதன் வளர்ச்சி தடைப்படும் என்பதற்காக ஒரு தென்னை மரத்திற்கும் அடுத்த மரத்திற்கும் பெரிய அளவில் இடைவெளி விட்டு தான் வைப்பார்கள். ஆனால் இந்த பரிகாரத்திற்கான மரம் நமக்கு ஒன்றுடன் ஒன்று அதிகபட்ச மூன்று அடி இடைவெளியில் இருக்கும் மரம் தான் இந்த பரிகாரத்துக்கு உகந்தது.

அடுத்தது இந்த பரிகாரத்திற்கு தேவையானது மஞ்சள், சிகப்பு, வெள்ளை என மூன்று நிறத்தில் உள்ள கயிறு. இது அரைஞான் கயிறாகவும் இருக்கலாம் அல்லது பம்பரம் சுற்றுப் பயன்படுத்தும் கயிறாகவும் இருக்கலாம் நூல் வேண்டாம். இந்த மூன்று நிற கயிறையும் எடுத்து கொள்ளுங்கள். இதற்கு கொஞ்சம் பெரிய நீளமான கயிறாக எடுத்து கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த கயிறை வைத்து இரண்டு மரத்தையும் நாம் சேர்த்து கட்ட வேண்டும். எனவே கயிறு சற்று பெரிய அளவில் வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அந்த மூன்று நிற கயிறையும் வாங்கி பெண்களின் ஜடை பின்னுவதை போல் பின்னி கொள்ளுங்கள். அடுத்ததாக இரட்டை மரம் உள்ள இடத்திற்கு சென்று இரண்டு மரங்களையும் சேர்த்து மூன்று சுற்றுகள் சுற்றி முடிச்சு போட்டு விட வேண்டும். இப்படி சுற்றுச் சுற்றும் போதும், முடிச்சு போடும் போதும் நீங்கள் எந்த பொருளை இழந்தீர்கள் என்பதை கூறி அந்த பொருள் உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்று மனதார உங்கள் குல தெய்வத்திடம் வேண்டிக் கொண்டு முடிச்சு போட்டு விட்டு , அங்கு ஒரு கற்பூர தீபம் ஏற்றி கையெடுத்து கும்பிட்டு விட்டு வந்து விடுங்கள். இப்படி தென்னை மரத்தை சுற்றி வணங்கினால் நீங்கள் இழந்தை உங்களுக்கு திரும்ப தரும் சக்தி வாய்ந்து இந்த பரிகாரம்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் இந்த நாளில் மட்டும் கட்டாயமாக விளக்கு ஏற்றவே கூடாது. நம் வீட்டில் லட்சுமி கடாட்சத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

இதன் பிறகு இத்தனை நாள் நீங்கள் இழந்த பொருளை மீட்க எந்த முயற்சிகள் எடுத்தும் நடக்காமல் இருந்தாலும், இனி அது நடப்பதற்கான சாத்திய கூறுகளை இந்த பரிகாரம் உங்களுக்கு செய்து கொடுக்கும். இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து நீங்கள் முயற்சிகளை தொடருங்கள் இறைவனின் அருளால் நீங்கள் இழந்த பொருள் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -