இழந்ததை எல்லாம் திரும்பத் தரும் முருகன் மந்திரம்

muruga sad lady
- Advertisement -

ஒரு மனிதன் வாழ்க்கையில் பெயர் புகழ் சொத்து என அனைத்தையும் சம்பாதித்து ஒரு நல்ல நிலைக்கு வர எத்தனை பாடுபட வேண்டும். இது அந்த நிலையில் இருக்கும் பலரும் அறிந்த உண்மை. அந்த நிலைக்கு வர ஒவ்வொரு நாளும் முயற்சி செய்பவர்களுக்கும் இதன் அருமை நன்றாகவே புரியும். இவையெல்லாம் ஒன்றாக ஒருவருக்கு கிடைப்பதும் அத்தனை சாதாரணமான விஷயமே கிடையாது.

அப்படி ஒருவர் வாழ்க்கையில் எல்லாம் கிடைத்து ஏதோ ஒரு காரணத்தினால் அனைத்தையும் இழக்க கூடிய சூழ்நிலை உருவாகும். இது பிறருடைய சூழ்ச்சியாக இருக்கலாம் அல்லது யாரோ ஒருவரை நம்பி ஏமாந்து இருக்கலாம். இவை மட்டும் இன்றி கிரக சூழ்நிலையல் கூட இது நடக்கலாம். ஏதோ ஒரு காரணத்தினால் அனைத்தையும் இழந்து இனி வாழ்க்கையில் எதுவுமே இல்லை என்று துவண்டு போனவர்கள் எத்தனையோ பேரை நம்முடைய வாழ்க்கையில் சந்தித்திருப்போம். ஏன் நமக்கே கூட இந்த அனுபவம் இருக்கும்.

- Advertisement -

இப்படி வாழ்க்கையில் தொலைத்தவர்களும், இனி வாழ வழி இல்லாம துன்பப்படுபவர்களும் திருச்செந்தூர் முருகப் பெருமானை தொடர்ந்து வழிபடும் போது இந்த நிலை கட்டாயமாக மாறும் என்று சொல்லப்படுகிறது. ஒரு மனிதனுக்கு பெயர் புகழ் செல்வம் என அனைத்தையும் ஒரு சேரும் தரக் கூடிய ஸ்தலம் திருச்செந்தூர். அந்த ஸ்தல தெய்வமாக விளங்குபவர் முருகன். இவரின் வழிபாட்டை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இழந்தவற்றை திரும்ப பெற மந்திரம்

இந்த மந்திர வழிபாட்டை தொடங்க நாள் கிழமை எதையும் பார்க்க வேண்டியது கிடையாது. நீங்கள் எப்பொழுது துன்பம் பட்டு துவண்டு நின்றாலும் அந்த நேரத்தில் கந்தனை நினைத்து இந்த மந்திரத்தை சொன்னால் போதும்.

- Advertisement -

அதே போல் இந்த மந்திர வழிபாட்டை செய்ய வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து சொன்னால் தான் பலன் என்ற நிலையும் கிடையாது. நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கே நின்ற நிலையிலே கூட இந்த மந்திரத்தை சொல்லலாம். அவ்வளவு சக்தி வாய்ந்த அதே நேரத்தில் எளிமையாக எல்லோரும் சொல்லக் கூடிய ஒரு மந்திரம் தான் இது.

மந்திரம்

ஓம் முருகா
குரு முருகா
அருள் முருகா
ஆனந்த முருகா
சிவசக்தி பாலகனே
சண்முகனே
சடாஷ்ரனே
என் வாக்கிலும்
நினைவிலும்
நின்று காக்க
ஓம் ஐம் ஹ்ரீம் வேல்
காக்க சுவாஹா

- Advertisement -

இந்த மந்திரத்தை தினமும் ஒரு முறையாவது நீங்க சொல்லி விடுங்கள். இதை துன்பப்பட்டவர்கள் மட்டும் தான் இதை சொல்ல வேண்டும் என்று கிடையாது. இந்த மந்திரத்தை ஜெபிக்கும் போது நீங்கள் என்ன வேண்டிக் கொண்டு சொன்னாலும் அத்தனையும் நடக்கும் என்று ஆணித்தரமாக சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பண வரவு ஏற்பட பரிகாரம்

திருச்செந்தூர் முருகனின் இந்த மந்திர வழிபாட்டு முறையில் உங்களுக்கும் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் ஜெபித்து இது வரை இழந்த அனைத்தையும் திரும்ப பெறலாம். இதனால் நீங்கள் நினைத்தவை எல்லாம் உங்கள் கை கூட கந்தனின் அருளாசி திட்டும் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -