பண வரவு ஏற்பட பரிகாரம்

amman kirambhu cash
- Advertisement -

இப்போதுள்ள சூழ்நிலையில் பணத்தை சம்பாதிப்பதை விட சம்பாதித்த பணத்தை தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினமான காரியம். கையில் காசு இருப்பது தெரிந்து யாராவது வந்து கேட்டால் இல்லை என்று சொல்லாமல் உடனே பலரும் கொடுத்து விடுவார்கள். அது கடனாகவும் இருக்கலாம் அல்லது கைமாறாகவும் இருக்கலாம். அப்படி அவசரம் என்று சொல்லி வாங்கியவர்களிடமிருந்து இந்த பணத்தை திரும்ப வாங்குவது நமக்கு பெரும்பாடாக இருக்கும்.

ஒரு சில நேரங்களில் நமக்கே பணம் தேவை படும். யாரிடமாவது சென்று கேட்டாலும் தருகிறேன் என்று சொல்வார்கள். ஆனால் தராமல் இழுத்து அடிப்பார்கள். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நமக்கு வரவேண்டிய பணம் வருவதோடு மட்டும் இல்லாமல் நமக்கு பணம் தேவைப்படும் போதும், நாம் கேட்கும் இடத்தில் பணம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்த பரிகாரமானது நியாயமான முறையில் நமக்கு வரவேண்டிய பணத்தையும், நமக்கு தேவைப்பட்ட நேரத்தில் பணம் கிடைக்கவும் வழி செய்யும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியான இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

பணவரவு ஏற்படவும் கொடுத்த பணம் திரும்பப் பெறவும் பரிகாரம்

இந்த பரிகாரத்தை வீட்டில் செய்யலாம் அல்லது ஆலயத்தில் செய்யலாம் வீட்டில் செய்வதாக இருந்தால் கட்டாயம் துளசி மாடம் இருக்க வேண்டும். துளசி செடி இல்லை என்றால் இந்த பரிகாரத்தை நீங்கள் ஏதாவது ஒரு அம்மன் ஆலயத்தில் செய்யுங்கள். இதை தவிர மற்ற இடத்தில் இந்த தீபத்தை ஏற்றக் கூடாது.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவை ஒரு எலுமிச்சை பழம், இரண்டு கிராம்பு. இந்த கிராம்பு உடையாமல் நல்ல நிலையில் இருக்க வேண்டும். அடுத்தது சுத்தமான பசு நெய், பஞ்சுத் திரி இவையெல்லாம் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை செய்ய நாள் கிழமை எதுவும் கிடையாது. பரிகாரம் செய்யும் நேரம் ராகு காலம் எமகண்டம் போன்றவை இல்லாது இருந்தாலே போதுமானது.

எலுமிச்சை பழத்தை இரண்டாக பிளந்து அதன் சாறை கால்படாத இடத்தில் ஊற்றி விடுங்கள். அதன் பின்பு அந்த ஒரு பாதி எலுமிச்சை பழத் தோளில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து மீதமுள்ள பாதி எலுமிச்சை பழத்தின் மீது மஞ்சள் குங்குமம் வைத்து எலுமிச்சை பழ தோலை வையுங்கள். அதாவது ஒரு எலுமிச்சை பழ தோலுக்கு அடியில் இன்னொரு எலுமிச்சம் பழத்தில் இருக்க வேண்டும் அவ்வளவு தான்.

- Advertisement -

அடுத்து மஞ்சள் குங்குமம் வைத்து எலுமிச்சை பழத் தோலில் நெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு அதில் கிராம்பை போட்ட பிறகு தீபம் ஏற்றி வைத்து தீபத்தின் முன்பு நின்று வணங்க வேண்டும். உங்களுக்கு வரவேண்டிய பணமாக இருந்தால் அதை சொல்லி திரும்ப கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள். ஒரு வேளை உங்களுக்கு பணம் தேவைப்பட்டாலும் அதை சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள்.

இந்த தீபத்தை எத்தனை நாள் ஏற்ற வேண்டும் என்ற கணக்கு கிடையாது. உங்களுக்கு தோன்றும் பொழுதெல்லாம் ஏற்றலாம் அல்லது உங்களுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்படும் போது இந்த தீப பரிகாரத்தை செய்தால் நல்ல பலனை கொடுக்கும். இந்த முறை சிலர் வட்டிக்கு பணம் கொடுத்து ஏமார்ந்து இருப்பார்கள். அது நியாயமானதாக இருந்தால் நிச்சயம் அந்த பணமும் திரும்ப கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து முழுப்பலனையும் அடையலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -