ஊரே உங்களை திரும்பிப் பார்க்கும் அளவுக்கு முகம் பிரகாசமாக மாறும். இதை மட்டும் முகத்தில் தடவினால்.

face1
- Advertisement -

அழகு என்றதும் நம் நினைவிற்கு வருவது நிலா. நிலவில் கலகங்கள் இருந்தாலும் அதை நாம் அழகாகவே நினைக்கிறோம். காரணம் அதன் பிரகாசமே. அதே ஒரு பெண்ணின் முகத்தில் பருக்களும், கரும்புள்ளிகளும் இருந்தால் அதை நம்மால் ஏற்க முடிவதில்லை. அப்படி இருக்கும் ஒரு முகத்தில் கரும்புள்ளிகளும், பருக்களும் இல்லாமல் பிரகாசமாக இருந்தால் அது அனைவரின் கண்களையும் திரும்பிப் பார்க்கச் செய்யும்.

அவ்வாறு திரும்பிப் பார்க்க வைக்கும் பிரகாசத்தை எப்படி பெறுவது என்று தான் இந்த அழகு குறிப்பு பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். செயற்கையான அழகால் நமக்கு பாதிப்புகளே ஏற்படும் என்று தெரிந்தாலும், இயற்கைக்கு இடம் கொடுக்காமல் இயற்கையால் ஏற்படக்கூடிய தாமதத்திற்கு காத்திருக்காமல் செயற்கை நம்பி முக அழகை கெடுக்கும் பலரும் இருக்கிறார்கள்.

- Advertisement -

முகத்தில் இருக்கும் மாசு மாரும் மறைய அழகு குறிப்பு

இயற்கை வழியில் நாம் எந்த அளவுக்கு செல்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கு ஆரோக்கியம் மேம்படும். அந்த இயற்கையான அழகு குறிப்பை தான் நாம் பார்க்கப் போகிறோம். இதற்கு நமக்குத் தேவைப்படும் பொருட்கள் உருளைக்கிழங்கு, காய்ச்சாத பசும்பால், மஞ்சள் தூள். உருளைக்கிழங்கை தோல் நீக்கி உரசி சாறு தயாரிக்க வேண்டும். உருளைக்கிழங்கு சாறு 4 ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் காய்ச்சாத பசும்பால் 2 ஸ்பூன் சேர்க்க வேண்டும். கடைசியாக நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பயன்படுத்தக்கூடிய பொருளான மஞ்சள் தூள். கடையிலிருந்து வாங்கி வந்து போடாமல் நாமே மஞ்சள் கிழங்கை வாங்கி வந்து அரைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு உபயோகப்படுத்துவது சாலச் சிறந்தது.

- Advertisement -

இதற்கு நாம் கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்தினால் அது இன்னும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். கஸ்தூரி மஞ்சள் தூள் கால் ஸ்பூன் போட்டு நன்றாக மூன்றையும் கலக்க வேண்டும். முகத்தில் இருக்கும் கருமைகளை நீக்கும் ஆற்றல் மிக்கது தான் உருளைக்கிழங்கு சாறு. பசும் பாலிலும் நம் முகத்தில் இருக்கும் கருமையை நீக்கும் தன்மைகள் இருக்கின்றது.

மஞ்சள் நம் முகத்திற்கு பிரகாசத்தை தருவதுடன், நோய் எதிர்ப்பு ஆற்றலை கொண்டிருப்பதால் பருக்களை நீக்குகிறது. மேலும் புதிதாக பருக்கள் வராமல் தடுக்கப்படுகிறது. முதலில் முகத்தை சுத்தமான தண்ணீரால் நன்றாக கழுவ வேண்டும். சோப்பு போட்டு கழுவ கூடாது. பிறகு ஒரு மிருதுவான துண்டை வைத்து முகத்தை துடைத்துவிட்டு நாம் கலந்து வைத்திருக்கும் அந்த பொருட்களில் பஞ்சை நனைத்து முகப்பரு இருக்கும் இடங்களில் தடவ வேண்டும்.

- Advertisement -

முகப்பரு இல்லாத இடங்களில் கைகளை வைத்து நாம் தடவிக் கொள்ளலாம். பருக்களின் நகம் படுவதால் தான் பருக்கள் வடுக்களாக மாறுகின்றது. ஆதலால் தான் பருக்களில் பஞ்சை வைத்து போட வேண்டும் என்று கூறுகிறோம். அரை மணி நேரம் இந்த முகப் பூச்சு அப்படியே இருக்கட்டும். அவை நன்றாக உலர்ந்த பிறகு மறுபடியும் சாதாரண சுத்தமான தண்ணீரை வைத்து கழுவ வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தலைமுடிக்கு வெந்தயம் சேர்த்தால் சளி பிடிக்கிறதா? அப்படின்னா வெந்தய கீரையை இப்படி சேர்த்து பாருங்கள் காடு மாறி உங்க முடி கருகருன்னு அடர்த்தியாக வளருமே!

இவ்வாறு நாம் தினமும் செய்து வந்தால் 7 நாட்களிலேயே உங்கள் முகம் பிரகாசமாக இருப்பதை உங்களாலேயே உணர முடியும். எந்தவித செயற்கை முகப் பூச்சுகளும் உபயோகப்படுத்தாமல், இயற்கையான முறையில் முகம் பிரகாசம் அடைவதோடு முகப்பருக்களும், கரும்புள்ளிகளும் மேலும் மேலும் அதிகமாக வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த மூன்று பொருட்களுக்கும் இருக்கிறது. இயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த முகப்பூச்சை தினமும் உபயோகப்படுத்தி நிலவைப் போன்ற பிரகாசமான முகத்தை பெருங்கள்.

- Advertisement -