முகப்பிரகாசத்தை தரும் ஃபேஸ் பேக்

bright face pack
- Advertisement -

கருத்த முகமாக இருந்தாலும் சரி சிவத்த முகமாக இருந்தாலும் சரி முகம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். அப்படி முகம் பிரகாசமாக இருப்பதற்கு பல வழிமுறைகளை பின்பற்றினாலும் இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து செய்வதுதான் நிலையான பிரகாசத்தை தரும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் இயற்கையான பொருட்களை வைத்து முகத்தை பிரகாசமாக வைக்க உதவும் ஃபேஸ் பேக்கை எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

இன்றளவும் கிராமப்புறங்களில் கருப்பா இருந்தாலும் கலையா இருக்கா என்னும் வார்த்தையை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த கலையா இருப்பா என்பது தான் பிரகாசமாக திகழ்வது என்று பொருள்படும். நிறம் குறைவாக இருந்தாலும் பிரகாசமாக இருந்தால் அது ஒரு வித புத்துணர்ச்சியை நமக்குள்ளே ஏற்படுத்தும். அப்படிப்பட்ட பிரகாசத்தை எப்படி பெறலாம் என்று பார்ப்போம்.

- Advertisement -

நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து தான் இந்த ஃபேஸ் பேக்கை நாம் தயார் செய்ய போகிறோம். ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாக கனிந்த தக்காளி பழம் ஒன்றை எடுத்து அதை பாதியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பாதி தக்காளி பழத்தை மட்டும் எடுத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்த அந்த சாரை ஒரு பவுலின் மாற்றிக் கொள்ள வேண்டும். பிறகு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை சேர்க்க வேண்டும்.

அடுத்ததாக இரண்டு ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவை சேர்க்க வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கலந்த இந்த பேஸ்ட்டை முகத்தை சுத்தம் செய்த விட்டு முகத்தில் தடவ வேண்டும். ஐந்து நிமிடம் முகத்தை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு இந்த ஃபேஸ் பேக் உலரும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். முற்றிலும் காய விடக்கூடாது.

- Advertisement -

லேசாக ஈரப்பதம் இருக்கும் பொழுது முகத்தை கழுவி விட வேண்டும். அவ்வளவுதான் உங்கள் முகம் பிரகாசமாக திகழ ஆரம்பிக்கும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை என்ற விதம் உபயோகப்படுத்தினாலே போதும். முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் வைட் ஹெட்ஸ் பிளாக் ஹெட்ஸ் மாசு மருக்கள் என்று அனைத்தும் நீங்கும். முகப்பரு ஏற்படாத வண்ணம் இது பாதுகாக்கும்.

முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்குவதற்கும் இது உதவி செய்கிறது. அதுமட்டுமல்லாமல் முகநிறத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்த பேஸ்டை தயாரித்த உடனேயே உபயோகப்படுத்தி விட வேண்டும். மீதம் இருக்கும் பேட்டை பிரிட்ஜில் வைத்து மற்றொரு முறை உபயோகப்படுத்தலாம் என்று நினைக்க வேண்டாம். மேலும் இந்த பேஸ்ட்டை முகத்தில் மட்டுமல்லாமல் கழுத்து, கைகள் போன்ற இடங்களிலும் நாம் உபயோகப்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே: கருத்த நிறமும் வெண்மையாக க்ரீம்

அனைவரின் வீட்டிலும் இருக்கக்கூடிய இந்தப் பொருட்களை பயன்படுத்தி நம்முடைய முகத்தை பொலிவுடனும் பிரகாசமாகவும் மாற்ற முடியும் என்னும் பட்சத்தில் எதற்காக விலை உயர்ந்த கெமிக்கல் நிறைந்த கிரீம்களை உபயோகப்படுத்த வேண்டும் என்று யோசித்து செயல்படுங்கள்.

- Advertisement -