பொலிவான சருமத்தை பெற ஃபேஸ் பேக்

glowing skin face pack
- Advertisement -

முகம் பொலிவுடன் இருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் சரி, ரோஜா பூ போல் சிவந்த முகத்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்களும் சரி, பலரும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு அழகான பொலிவான முகத்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்களும் சரி இந்த ஒரு ஃபேஸ் பேக்கை முயற்சி செய்தால் போதும். வீட்டில் கிடைக்கக்கூடிய எளிமையான பொருட்களை வைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான பேஸ் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

பொலிவான சருமத்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் பல வழிகளை முயற்சி செய்வார்கள். உடனடி பொலிவை பெறுவதற்காக பல வழிகள் இருக்கின்றன. இயற்கையான முறையில் சரி செயற்கையான முறையில் சரி பல வழிகள் இருக்கின்றன. எந்த முறை நமக்கு சிறப்பான முறை என்பதை நம் உணர்ந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட்டால் கண்டிப்பான முறையில் நம்முடைய முகம் பொலிவை பெறும். அந்த வகையில் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான ஃபேஸ் பேக்கை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த ஃபேஸ் பேக்கிற்கு நமக்கு மூன்றே மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும். பாதி அளவு பீட்ரூட்டை எடுத்து அதை நன்றாக உரசிக் கொள்ளுங்கள். அப்படி உரசிய பீட்ரூட் துருவலை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். மிக்ஸியில் அரைத்து சாறு எடுப்பதை முடிந்த அளவிற்கு தவிர்த்துக் கொள்வது நல்லது. இவ்வாறு எடுத்த சாறு இரண்டு ஸ்பூன் இருக்கும் அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு கடலை மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதோடு ஒரு ஸ்பூன் அளவிற்கு தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது இவை மூன்றையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்படி நாம் கலக்கும் பொழுது இது ஒரு கிரீம் பதத்திற்கு வரும். ஒரு வேளை இதில் இன்னும் அதிக அளவு சாறு இருக்கிறது என்னும் பட்சத்தில் மேற்கொண்டு கடலை மாவையும் தயிரையும் சரிசமமாக கலந்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு ஏர்டைட் கண்டைனரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு முகத்தை சுத்தமாக கழுவி விட்டு இந்த கிரீமை எடுத்து முகத்தில் நன்றாக தடவி 15 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். இது நன்றாக உணர்ந்த பிறகு படுத்து உறங்கச் செல்லலாம்.

- Advertisement -

மறுநாள் காலையில் எழுந்து முகத்தை நன்றாக கழுவ வேண்டும். அவ்வளவுதான். பொதுவாகவே ஒரு பீட்ரூட்டில் ஆன்ட்டி ஏஜிங் ப்ராபர்ட்டிஸ் அதிக அளவில் இருக்கிறது. பீட்ரூட்டை நம்முடைய உதட்டிற்கு நாம் தொடர்ச்சியாக தடவுவதன் மூலம் உதடு சிவப்பான நிறத்தை பெறும் என்பது பலரும் அறிந்த உண்மையே. அப்படிப்பட்ட பீட்ரூட் சாறு நம்முடைய முகத்தில் நாம் தினமும் தடவுவதன் மூலம் நம்முடைய முகவும் செக்கச் சிவந்த ரோஜா பூ போல் மாறிவிடும்.

இதில் இருக்கக்கூடிய கடலை மாவு நம் முகத்தில் இருக்கக்கூடிய தேவையற்ற அழுக்குகளை நீக்குகிறது. தயிர் சிறந்த பீச்சிங் ஏஜெண்டாக செயல்படுகிறது. இந்த ஃபேஸ் பேக்கை நாம் தினமும் நம்முடைய முகத்தில் பயன்படுத்துவதன் மூலம் மங்கு என்று சொல்லக்கூடிய கருத்திட்டுகள் மறைய ஆரம்பிக்கும். கரும்புள்ளிகளும் ஏற்படாது. முகம் ஒருவித ஜொலிப்பை பெறும்.

இதையும் படிக்கலாமே: உடல் நல்ல நிறமாக மாற
மிகவும் எளிமையான அதே சமயம் நம் வீட்டிலேயே கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை பயன்படுத்தி நம்முடைய முகத்தை ஜொலிக்க வைக்கலாம்.

- Advertisement -