சருமம் தங்கம் போல் மின்ன ஃபேஸ் பேக்

shining face pack
- Advertisement -

ஒரு சிலரின் முகத்தை பார்க்கும் பொழுது ஒருவித பொலிவு, மென்மையான உணர்வும் தோன்றும். அவர்களை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசையும் வரும். இன்னும் சில நேரங்களில் பொறாமை கூட ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அந்த அளவிற்கு தங்கம் போல ஜொலிப்பார்கள். அதே போல் நாமும் ஜொலிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் வீட்டில் வளர்க்கக்கூடிய கற்றாழையுடன் சில பொருட்களை கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் போட்டாலே போதும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் முகம் தங்கம் போல மின்ன கற்றாழையுடன் எந்த பொருட்களை சேர்க்க வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

பல மருத்துவ குணங்களைக் கொண்ட கற்றாழையை நாம் உணவாகவும் எடுத்துக் கொள்வோம். அதே சமயத்தில் சரும பாதுகாப்பிற்கும், முடியின் பாதுகாப்பிற்கும் மிகவும் நல்ல பலனை தரக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. முடிக்கு நாம் கற்றாழையை பலவிதங்களில் உபயோகப்படுத்துவோம். அவ்வாறு உபயோகப்படுத்துவதன் மூலம் முடி உதிர்தல் தடுக்கப்படுவதோடு முடி அடர்த்தியாக வளரும் என்பது பலரும் அறிந்ததே.

- Advertisement -

இதே போல் கற்றாழையை நம்முடைய முகத்திற்கு நாம் பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி முகம் மிகவும் அழகான தோற்றத்தை பெறும். அதனால்தான் கற்றாழையை குமரி என்று கூறினார்கள். சரி இப்பொழுது கற்றாழையை பயன்படுத்தி எப்படி முகத்தை மின்னச் செய்வது என்று பார்ப்போம்.

ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில், வீட்டில் வளர்க்கக் கூடிய கற்றாழைச் செடியிலிருந்து ஒரு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும். இவை இரண்டையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் தூளை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

அவ்வளவுதான் இந்த கலவையை நம்முடைய முகம் கழுத்து கை கால்களில் நன்றாக தடவி ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடம் அப்படியே உலர விட்டு விடுங்கள். பிறகு நீங்கள் எப்பொழுதும் போல் குளித்துவிட்டு வரலாம். இவ்வாறு நீங்கள் பயன்படுத்தும் போது குளியலுக்கு அதிகமான கெமிக்கல் நிறைந்த சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

இதை அன்றாடம் செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய பருக்கள் முற்றிலும் நீங்கும். பருக்களால் ஏற்பட்ட வடுக்களும், கரும்புள்ளிகளும் மறைய ஆரம்பிக்கும். முகத்தில் இருக்கக்கூடிய கருமை நீங்கும். மேலும் முகம் மிருதுவாகும். முகத்தின் நிறம் அதிகரிக்கும். இயற்கையிலேயே முகத்திற்கு ஒருவித ஜொலிப்பு ஏற்படும்.

- Advertisement -

காலையில் பயன்படுத்த நேரமில்லாமல் இருப்பவர்கள் இந்த ஃபேஸ் பேக்கை இரவில் படுக்கச் செல்வதற்கு முன் முகத்தில் தடவி விட்டு அப்படியே படுத்து காலையில் எழுந்து முகத்தை கழுவிவிடலாம். இப்படி இரவு நேரத்தில் இந்த ஃபேஸ் பேக்கை உபயோகப்படுத்துவதன் மூலம் இதன் பலன் இன்னும் அதிகமாகவே கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: எண்ணெய் பசை நீங்கி பொலிவான சருமத்தை பெற

மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய அதே சமயம் சுத்தமான ஆரோக்கியமான பொருட்களை பயன்படுத்தி நம்முடைய முகத்தை இயற்கையாகவே தங்கம் போல மின்னச் செய்யலாம்.

- Advertisement -