உங்கள் ஃபேவரைட் பெட் எது? இதுவாக இருந்தால் நீங்கள் எதிர்காலத்தில் இந்த அதிர்ஷ்டத்தை பெறுவீர்களாம்!

pet-animals-images
- Advertisement -

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் மனிதனை மட்டும் அல்லாமல் மற்ற ஜீவராசிகளையும் நேசிப்பவராக இருக்கின்றோம். அனைத்து ஜீவராசிகளையும் மனிதன் ரசிக்கவே இறைவன் படைத்திருக்கிறான். இதில் உங்களுக்கு பிடித்தமான சில பெரும்பாலான வளர்ப்பு பிராணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நீங்கள் அதிகம் விரும்பும் வளர்ப்பு பிராணி எது? என்பதை தேர்ந்தெடுங்கள். உங்களுக்கு பிடித்தமான வளர்ப்பு பிராணி இது என்றால், நீங்கள் உங்களுடைய எதிர்காலத்தில் கண்டிப்பாக இத்தகைய அதிர்ஷ்டங்களை பெறுவீர்கள் என்கிற பொது பலன் உண்டு. நீங்கள் விரும்பும் உங்களுடைய வளர்ப்பு பிராணி உங்களுடைய எதிர்காலத்தை எப்படி அதிர்ஷ்டம் நிறைந்ததாக மாற்றப் போகிறது? என்கிற ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

மீன்:
எல்லோருக்கும் மீன் வளர்க்க ரொம்பவே பிடிக்கும். ஆனால் ஒரு சிலர் மட்டுமே அதன் மீது தீராத பிரியம் கொண்டு பெரிய பெரிய மீன் தொட்டிகளை வாங்கி, அதில் விலை உயர்ந்த மீன்களையும் நீந்த விட்டு அழகு பார்ப்பார்கள். மீனின் மீது இத்தகைய பிரியம் கொண்டவர்கள், அதை உணவாக சாப்பிடுவதை கூட நிறுத்தி விடுகின்றனர். இப்படியான மீன் பிரியர்களுக்கு எதிர்காலத்தில் தங்கள் துணையுடன் செல்ல சண்டைகளைத் தவிர, பெரிதாக எந்த சண்டையையும் போடுவதில்லையாம்.

- Advertisement -

பூனை:
நாயை பிடிப்பவர்களுக்கு பூனையை பிடிக்காது, பூனையை பிடிப்பவர்களுக்கு நாய் பிடிக்காது என்று கூறுவது உண்டு. எது எப்படியோ, பூனை மீது பிரியம் உள்ளவர்கள் ரொம்பவும் சுட்டித்தனத்துடன் இருப்பார்கள். வெள்ளந்தி மனசுக்காரங்கன்னு சொல்லுவாங்களே அது போல இருப்பாங்களாம் பூனை பிரியர்கள். இந்த பூனை பிரியர்கள் எதிர்காலத்தில் மிகப் பெரிய சவால்களை கூட எளிதாக சிரித்துக் கொண்டே சமாளித்து விடுவார்களாம்.

நாய்:
செல்லப் பிராணியின் நாயகனாக இருக்கும் இந்த நாய், நம் நாட்டில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் எல்லோருக்கும் பிடித்த செல்ல பிராணியாக இருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் எல்லாம் நாயை தங்கள் வீட்டில் இருக்கும் ஒரு நபரைப் போலவே நடத்துவது உண்டு. நன்றியுள்ள இந்த ஜீவனை விரும்பி வளர்ப்பவர்களுக்கு, நண்பர்கள் வட்டம் ஏராளம் இருக்கும். இவர்கள் தங்களுடைய எதிர்காலத்தில் தங்களுக்கென வாழும் ஒரு கூட்டத்தையே சேமித்து வைத்திருப்பார்களாம்.

- Advertisement -

அணில்:
அணில் பார்ப்பதற்கு ரொம்பவும் சிறிய ஒரு அழகிய உயிரினமாக இருக்கிறது. ராமன் முதுகில் போட்ட மூன்று கோடுகளுடன் சுற்றித் திரியும் இந்த அணிலுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும் சக்தி உண்டாம். அணிலின் மீது பிரியம் கொண்டு அணிலை வளர்ப்பவர்களுக்கு தன்னம்பிக்கையும், துணிச்சலும் அதிகம் இருக்கும். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை எதிர்த்து அகிம்சை வழியில் போராடுவார்களாம். இவர்களுடைய எதிர்காலத்தில் மனதிற்கு பிடித்த வேலையில் இருப்பார்களாம்.

கிளி:
பச்சை வண்ணக்கிளி மனிதனைப் போலவே பேசும் ஆற்றல் கொண்டது. இதனுடைய இனிய குரல், அழகிய நடை அனைவரையும் கவரும். பாசக்கார கிளிகள் மீது பிரியம் கொண்டவர்கள் எப்போதும் சுயநலமாக இருப்பதில்லையாம். மற்றவர்களுடைய மகிழ்ச்சியை தன்னுடைய சந்தோஷமாக பார்க்கும் இவர்களுக்கு எதிர்காலத்தில் சிறப்பான ஒரு வாழ்க்கை அமையுமாம். அழகிய மனைவி, குடும்பம், குழந்தை என்று மகிழ்ச்சியுடன் இருக்கக் கூடிய யோகம் வாய்க்குமாம். அது மட்டுமல்லாமல் சொர்ண சேர்க்கையும் அதிகம் உண்டாகுமாம்.

- Advertisement -