மாதத்தின் முதல் நாள் செய்ய வேண்டிய பரிகாரம்

guru1
- Advertisement -

கையில் பணம் காசு இல்லாதவர்கள் செல்லாக்காசு தான். அவர்கள் இருந்தும், இல்லாதது போல தான். இதை சொல்வதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் இதுதான் நிதர்சனமான உண்மை. பணம் இருப்பவர்களை தான் இந்த உலகம் மதிக்கும். பணம் இல்லாதவர்களை இந்த உலகம் தூக்கிப் போட்டு மிதிக்கும். உங்க கையில் பணம் காசு தங்கவில்லையா.

நாளை பிப்ரவரி மாதத்தின் தொடக்க நாள் வியாழக்கிழமை அன்று பிறக்கின்றது. ஒரு மாதத்தின் தொடக்க நாளில் நாம் என்ன நல்ல காரியம் செய்கின்றோமோ அதற்குண்டான பலன் அந்த மாதம் முழுவதும் நமக்கு கிடைக்கும். இந்த மாதம் இந்த வழிபாட்டை மேற்கொண்டு பாருங்கள். அடுத்த மாதம் முழுவதும் நிச்சயம் உங்களுக்கு செல்வாக்கான மாதமாகத் தான் இருக்கும்.

- Advertisement -

வருமானத்தில் பிரச்சனை இருக்கலாம், கடன் பிரச்சனை இருக்கலாம், இப்படி பணம் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் இருந்தாலும், அதிலிருந்து விடுபட குருபகவான் உங்களுக்கு நல்ல வழியை காட்டுவார்.

பிப்ரவரி முதல் நாள் செய்ய வேண்டிய பரிகாரம்

இன்று இரவு கொண்டைக்கடலையை தண்ணீரில் போட்டு ஊற வைத்து விடுங்கள். நாளை காலை எழுந்தவுடன் அந்த கொண்டைக்கடலையை எடுத்து மாலை கோர்த்துக் கொள்ளுங்கள். காலை இந்த வழிபாட்டை மேற்கொள்ள முடியாதவர்கள் நாளை மாலை செய்தாலும் தவறு கிடையாது. 27 கொண்டை கடலை, 54 அல்லது 108 கொண்டே கடலை அது உங்களுடைய விருப்பமாக எடுத்துக்கோங்க.

- Advertisement -

உங்கள் கையால் கோர்த்த இந்த கொண்டைக்கடலை மாலையை கொண்டு போய் தட்சிணாமூர்த்திக்கு செலுத்தவும். இந்த மாதம் முழுவதும் எனக்கு நல்ல வழியை காட்டு குரு பகவானே என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மஞ்சள் நிற பூவை வாங்கிக் கொண்டு போய் குரு பகவானுக்கு செலுத்துங்கள்.

உங்களால் முடிந்தால் நாளைக்கு உங்க கையில் காசு இருந்தால், நீங்கள் ஒன்றாம் தேதியே சம்பளம் வாங்குபவர்களாக இருந்தால், அதிலிருந்து ஒரு தொகையை எடுத்து யாராவது ஒருவருக்கு, பசியோடு இருப்பவர்களுக்கு அன்னதானம் செஞ்சிடுங்க. அவ்வளவுதான் இந்த மாதம் முழுவதும் நீங்க நிச்சயம் ராஜாவாக வாழ்வீங்க. வேணும்னா இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை செய்து பாருங்கள். ஆன்மீகத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும் இந்த வழிபாடு நிச்சயம் பலன் தரும்.

- Advertisement -

இது தவிர நாளைய தினம் என்னென்ன விஷயத்தை எல்லாம் செய்யக்கூடாது. உங்களுக்கு சம்பளம் வந்தவுடன் அதை வாரி இறைத்து செலவு செய்யக்கூடாது. சில பேருக்கு கையில் இப்படி சம்பளம் வரும், அப்படியே தாம் தூம் என்று அதற்கு காசு கொடுக்கிறேன், இதற்கு காசு கொடுக்கிறேன், என்று ஜீரோ பேலன்ஸ் ஆகி விடுவார்கள். அப்படி செய்யக்கூடாது.

சம்பளம் வந்த பிறகு உங்க கையில் பணம் காசு கொஞ்ச நேரம் தங்கட்டும். அதைக் கொண்டு வந்து உங்க வீட்டில் மனைவியிடமோ, அம்மா இடமோ, கொஞ்சம் கொடுங்க. வீட்டில் இருக்கும் பெண்களின் மனது சந்தோஷப்பட்டால் உங்கள் வருமானம் பெருகும். அவர்களுடைய தேவைக்கு காசு கொடுங்க. பிறகு அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்யுங்கள். எதுவாக இருந்தாலும் ஒரு நாள் கழித்து செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: பீரோவில் பணம் சேர தாந்த்ரீக பரிகாரம்

வந்த பணத்தை உடனடியாக வாரி இறைக்காதீங்க. ஆடம்பர செலவை குறைக்கவும். கூடுமானவரை மாதத்தின் முதல் நாள் மருத்துவரிடம் செல்ல வேண்டாம். அடுத்தவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டாம். வந்த மகாலட்சுமியை தூக்கி வைத்துக் கொண்டாடுங்கள். மாதத்தின் முதல் நாள் இதை மட்டும் செய்தாலே மாதம் முழுவதும் நீங்கள் சந்தோஷமாக இருக்கலாம் என்ற இந்த தகவலோடு இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -