பிப்ரவரி மாத மூன்றாம் பிறை தரிசனம்

pirai-nila
- Advertisement -

மாதம் தோறும் வரக் கூடிய பிறை தரிசனத்தை பார்ப்பது நமக்கு நன்மை தரும் என்றாலும், நாளை ஞாயிற்றுக்கிழமையோடு பிறை தரிசனமானது சேர்ந்து வந்திருக்கிறது. அப்படி என்ன ஞாயிற்றுக்கிழமை பிறை தரிசனம் பார்த்தால் நல்லது நடந்துவிடும். ஞாயிறு சூரிய பகவானுக்கு உரிய கிழமை.

வேலையில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், அரசாங்க வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள், வேலையில் பிரச்சனையோடு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், நல்ல சம்பாத்தியம் இல்லாதவர்கள் தொழிலில் நொடிந்து போனவர்கள், வெளிநாட்டில் வேலை கிடைக்க முயற்சி செய்பவர்கள், நிறைய தேர்வு எழுதிவிட்டு அரசாங்க வேலையில் ஒரு வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள், எல்லாம் நாளை பிறை தரிசனத்தை பார்த்தால் உங்களுக்கு நல்ல காலம் பிறந்து விடும்.

- Advertisement -

வாழ்க்கையில் எதிர்கொண்டு வரும் கஷ்டங்களுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும். இதுதான் இந்த ஞாயிற்றுக்கிழமை பிறை தரிசனத்துடைய சிறப்பு. சரி நாளைய தினம் மூன்றாம் பிறை தரிசனத்தை எந்த முறையில் செய்தால் முழு பலனை பெற முடியும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த ஒரு தகவலை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

பிப்ரவரி மாதம் மூன்றாம் பிறை தரிசனம்

நாளை மாலை சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு, வெட்டவெளியான இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு மொட்டை மாடியாக இருந்தால் ரொம்ப ரொம்ப சிறப்பு. இப்போது மாலை நேரம் சீக்கிரமே பணி மூட்டம் வந்துவிடுகிறது. மூன்றாம் பிறை தெரிவதில் சில சிரமங்கள் இருக்கும். வாய்ப்பு இருந்தால் பாருங்கள். மாலை 6:15 மணிக்கு மேல் 6:45க்குள் இந்த பிறை நிலவு வானத்தில் தெரிய வாய்ப்புகள் உள்ளது. உங்கள் வீட்டில் மேற்குப் பக்கத்தில் பிறை நிலா உதயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பிறைநிலவை தரிசனம் செய்யும் போது உங்கள் கையில் பச்சரிசி நெல் வைத்துக் கொள்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. யார் வேண்டும் என்றாலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். சந்திரன் உதயமாகும் அந்த சமயத்தில், மொட்டை மாடியில் நின்று கொண்டு அல்லது அமர்ந்து கொண்டோ இரண்டு கைகளை ஏந்தி, கைகளுக்கு நடுவே பச்சரிசி நெல்லை வைத்துக் கொள்ளவும்.

அந்த பச்சரிசி நெல்லுக்குள் 1 ரூபாய் நாணயத்தை வைத்துக் கொள்ளுங்கள். சந்திர பகவானே எனக்கு வாழ்க்கையில் இருக்கும் குழப்பங்கள் எல்லாம் தீர வேண்டும். நல்ல வேலை கிடைக்கணும். கை நிறைய சம்பாதிக்கணும். கடன் தொல்லை குறையனும். குடும்பம் சுபிட்சம் அடைய வேண்டுதலை வைக்கவும். பத்து நிமிடம் சந்திர பகவானிடம் இப்படி மனமுருகி வேண்டுதல் வைத்துக் கொள்ளுங்கள். வேண்டுதலை வைத்துவிட்டு 27 முறை ‘ஓம் சந்திராய நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் ஒரு சின்ன தட்டின் மேல் மண் அகல் விளக்கை வைத்து விளக்கு ஏற்றியும் இந்த வேண்டுதலை வைக்கலாம். ரொம்பவும் காற்று வீசுகிறது. விளக்கு எரியாது என்றால் பரவாயில்லை. தவறு கிடையாது. உள்ளங்கைகளில் பச்சரிசி நெல், ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் வைத்து இந்த பிரார்த்தனையை செய்யுங்கள்.

பச்சரிசி நெல் கிடைக்காதவர்கள் அதற்கு பதிலாக பச்சரிசியை பயன்படுத்தலாம். வேண்டுதலை முடித்துவிட்டு இந்த பச்சரிசி நெல்லை அப்படியே ஒரு வெள்ளை துணியில் வைத்து முடிச்சாக கட்டி பூஜை அறையில் கொண்டு வந்து வைத்து விடுங்கள். ஒரு ரூபாயும் அதிலேயே இருக்கட்டும்.

ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் அந்த நெல் உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கட்டும். மறுநாள் அந்த பச்சரிசி நெல்லை எடுத்துக்கொண்டு போய் காக்கை குருவிகளுக்கு இரையாக போட்டு விடலாம். ஒரு ரூபாய் நாணயத்தை பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு அம்மன் கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள். நாளைய தினம் சந்திர பகவான் தரிசனம் உங்கள் கண்களில் பட்டுவிட்டால் அதிர்ஷ்டம்.

இதையும் படிக்கலாமே: தங்கம் சேர பரிகாரம்

தெரியவில்லை என்றாலும் மேற்கு பார்த்தவாறு நின்று இப்படி ஒரு வேண்டுதலை வைத்தால் நிச்சயம் உங்கள் வேண்டுதல் நிறைவேறும். நாளை சந்திர தரிசனத்தை யாரும் தவற விடாதீங்க. நம் எல்லோர் கண்களுக்கும் இறைவன் காட்சியளிக்க கூடிய காலம் இது. வாய்ப்பு உள்ளவர்கள் இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -