தங்கம் சேர பரிகாரம்

kubera dheepam
- Advertisement -

தங்கம் சேர்க்க வேண்டும் தங்க நகைகளை வாங்கி அணிய வேண்டும் என்று ஆசைப்படாத எவரும் இருக்க முடியாது. அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடாமல் அதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும். இது தான் தங்கம் வாங்க நாம் செய்ய வேண்டிய முதல்படி என்றே சொல்லலாம். தங்கம் வாங்க வேண்டும் என்று நினைத்து விட்டு தங்கம் வீடு தேடி வரும் என்றால் வராது.

நாம் தங்கத்தை சேர்க்க வேண்டுமானால் முதலில் உழைக்க வேண்டும், பணத்தை சேமிக்க வேண்டும் இவற்றுடன் சேர்த்து இறை நம்பிக்கையுடன் சில பரிகாரங்களை செய்யலாம். இதன் மூலம் தங்கமானது ஈர்ப்பு ஏற்பட்டு நம்மிடம் சேரக் கூடிய யோகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். அப்படியான ஒரு பரிகார முறையைத் தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

தங்கம் சேர பரிகாரம்

தங்கம் வாங்க வேண்டும் என்று நாம் எந்த பரிகாரத்தை செய்வதற்கும் முன்பாக செய்ய வேண்டிய சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோம். தங்கம் வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் முதலில் தங்கத்தை போற்றி மதிக்க வேண்டும். தங்கத்தை நினைத்த இடத்தில் கழற்றி வைப்பது கூடாது. குறிப்பாக கழிவறை போன்ற இடங்களில் கழற்றி வைப்பதெல்லாம் மிகவும் தவறான செயலாக கருதப்படுகிறது.

அதே போல தங்க நகை வாங்க வேண்டும் என சேமிக்க தொடங்கினால் அந்தப் பணத்தில் நிச்சயமாக தங்கம் தான் வாங்க வேண்டும். தங்கத்திற்காக சேர்த்த பணத்தில் வேறு பொருட்களை ஏன் மாறாக வெள்ளியை வாங்கினாலும் கூட தங்கம் சேரும் யோகம் போய் விடும் என்று சொல்லப்படுகிறது. அதே போல் பிறருடைய தங்க நகையை இரவல் வாங்குவதும், நம்முடைய தங்க நகையை இரவல் தருவதும் கூடாது என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

இவற்றுடன் சேர்த்து இந்த ஒரு எளிய பரிகாரத்தையும் செய்து வாருங்கள். இதற்கு நாம் பெரிதாக எதையும் செய்ய வேண்டியது கிடையாது. இதற்கு தினமும் ஒரு தீபத்தை நம்முடைய நிலை வாசலில் ஏற்றி வர வேண்டும் அவ்வளவு தான். அதற்கு இரண்டு அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் போட்டு வைத்து விடுங்கள்.

நிலை வாசலுக்கு வெளியே கோலம் போட்டு அதற்கு மேல் இந்த அகல் விளக்கை வைத்து இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். ஏனெனில் இலுப்பை எண்ணெயானது குபேரருக்கு உகந்ததாக கருதப்படுகிறது. தங்கம் நம்மிடம் சேர வேண்டும் எனில் அதை வாங்கக் கூடிய யோகத்தை பெற வேண்டும். அந்த யோகத்தை தருவது பணம் தான். ஒரு வேளை இந்த தீபத்தை நிலை வாசலில் ஏற்ற முடியவில்லை என்றால் குபேரர் படம் இருந்தால் அவருக்கு முன்பாகவும் தீபம் ஏற்றலாம் தவறில்லை.

- Advertisement -

இந்த தீபமானது நமக்கு பணவரவை ஏற்படுத்திக் கொடுப்பதோடு தங்க நகை ஈர்த்து நமக்கு கொடுக்கக் கூடியதாகவும் அமைகிறது. இந்த தீபத்தை தொடர்ந்து 41 நாட்கள் ஏற்ற வேண்டும். இதை ஏற்றும் வேளையில் தங்க நகை வாங்க வேண்டும், தங்கம் உங்களிடம் அதிமாக சேர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கணவரின் வருமானம் அதிகரிக்க மனைவி செய்ய வேண்டிய பரிகாரம்

இந்த தீப பரிகாரமானது தங்க நகை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் தங்க நகை வாங்க நீங்கள் எடுக்கும் முயற்சியுடன் இந்த பரிகாரத்தையும் நம்பிக்கையுடன் செய்தால் நல்ல பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -