வருடக்கணக்கில் முடி வளராமல் இருக்கும் வழுக்கையில் கூட முடி வளர்ச்சியை தூண்டும் 1 ஸ்பூன் வெந்தயம்.

hair16
- Advertisement -

ரொம்ப நாளா எனக்கு இந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டும் முடி வளராமல் இருக்கிறது. அதாவது சில பேருக்கு முன் நெற்றியில் வழுக்கை இருக்கும். சில ஆண்களுக்கு தலையின் நடுப்பகுதியில் வழுக்கை இருக்கும். சுற்றிலும் முடி இருக்கும். இப்படிப்பட்ட நீண்டநாள் முடி வளர்ச்சி இல்லாத வழுக்கையான இடங்களில்கூட முடி வளர்ச்சியைத் தூண்டக் கூடிய ஒரு சுலபமான டிப்ஸை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம் சமையலறையில் இருக்கும் வெந்தயத்திற்கு முடி வளர்ச்சியைத் தூண்டக் கூடிய சக்தி அதிகம் உள்ளது. பெரும்பாலும் இது நம்மில் எல்லோருக்கும் தெரியும்.

அந்த வெந்தயத்துடன் இன்னும் ஒரு பொருளையும் சேர்த்து சூப்பரான சிம்பிளான ஒரு ரெமிடியை தயார் செய்யப் போகின்றோம். முந்தைய நாள் இரவே 1 டேபிள்ஸ்பூன் அளவு வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக ஊறவைத்துக் கொள்ளுங்கள். அடுத்த நாள் காலை அந்த வெந்தயம் தேவைப்படாது. வெறும் வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அந்த தண்ணீரோடு 1 டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணெயை ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். எண்ணெயையும் தண்ணீரையும் கலைப்பது என்பது கொஞ்சம் சிரமமான விஷயம்தான்.

- Advertisement -

இருப்பினும் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வெந்தயத் தண்ணீரை ஊற்றி அதோடு விளக்கெண்ணெயை ஊற்றி நன்றாக குலுக்கி விடுங்கள். அதன் பின்பு இந்த தண்ணீரை உங்களுடைய ஸ்கால்ப்பில் மயிர் கால்களில் படும்படி நன்றாக ஸ்ப்ரே செய்து விட்டு, அடுத்து 10 நிமிடங்கள் மெதுவாக தலையை மசாஜ் செய்ய வேண்டும். அதாவது உங்களுடைய மண்டையில் இந்த தண்ணீர் நன்றாக இருங்கட்டும். 15 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு தலைக்கு குளித்தாலும் சரி, அப்படி இல்லை என்றால் வெறும் தண்ணீரில் உங்களுடைய தலையை அலசி கொண்டாலும் சரி, அது உங்களுடைய விருப்பம்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த தண்ணீரை தலையில் ஸ்ப்ரே செய்து வந்தாலே முடி வளராத இடத்தில், முடி வளர்ச்சியை காண முடியும். ஆனால் இதனுடைய ரிசல்ட் என்பது உங்களுக்கு தெரிய வேண்டும் என்றால் அதற்கு ஐந்து மாதங்கள் எடுக்கும்.

- Advertisement -

இந்த ஸ்பிரேவை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள். (இந்த தண்ணீரை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டால் ஏழு நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.) இடையிடையே உங்களால் முடிந்தால் உங்களுடைய தலைக்கு போஷாக்கை கொடுக்கக்கூடிய ஹேர் பேக்குகளை பயன்படுத்தலாம். கருவேப்பிலை, தேங்காய்ப்பால், முருங்கைக் கீரை, நெல்லிக்காய், வெங்காயம், செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை, இவைகளை வைத்து உங்களால் என்ன பேக் தயார் செய்ய முடியுமோ அந்த பேக்கை தயார் செய்து தலையில் போட்டு வர முடி வளர்ச்சிக்கு இன்னும் கொஞ்சம் போஷாக்கு அதிகமாக கிடைக்கும். (மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களில் வாரத்திற்கு ஒரு பொருட்களை பயன்படுத்தி, மாற்றி மாற்றி ஹேர் பேக்கை போட்டு வர வேண்டும்.)

வாரத்தில் 2 நாட்கள் முருங்கைக் கீரை சாப்பிட வேண்டும். கருவேப்பிலையை நன்றாக காயவைத்து பொடி செய்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். தினமும் ஒரு கைப்பிடி சாதத்தில், ஒரு ஸ்பூன் கருவேப்பிலை பொடி போட்டு பிசைந்து சாப்பிட்டு விடவேண்டும். ஐந்து மாதங்களும் மேல் சொன்ன விஷயங்களை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் சிறு வயதிலேயே தலையில் வழுக்கை விழுந்த இடத்தில் சீக்கிரத்தில் நிறைய குட்டி குட்டி முடி வளர்வதை பார்க்க முடியும். உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -