IND vs AUS ODI : இன்னும் இவ்வளவு ரன்கள் அடித்திருந்தால் நாங்கள் ஜெயித்திருப்போம் – ஆஸி கேப்டன் பின்ச்

Finch-2
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 236 ரன்களை குவித்தது. இதனால் இந்திய அணிக்கு 237 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கினை எதிர்த்து இந்திய அணி ஆடியது.

Toss

இந்திய வீரர்கள் ரோஹித், தவான், கோலி மற்றும் ராயுடு ஆகியவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தடுமாறிய இந்திய அணியை தோனி மற்றும் கேதார் ஜாதவ் ஜோடி சிறப்பாக ஆடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 141 ரன்கள் சேர்த்து போட்டியினை வெற்றிகரமாக முடித்து கொடுத்தனர். 87 பந்துகளில் 81 ரன்கள் குவித்த ஜாதவ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். தோனி சிறப்பாக ஆடி 59 ரன்களை குவித்தார்.

- Advertisement -

போட்டிக்கு பிறகு பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் கூறியதாவது : எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே பந்து வீசினார்கள். ஆனால், தேவயான நேரத்தில் விக்கெட் கிடைக்கவில்லை. மேலும், நாங்கள் 236 ரன்கள் மட்டுமே அடித்ததும் ஆட்டத்தின் தோல்விக்கு காரணம். இன்னும் 30 முதல் 40 ரன்கள் வரை குவித்திருந்தால் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க முடியும் என்று கூறினார்.

Finch

நேற்று தனது 100 ஆவது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய பின்ச் தான் சந்தித்த 3 ஆவது பந்திலேயே கோல்டன் டக் ஆகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

எம்.எஸ். தோனி : ஹெலிகாப்டர் ஷாட் போன்று சிக்ஸ் அடித்து அமர்க்கள படுத்திய தல தோனி – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English Overview : Aaron Finch giving interview after the Match

- Advertisement -