பட்டுன்னு 10 வயசு குறைக்க உங்களுக்கு ஆசையா இருக்கா? அப்ப யோசிக்காமல் 30 நாட்கள் இந்த ஜெல்லை முகத்துக்கு போடுங்க போதும்.

face4
- Advertisement -

நம்முடைய அழகை இளமையாக பார்த்துக் கொள்ள சுலபமான ஒரு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இயற்கையாக வரக்கூடிய முதுமையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் அந்த முதுமையை சிறிது காலம் தள்ளிப் போடலாம். சில பேரை பார்க்கும்போதே நமக்கு தெரியும். 30 வயது தான் இருக்கும். ஆனால் அவர்களுடைய தோற்றம் 40 வயது போல இருக்கும். இதற்கு என்ன காரணம். தோல் சுருங்கி போவது. தேவையற்ற ரிங்கல்ஸ் வருவது. இந்த இரண்டு பிரச்சனைகளை சரி செய்து விட்டாலே இளமை எப்போதும் இருக்கும்.

தோல் சுருக்கத்தை சரி செய்வதற்கு ஆளி விதை போதும். இதை ஆங்கிலத்தில் flex Seed என்று சொல்லுவார்கள். இந்த ஆளி விதையை பயன்படுத்தி ஒரு சின்ன டிப்ஸ். இந்த ஆளி விதை பெரும்பாலும் பெரிய பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோரில் கிடைக்கின்றது. அப்படி இல்லை என்றால் ஆன்லைனில் ஆர்டர் போட்டு வாங்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

ஆளி விதை ஜெல் தயார் செய்வது எப்படி. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, இந்த ஆளி விதையிலிருந்து 2 ஸ்பூன் போட்டு, நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். ஆளி விதை தண்ணீரில் நன்றாக கொதித்து வெந்து வரும்போது கொழ கொழப்பாக மாறும். அப்போது அடுப்பை அணைத்து விடுங்கள். இதை ஒரு மெல்லிசான காட்டன் துணியில் ஊற்றி கொஞ்சம் சிரமப்பட்டு பிழிந்து வடிகட்ட வேண்டும். நமக்கு ஆளி விதை ஜெல் கிடைத்து விடும்.

இந்த ஜெல்லை கண்ணாடி பாட்டிலில் ஊற்றி மூடி போட்டு ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்தால், 15 லிருந்து 20 நாட்கள் கெட்டுப்போகாது. தினமும் இந்த ஆளி விதை ஜல்லை உங்களுடைய முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். கழுத்திலும் அப்ளை செய்து கொள்ள வேண்டும். இது காய காய அப்படியே உங்களுடைய சருமத்தை இழுத்து பிடிக்கும். 30 நிமிடம் கழித்து முகத்தை வெறும் தண்ணீரில் கழுவி விடலாம். தினமும் 30 நாட்கள் இதை தொடர்ந்து செய்து வந்தாலே உங்களுடைய அழகில் நல்ல வித்தியாசம் தெரியும்.

- Advertisement -

30 நாட்கள் மேல் சொன்ன இந்த குறிப்பை பின்பற்றும்போது, வாரத்தில் ஒரு முறை இந்த பேக் போடுங்க. ஒரு சிறிய பவுலை எடுத்துக்கோங்க. அதில் 2 ஸ்பூன் ஆளிவிதை ஜெல், அதோடு அரிசி மாவு தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன், சேர்த்து நன்றாக கலந்தால் ஒரு பேக் உங்களுக்கு கிடைத்திருக்கும். இந்த பேக்கை முகத்தில் கழுத்தில் அப்ளை செய்து விட்டு, 20 நிமிடங்கள் கழித்து முகத்தை லேசாக ஸ்க்ரப் செய்து கழுவி விட வேண்டும். இந்த பேக் உங்கள் சருமத்தில் இருக்கும் டெட் செல்சை நீக்கும். சருமத்தை ஆழமாக சுத்தம் செய்து விடும். முகத்தில் தேவையற்ற அசுத்தம் தங்கி இருந்தால் நம்முடைய முகத்தில் போடும் எந்த பேக்கும் நம்முடைய சருமத்திற்குள் செல்லாது. அதற்காகத்தான் இந்த ஸ்க்ரப்.

எப்போதும் மனக் கவலையோடு இருந்தால் வயதான தோற்றம் சீக்கிரம் வந்துவிடும். நாம் கவலைப்படுவதால் எந்த பிரச்சனையும் சரியாகப் போவது கிடையாது. ஆரோக்கியத்துடன் சேர்ந்து அழகு வேண்டும் என்றால், சத்தான உணவு, இரவு நல்ல தூக்கம் கட்டாயம் தேவை. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. உங்களுடைய அழகு இளமையாக நீண்ட நாட்களுக்கு தங்கும்.

- Advertisement -