வீட்டில் இருக்கும் வறுமை நீங்கி, பண வரவு அதிகரிக்க நில வாசல்படியில் இந்த ஒரு பூ வைத்தாலே போதும்.

vasal-lakshmi
- Advertisement -

பொதுவாகவே, எல்லோரது வீட்டு நில வாசல்படியும் பூஜிக்க பட வேண்டிய ஒரு இடம் தான். மகாலட்சுமியும், குலதெய்வமும், மங்களகரமான தேவதைகளும் வாசம் செய்யும் இந்த நில வாசல்படியில், இன்றளவும் பெண்கள் சில தவறுகளை, செய்து தான் வருகிறார்கள். குறிப்பிட்டு பெண்கள் செய்யும் அந்த தவறுகள் என்னென்ன? நில வாசல்படியை எப்படி வழிபாடு செய்வதன் மூலம் நம் வீட்டில் வறுமை நீங்கி, சண்டை சச்சரவுகள் நீங்கி, செல்வம் அதிகரிக்கும், என்பதைப் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

nail-cutting

நம்முடைய வீடுகளில் நகத்தை கிள்ளி போடக் கூடாது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால், தப்பித்தவறி கூட நாம் வெட்டக் கூடிய நகமானது, நில வாசல்படியில் விழக்கூடாது என்று, சாஸ்திர குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. நில வாசல்படியின் மேல் அமர்ந்தும் நகத்தை வெட்ட கூடாது. நம்மை அறியாமல் நில வாசல்படியில் விழக்கூடிய நகம், நமக்கு அதிகப்படியான சுமையை தேடித்தரும். தரித்திரத்தை உண்டாக்கிவிடும். இதே போல் பெண்கள் தலை சீவும் முடி, எக்காரணத்தைக் கொண்டும் நில வாசல்படியின் மேல் போய் ஒட்டிக் கொள்ளக் கூடாது.

- Advertisement -

சிலரது வீட்டில் எல்லாம் நாம் பார்த்திருப்போம். துடைக்கும் போது வாசக்காலில் முடி போய் ஒட்டிக் கொள்ளும். நில வாசல்படியில் முடி ஒட்டினால் அது பெரிய தோஷத்தை ஏற்படுத்தி விடும். வீட்டை சுத்தம் செய்யும் போது நில வாசல்படியை ஒரு துணி கொண்டு கையால் தான் சுத்தம் செய்ய வேண்டுமே தவிர, மாப் அல்லது துடைப்பத்தால் சுத்தம் செய்யக்கூடாது.

vasal-kathavu

நிறைய பேர் வீடுகளில் வீடு முழுவதும் இருக்கும் குப்பைகளை அப்படியே கூட்டி நில வாசல்படிக்கு கொண்டு வந்து, துடைப்பத்தால் நிலை வாசற் படியில் இருந்து வெளியே தள்ளுவார்கள். அதாவது முறம் கொண்டு வார மாட்டார்கள். துடைப்பத்தாலேயே, அப்படியே வெளிப்பக்கமாக தள்ளி விட்டு, வீட்டிலிருந்து வெளியே தள்ளிய குப்பைகளை ரோடு வரை கூட்டி செல்வார்கள். இது மிகப் பெரிய தவறான பழக்கம். வீட்டில் இருக்கும் குப்பையை, குப்பை முறைத்தால் வாரி தான், வெளியே கொட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தினம் தோறுமே நில வாசல்படியை ஈரத்துணியால் துடைத்து விட்டு, மஞ்சள் குங்குமம் வைத்து, இரு கைகளை கூப்பி கும்பிட்டு, நில வாசல் படியை தொட்டு கண்களில் ஒத்திக் கொண்டு, வழிபடுவது மிகவும் நல்லது. நில வாசல்படியின் இரு பக்கங்களிலும் தாமரைப் பூ இதழ்களை வைப்பது மிக மிக சிறப்பானதாக சொல்லப்பட்டுள்ளது. முழு தாமரையை கூட வைக்க வேண்டாம்.

senthamarai

ஒரே ஒரு தாமரையை வாங்கி உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். தினம்தோறும் அதிலிருந்து இரண்டு இதழ்களை கிள்ளி, நில வாசல்படியின் இரண்டு பக்கத்திலும் வைத்து, வழிபட்டு வந்தாலே போதும். வீட்டில் இருக்கும் அனைத்து பிரச்சனைக்கும் சுலபமான நிரந்தரமான தீர்வு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு மட்டுமல்லாமல் மகாலட்சுமியின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவு நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
நீங்கள் எந்த தேதியில் பிறந்தவர்கள்? உங்கள் நில வாசப்படியில், எதை கட்டித் தொங்க வைத்தால், அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Nilai vasal pooja. Pana varavu athikarikka Tamil. Pana varavu pariharam. Veetil varumai neenga.

- Advertisement -