வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்தால், நீங்கள் செய்த பாவத்தில் நிச்சயமாக பாதி குறைவது உறுதி. போராட்டத்தையே வாழ்க்கையாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் இதை மட்டும் கொஞ்சம் செய்து பாருங்கள்.

amman1
- Advertisement -

நாம் மனதார அறிந்து அடுத்தவர்களுக்கு பாவம் செய்வது கிடையாது. தெரிந்தோ தெரியாமலோ எந்த ஜென்மத்தில் செய்த வினையோ நம்மை பின்தொடர்ந்து வருகின்றது. கருவறையில் நாம் பிறக்கின்றோம் என்றால், கர்மவினை தான் முதல் காரணம். கர்மாக்களை குறைக்க ஜோதிட ரீதியாக சாஸ்திரத்தில் நமக்கு நிறைய பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பரிகாரம் மிக மிக சுலபமான பரிகாரம். அதேசமயம் அதி சக்தி வாய்ந்த பரிகாரமாகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த பரிகாரத்தை செய்தால் நீங்கள் செய்த பாவத்தில் பாதி குறைவது உறுதிங்க. அவ்வளவு தான். நம்பிக்கையோடு கண்ணை மூடிக்கொண்டு இதை யார் வேண்டுமென்றாலும் செய்யது கைமேல் பலனை பெறலாம்.

வீட்டில் திருமணத்தடை, குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது, நல்ல வேலை கிடைக்காமல் இருப்பது, கடன் தொல்லை, வருமானம் இல்லை, எந்த முயற்சியை எடுத்தாலும் அதில் தடை. வீட்டில் இருப்பவர்களுக்கு தீராத நோய் பிரச்சினை, வாழ்க்கையில் எந்தப் பக்கம் போனாலும் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு விமோசனம் கிடைக்க வேண்டுமென்றால் அவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று குறிப்பாக ராகு கால நேரத்தில் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய வேண்டும். மூன்று சிறு வயது உள்ள பெண் குழந்தைகளாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வயதுக்கு வராத பெண் குழந்தைகள். 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் ஆக இருக்கட்டும். உங்களுக்கு தெரிந்த அக்கம்பக்கம் வீட்டில் இருக்கக் கூடிய குழந்தைகளாக இருந்தாலும் சரிதான். ஏழை குழந்தைகளாக இருந்தால் இன்னும் சிறப்பு.

முதலில் வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்துகொண்டு இந்த பரிகாரத்தை தொடங்கவேண்டும். வீட்டிற்கு அழைத்த மூன்று பெண் குழந்தைகளையும் ஒரு விரிப்பு, விரித்து கிழக்கு பார்த்தவாறு அமரச் செய்து விடுங்கள். அந்த மூன்று பெண் குழந்தைகளுக்கும் உங்கள் வீட்டிலேயே பாதபூஜை செய்து அவர்களுடைய நெற்றியில் சந்தனம் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும்.

- Advertisement -

அந்தக் குழந்தைகள் மனது சந்தோஷப்படும் படி அவர்களுக்கு பிடித்த புத்தாடை, வளையல், மணி, பொட்டு, கம்மல், இப்படிப்பட்ட பொருட்களை ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இதோடு சேர்த்து அவர்கள் சாப்பிடுவதற்கு தேவையான பிஸ்கட் சாக்லேட் பழவகைகள் போன்றவற்றையும் அதே தட்டில் வைத்து, வெற்றிலை, பாக்கு, பூ, பழம் சேர்ந்த தாம்புலத்தையும் வைத்து, இந்தத் தாம்பூலத் தட்டை அந்த குழந்தைக்கு தானமாக கொடுக்க வேண்டும்.

மூன்று குழந்தைகளுக்குமே மூன்று தட்டில் தனித்தனியாக இப்படி தயார் செய்து அந்த குழந்தைகளுக்கு இந்த தானத்தை கொடுங்கள். பாத பூஜை கட்டாயம் செய்ய வேண்டும். வீட்டினுடைய குடும்பத் தலைவன் தலைவி சேர்ந்து அந்த சின்ன குழந்தைக்கு பாத பூஜை செய்து முழு திருப்தியோடு இந்த தானத்தை கொடுக்கும் போது நீங்கள் செய்த கர்ம வினைகள் குறைக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் செய்து முடித்து இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரே ஒரு முறைதான். உங்களால் முடிந்தால் அந்த குழந்தைகளுக்கு பட்டுப்பாவாடை சட்டை எடுத்துக் கொடுப்பது என்பது மேலும் சிறப்பு.  அந்த குழந்தைகள் படிப்பதற்கு தேவையான நோட்டுப் புத்தகங்களைக் கூட வாங்கிக் கொடுக்கலாம். இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள். உங்கள் குடும்பத்தில் ஏற்படக்கூடிய பல பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு கூட சுலபமாக தீர்வு காண முடியும்.

- Advertisement -