செல்வம் நிலைக்க வெள்ளிக்கிழமை பரிகாரம்

mahalakshmi five rupees coin cash
- Advertisement -

ஒரு மனிதன் செல்வ வளத்துடனும் சீரும் சிறப்புடனும் பிறர் போற்ற ஓஹோவென்று வாழ வேண்டும் எனில் அதற்கு மகாலட்சுமி தாயாரின் அருள் கடாட்சமும் சுக்கிரன் பார்வையும் நிச்சயமாக வேண்டும். இத்தகைம செல்வ வளத்தை அருள்வதில் முதன்மையானவர் தாயார் என்றால், சமுதாயத்தில் அந்தஸ்து கௌரவம் கம்பீரம் அனைத்தையும் வழங்குவதில் சுக்கிரன் முதன்மையானவர்.

இந்த இருவரையும் ஒருசேர வணங்கி நம்முடைய செல்வ வளத்துடன் நம்முடைய வாழ்க்கையும் பல மடங்கு உயர்த்திக் கொள்ள செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

செல்வம் பெருக சுக்கிர வசியம்

இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்று தான் துவங்க வேண்டும். வெள்ளிக்கிழமையில் காலை 8 லிருந்து 9, மாலை 7 லிருந்து 8 இந்த நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் இந்த வழிபாட்டை செய்யலாம். இதை மகாலட்சுமி தாயாரின் ஆலயத்தில் தான் செய்ய வேண்டும்.

மகாலட்சுமி தாயாரின் ஆலயத்திற்கு கொஞ்சம் கல்கண்டு, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், ஊதுபத்தி, மல்லிகை பூ இத்துடன் 5 ரூபாய் நாணயம் ஆறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நாணயத்தை மட்டும் வீட்டில் இருந்து கொண்டு செல்லும் முன் நன்றாக சுத்தம் செய்த பிறகு ஆலயத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.

- Advertisement -

இப்போது ஆலயத்தில் தாயாருக்கு மல்லிகை மலரை சூட்டி விட்டு கற்கண்டை நெய்வேத்தியமாக படைத்து வெற்றிலை, பாக்கு, பூ, பழம் போன்றவற்றை வைத்து ஊதுபத்தி காட்டி வழிபாடு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு தாயாரின் அமர்ந்து இந்த ஆறு ஐந்து ரூபாய் நாணயத்தையும் கையில் வைத்துக் கொண்டு முதலில் ஓம் மகாலட்சுமி தாயே நமக என்ற நாமத்தை 108 முறை சொல்லுங்கள்.

அதன் பிறகு ஓம் இந்திராணி நமக என்ற நாமத்தை 108 முறை சொல்லுங்கள். இதை சொல்லி முடித்த பிறகு மறுபடியும் தாயாரிடம் சென்று நீங்கள் கையில் வைத்து வணங்கிய நாணயத்தை அவரின் பாதத்தில் வைத்து வணங்கிய பிறகு அதை வீட்டிற்கு கொண்டு வந்து விடுங்கள். வீட்டிற்கு வந்ததும் இந்த நாணயத்தை கையில் வைத்துக் கொண்டு மீண்டும் ஓம் இந்திராணி நமக என்ற நாமத்தை 108 முறை சொல்லுங்கள்.

- Advertisement -

பிறகு இந்த நாணயத்தை வெள்ளை நிற பட்டு துணியில் வைத்து பூஜை அறையில் அப்படியே வைத்து விடுங்கள். இந்த பூஜை செய்த நாளில் இருந்து 20 நாட்கள் தினமும் காலையில் இந்த நாணயத்தை கையில் வைத்து ஓம் இந்திராணி நமக என்ற நாமத்தை 108 முறை சொல்ல வேண்டும். அதன் பிறகு இந்த நாணயத்தை பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

21 வது நாள் இந்த நாணயத்துடன் 21 பச்சரிசியும் வைத்து மறுபடியும் இந்திராணி நாமத்தை சொல்லிய பிறகு உங்கள் வீட்டின் வடகிழக்கு பகுதியில் நாணயத்தை புதைத்து விடுங்கள். வீட்டில் புதைக்க இடமில்லாதவர்கள் ஒரு பாட்டில் மணல் நிரப்பி அதில் நாணயத்தை புதைத்து வைக்கலாம்.

புதைக்கும் போது ஒரே ஒரு நாணயத்தை மட்டும் புதைத்து விட்டு மீதம் இருக்கும் ஐந்து நாணயத்தை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் இந்த நாணயத்தை பகிர்ந்து தரலாம். பெண்கள் இந்த பரிகாரத்தை செய்யும் போது தங்களுக்கான மாதவிடாய் காலம் முடிந்த பிறகு செய்யுங்கள். ஏனெனில் 21 நாட்கள் கட்டாயம் தொடர்ந்து செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: அடகு நகையை மீட்க பரிகாரம்

இந்த நாணயம் இருக்கும் இடத்தில் பண வரவு அதிகரிக்கும். அதே போல் இந்த நாணயத்தை புதைத்து வைத்திருப்பதால் வீட்டிலும் பண வரவு அதிகரிக்கும். ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்து இந்த நாணயத்தை உங்களுடன் வைத்துக் கொண்டால் போதும். காலத்திற்கும் பல பிரச்சனை வரவே வராது. சுக்கிரன், மகாலட்சுமி தாயார், இந்திராணி தாயார் இவர்களின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -