பணம் தரும் கசகசா பரிகாரம்

vilakku1
- Advertisement -

சில பேர், எந்த வேலையை தொட்டாலும் அதிலிருந்து வருமானம் கொட்ட தொடங்கி விடும். சும்மா இதை முயற்சி செய்துதான் பார்க்கலாம் என்று ஒரு லட்ச ரூபாயை முதலீடாக போடுவார்கள். அந்த முதலீட்டிலிருந்து பல லட்ச ரூபாயை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைத்துவிடும். இப்படியே சீக்கிரத்தில் பணக்காரர் ஆகிவிடுவார்கள்.

அதாவது எதைத் தொட்டாலும் பணம், எப்படி தொட்டாலும் பணம், என்று அதிர்ஷ்ட காற்று ஒரு பக்கம் தொடர்ந்து வீச தொடங்கிவிடும். இப்படி எதைத் தொட்டாலும் அது பணமாக மாறும் போது நிச்சயமாக ஒரு மனிதனுக்கு சந்தோஷம் வராமல் இருக்குமா என்ன. உங்களுக்கும் இதே போல கொச கொசன்னு பண மழை பொழிய வேண்டுமா. நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாக செய்ய வேண்டிய தாந்திரீகம் சார்ந்த ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பணம் தரும் கசகசா பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் கசகசா. வாசம் நிறைந்த, வசீகரத்தன்மை கொண்ட பொருள் இது. பெரும்பாலும் நாம் எல்லோர் வீட்டு சமையல் அறையிலும் இந்த பொருள் இருக்கும். இதை வைத்துதான் இன்று பரிகாரத்தை நாம் செய்யப் போகின்றோம். ஒரு மண் அகல் விளக்கு எடுத்துக்கோங்க. அதில் நல்லெண்ணெய் ஊற்றிவிட்டு, 1/4 ஸ்பூன் கசகசாவை அந்த எண்ணெயில் தூவி விடுங்கள். பிறகு பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்றி வையுங்கள்.

இந்த விளக்கை பூஜை அறையில் தான் ஏற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. பூஜை அறைக்கு வெளி பக்கத்தில் எந்த இடத்தில் உங்களுக்கு சௌகரியம் இருந்தாலும், அந்த இடத்தில் இந்த விளக்கை ஏற்றி வைக்கலாம். தினமும் ஒரு மணி நேரம் இந்த விளக்கு உங்கள் வீட்டில் எறிந்தால் பண வசியம் ஏற்படும். எந்த விஷயத்தில் நீங்கள் முதலீடு செய்தாலும் நீங்கள் சக்சஸ் ஆவிங்க.

- Advertisement -

வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் வேலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, எதிர்பாராத சம்பள உயர்வு, பதவி உயர்வு, வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. பணத்தை எண்ண முடியாத அளவுக்கு வருமானமாக பெற வேண்டும் என்றால் கசகசா விளக்கு வீட்டில் ஏற்ற வேண்டும்.

இப்படி சொன்னா யாருக்குத்தான் நம்பிக்கை வரும். நிச்சயம் வராது தான். தொடர்ந்து 48 நாள் ஒரு வீட்டில் இந்த விளக்கு ஏற்றப்பட்டால், அந்த வீட்டில் செல்வ மழை பொழிவது நிச்சயம். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. உங்களுக்கு கடன் தொல்லை இருக்கிறது, செய்யும் தொழிலில் நஷ்டம் இருக்கிறது, வாழ்க்கையில் முன்னேற வழி தெரியாமல் திணறிக் கொண்டு வருகிறீர்கள் எனும் போது இந்த விளக்கை வீட்டில் ஏற்ற தொடங்குங்கள்.

- Advertisement -

ஏற்றத் தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே, எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க யோகமான நேரம் உங்கள் வீட்டு வாசக்கதவை நிச்சயம் தட்டும். தினமும் ஒரே அகலில் விளக்கு போடலாம். ஆனால் பழைய கசகசாவை எல்லாம் துடைத்து எடுத்துவிட்டு புதுசாக எண்ணெய் ஊற்றி, புதுசாக கசகசா போட்டு தினமும் புதுசாகத் திரியை மாற்றி தான் இந்த விளக்கை ஏற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ஒட்டுமொத்த கண் திருஷ்டியையும் தவிடுபொடியாக்கும், தவிடு பரிகாரம்

இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு மனம் உருக குல தெய்வத்திடம் பிரார்த்தனை வையுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலோடு ஆன்மீகம் சொல்லும் இந்த தாந்திரீக பரிகாரத்தை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -