ஒட்டுமொத்த கண் திருஷ்டியையும் தவிடுபொடியாக்கும், தவிடு பரிகாரம்

amman7
- Advertisement -

வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்டி அடிக்க இன்று தவிடை வைத்து செய்யக்கூடிய ஒரு தாந்திரீகம் சார்ந்த பரிகாரத்தை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்கள் வீட்டில் கண் திருஷ்டியால் பாதிப்புகள் இருந்தாலும், இந்த பரிகாரத்தை செய்யலாம். கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு கெட்ட சக்தியை ஆதிக்கம் உங்கள் குடும்பத்தை சின்னாபின்னம் ஆக்கிக் கொண்டிருக்கிறது, அதிலிருந்து தப்பிக்கவும் இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

எதிர்மறை ஆற்றலை தவிடு பொடியாக்கும் தவிடு பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு மிக மிக முக்கியமாக தேவைப்படக்கூடிய பொருள் தவிடு. இது நாட்டு மருந்து கடை, மளிகை கடைகளில் கிடைக்கும். அந்த கதவிடு வாங்கிக்கோங்க. ஒரு கிலோ அளவு கேட்டால் கிடைக்கும். விலையும் அவ்வளவு ஜாஸ்தியாக இருக்காது. ஒரு சிவப்பு நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் 1/4 கிலோ அளவாவது தவிடை கொட்டி, 3 வர மிளகாய், 3 மிளகு, வைத்து இதை முடிச்சாக கட்டிக் கொள்ள வேண்டும். இந்த முடிச்சை உங்களுடைய வீட்டின் மத்திய பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் கட்டி தொங்க விட்டு விடுங்கள். அதாவது உங்க வீட்டின் நடுப்பகுதி ஹால் இருக்கும் அல்லவா. அந்த இடத்தில் வச்சிடணும்.

இத வச்சுட்டு வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஒரு ஒரு மணி நேரத்திற்கு ஏதாவது வெளியிடங்களுக்கு செல்லுங்கள். கோவிலுக்கு சென்றால் கூட தவறு கிடையாது. வீட்டிற்குள் யாரும் இருக்கக்கூடாது வீட்டை வெளி பக்கம் பூட்டி விட்டு செல்லுங்கள். வீடு திரும்பிய பிறகு இந்த முடிச்சை வீட்டில் இருக்கும் யாராவது ஒருவர் அவிழ்த்து அப்படியே வீட்டுக்கு ஒதுக்குப்புறமாக, கொஞ்சம் தூரமாக கொண்டு போய் இதன் மேலே ஒரு கற்பூரம் வைத்து பொசுக்கி விட வேண்டும்.

- Advertisement -

இந்த துணிக்கு உள்ளே இருக்கும் பொருட்கள் எல்லாம் நெருப்பில் எரிந்து சாம்பலாக மாற வேண்டும். இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை செய்வது சிறப்பான பலனைத் தரும். ஞாயிற்றுக்கிழமை எப்பொழுது இந்த பரிகாரத்தை செய்யவது. மதிய நேரத்திலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். காலையிலும் இதை செய்யலாம் தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: கணவரை சொல் பேச்சு கேட்க வைக்க பரிகாரம்

ஆனால் இந்த முடிச்சை கட்டி வீட்டின் மத்திய பகுதியில் வைக்கும் போது மட்டும் வீட்டில் யாரும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை செய்து முடித்த பிறகு உங்களுடைய வீட்டில் இருக்கும் பிரச்சினைக்கு நிச்சயம் நல்லதொரு மாற்றம் தெரியும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -