பொலிவான சருமத்தை பெற ஃபேஸ் பேக்

glowing skin
- Advertisement -

ஒருவருடைய முகத்தை பார்த்த உடனேயே திரும்பவும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும். அப்படி இருக்கும் முகத்தை தான் பொலிவான முகம் என்றும் அழகான முகம் என்றும் நாம் கூறுகிறோம். இப்படிப்பட்ட அழகான பொலிவான முகத்தை பெற வேண்டும் என்றுதான் அனைவரும் ஆசைப்படுகிறார்கள். ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அவர்களின் சருமம் எப்பேர்ப்பட்ட சருமமாக இருந்தாலும் சரி இந்த ஒரு ஃபேஸ் பேக் போதும் அவர்களுடைய அழகான முகத்தை பொலிவாக வைத்திருக்க உதவும். அந்த ஃபேஸ் பேக்கை எப்படி தயார் செய்வது என்று இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்ப்போம்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே ஃபேஸ் பேக்கை உபயோகப்படுத்த முடியாது. ஒவ்வொருவருக்கும் வேறு வேறு ஃபேஸ் பேக்கை தான் உபயோகப்படுத்த வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள். இது முற்றிலும் தவறான ஒரு எண்ணம். பெண்கள் உபயோகப்படுத்தும் ஃபேஸ் பேக்கில் மஞ்சள் இருந்தால் அதை மட்டும் தவிர்த்து விட்டு ஆண்களும் உபயோகப்படுத்தலாம்.

- Advertisement -

இதில் குறிப்பிடத்தக்கதாக நாம் நினைக்கக் கூடியது ஒவ்வொருவருடைய சருமத்திற்கு ஏற்றவாறு ஃபேஸ் பேக்கை நாம் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகும் ஃபேஸ் பேக் ஆனது அனைத்து விதமான சருமத்திற்கும் மிகவும் உதவக்கூடிய ஒன்றாக திகழ்கிறது.

இந்த ஃபேஸ் பேக்கை நாம் தயார் செய்வதற்கு முதலில் ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும். ஆண்களாக இருந்தால் சந்தனத்தை சேர்த்துக் கொள்ளலாம். அதனுடன் ஒரு ஸ்பூன் கடலை மாவை சேர்க்க வேண்டும். இவை இரண்டையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் சுத்தமான நெய்யாக ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இவை அனைத்தும் நன்றாக கலந்த பிறகு இதை ஒரு பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வருவதற்கு பன்னீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். இப்படி இது ஒரு பேஸ்ட் ஆக மாறிய பிறகு இதை அப்படியே முகத்தில் தடவி ஒரு நிமிடம் நன்றாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும். பிறகு அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்றாக கழுவ வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் முகம் இயற்கையான பொலிவைப் பெறும். இதில் இருக்கக்கூடிய அனைத்து பொருட்களும் முகத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகளை தருவதோடு மட்டுமல்லாமல் இயற்கையிலேயே முகத்தை அழகாக மிளிரச் செய்யக்கூடிய அற்புத ஆற்றல் மிக்கதாக திகழ்கிறது.

இதையும் படிக்கலாமே: புதினா அழகு குறிப்பு

வீட்டில் இருக்கக்கூடிய இந்த பொருட்களை வைத்தே நம்முடைய முகத்தை அழகாக பராமரிக்க முடியும் என்னும் பட்சத்தில் பியூட்டி பார்லருக்கு செலவு செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

- Advertisement -