வீட்டில் நல்ல வைப்ரேஷன் கிடைக்கவும், உங்கள் பொருளாதாரம் உயரவும் 1 டம்ளர் தண்ணீர் போதுமே!

kuberan-water
- Advertisement -

வீட்டிற்குள் சென்றதும் நல்ல ஒரு வைப்ரேஷன் கிடைக்க வேண்டும். அப்போது தான் நாம் எவ்வளவுதான் டென்ஷனுடன் பல வேலைகளுக்கு மத்தியில் வந்திருந்தாலும், ஒரு ரிலாக்சேஷன் கிடைக்கும். இதனால் நம்முடைய சிந்தனைகள் தெளிவு பெறுகிறது, ஆனால் நீங்க வீட்டிற்குள் சென்றதும் அப்படி நடக்கிறதா? வீட்டில் நல்ல வைப்ரேஷன் உண்டாகவும், பொருளாதாரம் மடமடவென உயரவும் ஒரு டம்ளர் தண்ணீர் இருந்தால் போதும்! அதை நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதைத்தான் இந்த ஆன்மீக குறிப்பு தகவல்களின் மூலம் அறிய இருக்கிறோம்.

இந்த பிரபஞ்சம் முழுவதும் நேர்மறை, எதிர்மறை ஆற்றல்கள் கலந்து கிடக்கின்றன. நல்லது என்று ஒன்று இருந்தால், கெட்டது ஒன்று இருக்கிறது. முழுமையாக எவரும் நல்லவர் கிடையாது, முழுமையாக எவரும் கெட்டவரும் கிடையாது. நமக்குள்ளேயே இரு வேறு முகங்கள் காணப்படுகின்றன. அப்படித்தான் நம் வீட்டில் நுழையும் பொழுதும் நல்ல அதிர்வலைகள், கெட்ட அதிர்வலைகள் இருக்கிறது. இதில் எதை நாம் உணர்கிறோமோ அதே போல நம் வாழ்க்கையும் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது சூட்சமமான உண்மையாகும்.

- Advertisement -

சிலருடைய வீட்டிற்குள் சென்றாலே தெய்வீக மனம் கமலும் வண்ணம் வீட்டை வைத்திருப்பார்கள். அந்த வீடுகளில் எல்லாம் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அது வந்த வழியே சென்று கொண்டிருக்கும். எல்லாருக்குமே பிரச்சனைகள் வரத்தான் செய்யும் ஆனால் அது நிரந்தரமாக கால் மேல் கால் போட்டு உட்காரும் அளவிற்கு நாம் நடந்து கொள்ளக் கூடாது. இதற்கு நம் வீட்டில் நல்ல வைப்ரேஷன்கள் அதிகரிக்க வேண்டும்.

நல்ல வைப்ரேஷன்கள் அதிகரிக்க வீட்டின் வடகிழக்கு மூலையில் நறுமணம் மிக்கதாக, தெய்வீக சக்தியை அதிகரிக்க கூடியதாக ஒரு பொருளை வைக்க வேண்டும். அதுதான் ஒரு டம்ளர் தண்ணீர் ஆகும். ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ரெண்டு சிட்டிகை அளவிற்கு பச்சை கற்பூரத்தை நொறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பச்சைக் கற்பூரம் பணத்தை ஈர்க்கக்கூடிய ஒரு அற்புதமான பொருளாக ஆன்மீகம் குறிப்பிடுகிறது. மேலும் இது சாதாரண கற்பூரம் போல் அல்லாமல் நல்ல ஒரு வாசத்தை கொடுக்கக் கூடியது, தெய்வங்களை தன் வசம் ஈர்க்கக் கூடியது. நாட்டு மருந்து கடைகளில் குறைந்த விலைகளிலேயே கிடைக்கும்.

இதனுடன் கால் ஸ்பூன் அளவிற்கு கல் உப்பு போட்டு எதுவும் செய்யாமல் அப்படியே கொண்டு போய் டம்ளரை வடகிழக்கு மூலையில் வைத்து விடுங்கள். வாரம் ஒரு முறை வியாழன் கிழமையில் இந்த கண்ணாடி டம்ளரில் இருக்கக்கூடிய தண்ணீரை மண்ணில் ஊற்றிவிட்டு புதிதாக தண்ணீர் ஊற்றி இதே போல செய்து வைக்க வேண்டும்.

- Advertisement -

இதன் நறுமணம் வீடு முழுவதும் நல்ல அதிர்வலைகளை உண்டு பண்ண கூடிய ஒரு அற்புதமான விஷயமாக இருக்கிறது. வடகிழக்கு மூலை குபேரனுக்கு உகந்த மூலை ஆகும். மேலும் செல்வத்தை அதிகரிக்க செய்யக்கூடிய மூலையும் இதுதான்! எனவே இந்த மூலையில் நீங்கள் இப்படி செய்து வைப்பதால் நாம் வீட்டிற்குள் நுழைந்ததும் நல்ல வைப்ரேஷன் கிடைக்கிறது. இதனால் நம்முடைய சிந்தனைகள் ஒருமுகபடுகிறது.

இதையும் படிக்கலாமே:
வியாபாரம் பெருகி சின்னதாக தொழில் நடத்துபவர்களை கூட பெரிய தொழில் அதிபராக மாற்றக் கூடிய சக்தி இந்த ஒரு பொருளுக்கு உண்டு.

நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும்? இருக்கின்ற பிரச்சினைகளை எப்படி சமாளிக்க வேண்டும்? என்கிற தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுக்கக் கூடிய தெய்வீக ஆற்றல் நிறைந்த இந்த ஒரு எளிய பரிகாரத்தை நீங்களும் செய்து பாருங்கள். உங்களுடைய பொருளாதாரமும் படிப்படியாக உயரத்துவங்கும். எப்பேர்பட்ட தீய சக்திகள் வீட்டிலிருந்தாலும் அது ஓடிவிடும்.

- Advertisement -