தீராத குடும்ப கஷ்டத்திற்கு பரிகாரம் செய்யும் போது, இந்த ஒரு பழத்தை தவறாமல் வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த ஒரு பழத்தை தானம் செய்தால் 4 மடங்கு பலன் அதிகமாக கிடைக்கும்.

amman1
- Advertisement -

நமக்கு ஒரு பொருள் சுலபமாகவோ, மலிவாகவோ கிடைக்கிறது என்றால் அந்த பொருளின் அருமை எல்லாம் நமக்கு சுத்தமாக தெரியாது. அந்த வரிசையில் மலிவாக நமக்கு கிடைக்கக்கூடிய ஒரு பழத்தைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சில பேருக்கு இதில் நம்பிக்கை இருக்கும். சில பேருக்கு இதில் நம்பிக்கை இல்லாமலும் இருக்கும். ஆனால் ஒரு முறை உங்கள் குடும்ப கஷ்டம் தீருவதற்கு இந்த சின்ன பரிகாரத்தையும் செய்து பாருங்கள். நீங்கள் நம்ப முடியாத அளவுக்கு பலன் பல மடங்கு உங்கள் கையை வந்து சேரும்.

இன்னைக்கு நாம எந்த பழத்தை பத்தி தெரிஞ்சுக்க போறோம் தெரியுமா? கொய்யாப்பழம். இந்த பழத்தை கொய்யவே கூடாது. அதாவது பறிக்கவே கூடாது. மரத்திலிருந்து தானாக அதுவே கீழே விழும் அல்லவா. அந்த பழத்தை எடுத்து இந்த பரிகாரத்தை செய்தால் மேலும் மேலும் சிறப்பு. உங்களுக்கு அப்படிப்பட்ட பழம் கிடைக்கவில்லை என்றால் கடையில் இருந்து காசு கொடுத்து கூட இந்த பழத்தை வாங்கிக் கொண்டு போய் பரிகாரம் செய்யலாம். தவறு கிடையாது.

- Advertisement -

சில வீடுகளில் கொய்யா மரம் இருக்கும். அப்படிப்பட்ட வீடுகளில் இருப்பவர்கள் உங்கள் கையால் பறிக்காத கீழே விழுந்த கொய்யா பழங்களை எடுத்து கொண்டு போய் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள். ஏதோ ஒரு வேண்டுதல் வைத்திருக்கிறீர்கள். அல்லது குடும்ப நன்மைக்காக பரிகாரம் பூஜை செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கோவிலுக்கு வெற்றிலை பாக்கு பூ, வாழைப் பழம், வஸ்திரம் எல்லாம் கொண்டு போய் சுவாமிக்கு மாலை சாத்தி பூஜை புனஸ்காரங்கள் செய்யப் போகிறீர்கள் என்றால் அந்த வழிபாட்டோடு இந்த கொய்யாப்பழத்தையும் கொண்டு போங்கள்.

எண்ணிக்கை என்பது உங்கள் கணக்கு தான். சுவாமியின் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்த அந்த கொய்யாப்பழத்தை மீண்டும் பெற்று நீங்கள் மட்டும் சாப்பிடக்கூடாது. கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு உங்கள் கையால் கொய்யாப்பழத்தை தானமாக கொடுக்க வேண்டும். இந்த கொய்யாப்பழ தானம் அவ்வளவு சிறப்பு மிக்க தானமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

எதுவுமே இல்லை என்றால் பத்து கொய்யா பழங்களை வாங்கி உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு எடுத்துச் சென்று அந்த இறைவனின் பாதங்களில் வைத்து உங்கள் பெயரை சொல்லி அர்ச்சனை செய்து அந்த கொய்யாப்பழத்தை மீண்டும் பெற்று, கோவிலுக்கு வரக்கூடிய குழந்தைகளுக்கு பக்தர்களுக்கு அந்த பழத்தை உங்கள் கையால் தானமாக கொடுங்கள். உங்கள் கஷ்டம் அப்படியே பாதியாக குறைந்து விடும் என்றால் பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: ஓயாத குடும்ப பிரச்சனைக்கு கூட ஓய்வு கிடைக்கும். பிரச்சினையை ஒரு வரியில் இப்படி எழுதி, இப்படி அழித்து விடுங்கள்.

மிகக் குறைந்த செலவில் நாம் வாங்கக்கூடிய இந்த பழத்தில் ஆரோக்கியம் கூட மிக மிக அதிகம். மற்ற பழங்களில் இல்லாத ஆரோக்கியம் இந்த பழத்தில் உள்ளது. பழங்களிலேயே சிறந்த பழம் என்றால் அது கொய்யா பழம்தான். ஆனால் அதை நாம் மதிக்கின்றோமா. காரணம் மற்ற பழங்களை விட அது மலிவாக கிடைக்கிறது. ஒருவேளை கொய்யா பழத்தின் விலையும், ஆப்பிள் பழத்தின் விலை போல அதிகமாக விற்கப்பட்டால் கொய்யா பழத்தையும் எல்லோரும் வாங்கி சாப்பிடுவோமோ என்னமோ. சரி இனி கொய்யாப்பழத்தை அலச்சியமா நினைக்காதீங்க. மேல் சொன்ன குறிப்புகளில் நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -