ஓயாத குடும்ப பிரச்சனைக்கு கூட ஓய்வு கிடைக்கும். பிரச்சினையை ஒரு வரியில் இப்படி எழுதி, இப்படி அழித்து விடுங்கள்.

cash-sadman
- Advertisement -

நம் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை எல்லாம், பென்சில் கிறுக்கலை அழிப்பது போல ஒரு ரப்பரை வைத்து அழித்து விட்டால் எப்படி இருக்கும். அந்த அளவுக்கு சுலபமான ஒரு பரிகாரம் தான் இது. இவ்வளவு சுலபமான பரிகாரத்தில் பலன் இருக்குமா என்ற சந்தேகமும் பல பேருக்கு இருக்கும். நம்பிக்கையோடு இதை செய்து பாருங்கள். உங்கள் தலைவிதியை உங்களாலேயே மாற்றி எழுத முடியும். அதேபோல கஷ்டப்படாமல் சுலபமாக எந்த ஒரு நல்லதும் நடக்காது. நாம் எவ்வளவுக்கு எவ்வளவு கஷ்டப்படுகின்றோமோ, அந்த அளவுக்கு உண்டான பலனை அந்த கடவுள் நிச்சயம் கொடுப்பான். ஆகவே சிரமப்படாமல் எல்லா விஷயத்திலும் ஜெயித்து விட வேண்டும் என்று மட்டும் நினைக்காதீங்க.

சரி, பரிகாரத்தை பார்த்து விடுவோம். இதற்கு நமக்கு ஒரு வெள்ளை பேப்பர் தேவை. வெள்ளை பேப்பரில் எழுதுவதற்கு ஒரு பேனா அல்லது ஸ்கெட்ச் பென் எதுவாக இருந்தாலும் சரி எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளை காகிதத்தில் உங்களுடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய தீராத துயரத்தை கஷ்டத்தை எழுதுங்கள்.

- Advertisement -

ஒரு கஷ்டம் தான் எழுத வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்களுக்கே தெரியும். உங்கள் மனசாட்சிக்கு தெரியும். எந்தெந்த கஷ்டங்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்து அதை முதலில் சரி செய்ய வேண்டும் என்று. அந்த கஷ்டங்களை பட்டியலிட்டு ஒரு ஒரு வரியாக அந்த காகிதத்தில் உங்களுக்கு தெரிந்தது படி எழுதிக் கொள்ளுங்கள்.

நாட்டு மருந்து கடைகளில் அரகஜா என்ற பொருள் கிடைக்கும். அதில் தரமான அரகஜாவை வாங்கிக் கொள்ளுங்கள். கூடவே கொஞ்சம் பச்சை கற்பூரத்தை வாங்கிக் கொள்ளுங்கள். அரகஜாவை உங்கள் ஆள்காட்டி விரலால் தொட்டு நீங்கள் எழுதியிருக்கும் கஷ்டத்தின் மேல் ஒரு கோடு போடுங்கள். இந்த கஷ்டம் தீர வேண்டும், இந்த கஷ்டம் தீர வேண்டும், என்று மனதில் நினைத்துக் கொண்டு எழுதிய கஷ்டங்களை உங்கள் விரலால் இந்த அரகஜாவை வைத்து அடித்து வாருங்கள்.

- Advertisement -

இந்த பேப்பருக்கு நடுவே ஒரு பச்சை கற்பூரத்தை வைத்து மடித்து பேப்பரில் எழுதிய கஷ்டங்கள் எல்லாம் சரியாகிவிட்டது. இனி நம்முடைய வாழ்க்கைக்கு விடிவு காலம் தான் என்று நினைப்போடு மடித்த இந்த பேப்பரை உங்கள் வீட்டிலேயே கண்ணுக்கு தெரியாமல் கைக்கு எட்டாமல் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். (இந்த பரிகாரம் செய்வது மட்டும்தான் சுலபம். ஆனால் பரிகாரத்திற்காக நீங்கள் எழுதிய வார்த்தைகளை உண்மையாக நீங்கள் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும்.)

இதையும் படிக்கலாமே: பிறரின் தீய எண்ணத்தால் ஏற்படும் பண விரையத்தை தடுக்கும் வெள்ளி மோதிர பரிகாரம்.

பிறகு எப்போதும் போல உங்களுடைய வேலையை செய்யலாம். கஷ்டம் தீர்ந்துவிட்டது என்று சொன்னீர்கள் அல்லவா. அந்த பேப்பரில் எழுதி இருக்கக்கூடிய கஷ்டங்களை சரி செய்வதற்கு என்னென்ன முயற்சிகளோ அதை நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். கடன் அடைய, சொத்து பிரச்சனை தீர, திருமணம் நடக்க, கணவன் மனைவி சண்டை போடாமல் இருக்க, தீராத நோய் தீர இப்படி எந்த பிரச்சனை இருந்தாலும் அந்த காகிதத்தில் எழுதி மேல் சொன்னபடி பரிகாரத்தை செய்தால் நீங்கள் கஷ்டப்படக்கூடிய அந்த கஷ்டம் கஷ்டப்படாமல் உங்களை விட்டு விலகும் என்பது நம்பிக்கை. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருதோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -