கணவனை திட்டும் மனைவிமார்களே உஷார்! உங்ககிட்ட காசு தங்காம போறதுக்கு இதுதான் காரணமாம் தெரியுமா?

graha-lakshmi-fight
- Advertisement -

கணவன்மார்களை மதிப்பும், மரியாதையுமாக நடத்திய காலம் போய் உரிமை அதிகம் எடுத்துக் கொண்டு சமமாக மதிக்கப்படும் காலமும் வந்தாயிற்று! வீட்டில் பேசப்படும் வார்த்தைகளும் ஒருவருக்கு கொடுக்கப்படும் மரியாதையும் கூட மகாலட்சுமிக்கு மிகவும் முக்கியமாம். அமங்கலமான வார்த்தைகளை பேசுபவர்கள் இடத்தில் மகாலட்சுமி தங்குவதில்லை என்பது ஐதீகம். அந்த வகையில் கணவன்மார்களை மனைவிமார்கள் திட்டுவது நல்லதா? ஒரு பெண்ணிடம் பணம் தங்காமல் போவதற்கு என்ன காரணம்? என்பதைத்தான் சுவாரசியமாக ஆன்மீக குறிப்பு தகவல்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஆன்மீகத்தில் மகாலட்சுமிக்கு தனி இடம் உண்டு. மகாலட்சுமி செல்வத்தை வழங்குபவள் மட்டும் அல்ல, சகலத்தையும் வழங்குபவளாக இருக்கின்றாள். காலையில் எழுந்து மகாலட்சுமியின் பெயரை எவரொருவர் உச்சரித்தாலும், அவரிடம் நான் நீக்கமற நிறைந்திருப்பேன் என்று அவரே கூறியுள்ளார் என்கிறது புராணங்கள்.

- Advertisement -

அதனால் தான் காலையில் எழுந்ததும் அந்த காலங்களில் ஆச்சாரத்தை கடைபிடித்து வாசலில் கூட்டி பெருக்கி சாணம் தெளித்து அழகிய வர்ண கோலங்கள் இட்டு நடுவே பூசணி பூவை சொருகி வைத்து வாசலின் இருபுறமும் இரு விளக்குகள் ஏற்றி மகாலட்சுமியை அன்புடன் வீட்டிற்கு அழைப்பார்கள். மகாலட்சுமி சொர்க்கத்தில் சொர்க்கலக்ஷ்மி என்றும், உலகில் ராஜ்யலட்சுமி என்றும் வீட்டில் கிரகலட்சுமி என்றும் அழைக்கப்படுகின்றாள்.

உங்களுடைய வீட்டில் கிரகலட்சுமி படம் வைத்திருந்தால் லட்சுமி அருள் பரிபூரணமாக குடும்பத்திற்கு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. கிரகலட்சுமி என்பது பசு மாட்டுடன் வீட்டிற்குள் லட்சுமி காலடி எடுத்து வைக்கும் படமாகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் காட்டி உள்ளது தான் கிரகலட்சுமி. இந்தப் படம் வீட்டில் வைத்திருந்தால் பிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனை செல்வங்களும் நம் வசமாகும். மகாலட்சுமி கணவனை திட்டும் பெண்களிடம் இருப்பதில்லையாம்.

- Advertisement -

அதே போல மனைவியை ஏசுபவர்களிடமும் மகாலட்சுமி தங்குவதில்லை. அமங்கல சொற்களை வீட்டில் பேசினால் மகாலட்சுமி அங்கு தங்குவதில்லை. பணம் என்பது நிலையான ஒரு விஷயம் அல்ல! கைக்கு கை மாறிக் கொண்டே இருக்கும் இந்த பணத்தை நீங்கள் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்றாலும், தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றாலும் வீட்டில் நிம்மதி இருக்க வேண்டும்.

கணவன் என்பவர் மகா விஷ்ணுவை போன்றவர், மனைவி என்பவள் மகாலட்சுமியை போன்றவளாக வீட்டில் இருக்கிறார்கள் எனவே ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளாமல் அசுப வார்த்தைகளை உபயோகித்து மனதை காயப்படுத்தாமல் விட்டுக் கொடுத்து சென்று புரிந்து கொள்ள முயற்சி செய்து குடும்பத்தையும், குழந்தைகளையும் கௌரவமாகவும், மதிப்புடனும் நடத்துபவர்கள் இடத்தில் கண்டிப்பாக மகாலட்சுமி நீங்கள் அழைக்காமலேயே வந்து ஒட்டிக் கொள்கிறாள். இந்த பாக்கியத்தை செய்தவர்களிடம் பாக்கியலட்சுமி எப்பொழுதும் இருப்பார்.

- Advertisement -

அயராது உழைத்து அனுதினமும் களைத்து போய் வீட்டிற்கு வரும் கணவன்மார்களை அவர்கள் முகத்தை வைத்தே மனைவிமார் எப்படிப்பட்ட மனநிலையுடன் வந்திருக்கிறார்? என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப அவர்கள் பேச்சு கொடுத்து அனுசரணை ஆகவும், அன்பாகவும் நடந்து கொள்ள வேண்டும். இப்படி செய்தாலே அவர்களுக்கு உங்கள் மீதான மதிப்பு மாற துவங்கும். வெறுப்பை கக்கும் கணவன்மார்களும், மனைவியின் மீது பிரியம் காட்ட துவங்குவார்கள்.

இதையும் படிக்கலாமே:
மற்றவர்கள் உங்களைப் பார்த்து பொறாமை பட்டாலும் மென்மேலும் தடையில்லாமல் வளர வெள்ளிக்கிழமையில் தவறாமல் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

அதன் பிறகு என்ன, யாருக்கும் யாரையும் திட்ட வேண்டிய அவசியமே இருக்காது. எல்லாரும் நாம் எதிர்பார்த்தவாரு நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதே தவறாகும். ஒருவரிடம் இருக்கும் குணம் இன்னொருவரிடம் இருப்பதில்லை! அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களை பட்டியலிடுங்கள். அதற்கு பாராட்ட துவங்குங்கள். தீய குணங்களை சரியான நேரத்தில் பொறுமையாக அவர்களுக்கு புரியும்படி இன்முகத்துடன் பேசி புரிய வைக்க முயற்சி செய்யுங்கள். அதை விடுத்து சத்தம் போடுவதும், கத்தி பேசுவதும், கெட்ட வார்த்தைகளை உபயோகிப்பதும், திட்டுவதும் உங்களுக்கு மட்டுமல்ல, உங்களுடைய குடும்பத்திற்கும் லட்சுமி கடாட்சத்தை இழக்க செய்து விடும் என்பதை மறவாதீர்கள்.

- Advertisement -