மற்றவர்கள் உங்களைப் பார்த்து பொறாமை பட்டாலும் மென்மேலும் தடையில்லாமல் வளர வெள்ளிக்கிழமையில் தவறாமல் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

cash-deepam-vilakku
- Advertisement -

நம்மை சுற்றி இருக்கும் அனைவரும் நம்முடைய வளர்ச்சியை பார்த்து சந்தோஷப்படுவார்கள் என்று நாம் நினைத்து விட முடியாது. அதில் பல கண்கள் நம்மை பார்த்து பொறாமை படத்தான் செய்யும். இப்படிப்பட்ட பொல்லாத பார்வைகள் நம்முடைய வளர்ச்சியை, நம்முடைய முன்னேற்றத்தை சில சமயங்களில் தடை செய்து விட வாய்ப்புகள் உண்டு என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. இதைத்தான் கண் திருஷ்டி என்பார்கள். இப்படிப்பட்ட திருஷ்டிகள் நம்மை அண்டாமல் இருக்கவும், எப்பேர்பட்ட பொறாமை கண் உடையவர்கள் நம்மை பார்த்தாலும் நம்முடைய வளர்ச்சியில் தடை இல்லாமல் மென்மேலும் முன்னேறவும், நாம் வெள்ளிக்கிழமையில் தவறாமல் கடைபிடிக்க வேண்டியது என்ன? என்பதைத்தான் இந்த ஆன்மீக குறிப்பு தகவல்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நம்முடைய சுய முயற்சியில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகின்றோம். நாம் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். அதை எல்லாம் சமாளித்து பல முட்டுக்கட்டைகளை தாண்டி போராடித்தான் நம் இலக்கை அடைய வேண்டி இருக்கிறது. இது அவரவருக்கு மட்டுமே தெரியும் ரகசியமாக அவர்களுடைய வாழ்க்கையில் இருந்து வருகிறது ஆனால் இது மற்றவர்களுக்கு புரிவது இல்லை! எளிதாக நம் வளர்ச்சியை கண்டு பொறாமைப்படுபவர்களை சற்று தள்ளி வைத்திருங்கள். உங்களுடைய வளர்ச்சி மற்றும் ரகசியங்களை பற்றி நம்பிக்கையானவர்களை தவிர யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

- Advertisement -

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் மகாலட்சுமி பூஜையை எளிதான முறையில் செய்து வாருங்கள். புதிதாக ஒரு கடை ஆரம்பித்து இருக்கிறீர்கள் என்றாலும் அல்லது உங்களுடைய தொழில் சிறப்பாக அமைய வேண்டும் என்றாலும் நீங்கள் வேலை செய்யும் இடங்களில் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் மகாலட்சுமியின் சிலை அல்லது புகைப்படத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த புகைப்படத்தை தினமும் துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு சந்தன, குங்குமம் இட்டு வெள்ளிக்கிழமையில் மாலை வேலையில் சுத்தமான நெய் விளக்கு ஒன்றை வைத்து அதில் ரெண்டு வெள்ளை திரிகளை எடுத்து ஒன்றாக திரித்து நெய்யில் போடுங்கள். பின்னர் மகாலட்சுமிக்கு பிடித்தமான வாசனை மிகுந்த மலர் ஒன்றை அவளின் பாதத்தில் வையுங்கள். புகைப்படம் என்றால் நீங்கள் மாலையாகவும் சூட்டலாம்.

- Advertisement -

சிறிய கலசம் ஒன்றில் தண்ணீரை நிரப்பி அதில் பச்சை கற்பூரத்தை நொறுக்கி சேருங்கள். ஒரு ஏலக்காயை கிள்ளி போடுங்கள் போதும், அது தீர்த்தம் ஆகிவிடும். முடிந்தால் 2 துளசி இலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் விளக்கு ஏற்றி இரண்டு நறுமணம் மிக்க பத்திகளை ஏற்றி வையுங்கள். நைவேத்தியமாக டைமண்ட் கல்கண்டு அல்லது உலர் திராட்சைகளை வையுங்கள் போதும். பின்னர் மனதார உங்களுடைய தொழில் மென்மேலும் வளர வேண்டும், வருமானம் பெருகிக் கொண்டே செல்ல வேண்டும் என்று வேண்டுங்கள்.

இதையும் படிக்கலாமே:
ஏழு நாட்களில், ஏழு வயதை குறைக்க மிக மிக எளிமையான அழகு குறிப்பு. பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் முகத்தில் சுருக்கம் தெரியவே தெரியாது.

எந்த ஒரு தொழில் செய்தாலும் அதில் தடைகளும், எதிரிகளும் பெருக தான் செய்வார்கள். போட்டிகளும் அதிகரிக்க தான் செய்யும். இவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் தைரியமும், தன்னம்பிக்கையும் வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டே வாருங்கள். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் நீங்கள் பயபக்தியுடன் மகாலட்சுமியை நெய் விளக்கு ஏற்றி இப்படி வழிபட்டு வந்தால், எத்தகைய பொல்லாத கண் திருஷ்டிகளும் விலகி, செல்வமானது பெருக துவங்கும். வருமானம் தடை இல்லாமல் வரும் மேலும் நீங்கள் ஆரம்பித்த தொழில் அமோகமாக விருத்தி அடையும். வாடிக்கையாளர்கள் உங்களை மதிப்புடனும், கௌரவத்துடனும் பார்ப்பார்கள். சகல சௌபாக்கியங்களையும் பெற இந்த எளிய மகாலட்சுமி வழிபாட்டை செய்யலாமே!

- Advertisement -