வீட்டில் தொடர்ந்து சண்டை சச்சரவாக இருக்கிறதா? நிம்மதியே இல்லையா? இதற்க்கு வாஸ்து தோஷம் கூட காரணமாக இருக்கலாம். இதை செய்தால் போதும் வாஸ்து தோஷம் தானாக விலகி விடும்.

- Advertisement -

வீட்டை கட்டிப்பாரு கல்யாணம் பண்ணி பாரு என்பது பழமொழி. வீட்டை கட்டுவதும் ஒரு கல்யாணத்தை செய்வதும் அவ்வளவு பெரிய விஷயமாக கருதப்படுகிறது. அவ்வாறு நாம் கட்டும் வீட்டில் ஏதேனும் வாஸ்து தோஷம் இருந்தால் நம்மால் அந்த வீட்டில் நிம்மதியாக இருக்கவே முடியாது. ஆசைப்பட்டு ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து கட்டும் வீட்டில் ஏதேனும் வாஸ்து குறையால் மன நிம்மதி இழந்து வாழ்பவர்கள் பல பேர். அதற்காக வாஸ்து நிபுணர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு என்று செலவு செய்து, ஆசைப்பட்டு கட்டிய வீட்டின் அமைப்பையே மாற்றும் பலபேர் இன்றும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட வாஸ்து தோஷத்தை மிகவும் எளிய முறையில் எவ்வாறு நீக்குவது என்று தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

வாஸ்து தோஷம் சிறிய அளவில் இருந்து பெரிய அளவாக நிறைய இருக்கிறது. தோஷம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி இந்த எளிய பரிகாரத்தை நாம் நம் வீட்டில் செய்தால் போதும். நாம் கஷ்டப்பட்டு கட்டிய வீட்டில் எந்த குறையும் இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்.

- Advertisement -

வாஸ்து தோஷத்தை நிவர்த்தி செய்யும் கடவுளாக இருப்பவள் தான் கிரகலட்சுமி. இந்த கிரக லட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்தாலேயே எவ்வித வாஸ்து தோஷமும் நம்மை ஒன்றும் செய்யாது. அப்படிப்பட்ட கிரகலட்சுமி அருளை எப்படி பெறுவது என்று தான் நாம் பார்க்கப் போகிறோம்.

கிரகலட்சுமி வாசம் செய்யும் இடமாக கருதப்படுவது நம் வீட்டின் நிலை வாசல். ஆதலால் தான் நம் முன்னோர்கள் நிலை வாசலின் மேல் நிற்கக்கூடாது, நிலை வாசலின் மேல் அமரக்கூடாது, நிலை வாசலை மிதிக்கக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த நிலை வாசலுக்கு நாம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு கிரகலட்சுமி அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

இன்றும் சில வீடுகளில் வெள்ளிக்கிழமைகளில் நிலை வாசலை கழுவி மஞ்சள், குங்குமம் இட்டு பூ வைத்து வழிபடுகிறார்கள். இந்த எளிய முறை தான் கிரகலட்சுமி அருளை பெறுவதற்கான வழிமுறை. ஆனால் நவநாகரீகம் என்ற பெயரில் இப்பொழுது மஞ்சள் பெயிண்டை அடித்து விடுகிறார்கள் இது ஒரு வகையில் சோம்பேறித்தனம் தான்.

இந்த மஞ்சள் குங்குமத்தை நாம் வாராவாரம் வைத்து அதோடு பூ வைத்து வழிபட்டு வருவதால் கிரகலட்சுமி அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்து, நம் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்க பெறுவோம். இது மட்டும் இல்லாமல் கிரகலட்சுமி உருவப்படத்தை நிலை வாசலின் மேல் வைத்து, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை படத்தை துடைத்து மஞ்சள், குங்குமம், பூ வைத்து வழிபடுவதன் மூலம் அந்த தாயாரின் பரிபூரணமான ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: உங்களின் ஒட்டுமொத்த பிரச்சனையும் தீர காலை பிரம்ம முகூர்த்த வேலையில் இந்த பரிகாரத்தை செய்தால் போதும். வீட்டில் உள்ள அனைத்து துன்பங்களும் தூர ஓடும்.

வீட்டில் எந்த நல்லதும் நடக்கவில்லை, சண்டை சச்சரவுகள் அதிகமாக இருக்கிறது, குடும்பத்தில் நிம்மதி இல்லை என்ற பேச்சே இல்லாமல் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழலாம். இந்த எளிய பரிகாரத்தை செய்து நீங்களும் கிரகலட்சுமி அருளை பரிபூரணமாக பெற்று நலமாக வாழுங்கள்.

- Advertisement -