உங்களின் ஒட்டுமொத்த பிரச்சனையும் தீர காலை பிரம்ம முகூர்த்த வேலையில் இந்த பரிகாரத்தை செய்தால் போதும். வீட்டில் உள்ள அனைத்து துன்பங்களும் தூர ஓடும்.

- Advertisement -

நம் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து, எதிர்மறை எண்ணங்கள் குறைந்து, நம்மை சுற்றி நல்ல செயல்கள் மட்டுமே நடக்கவும், நமக்கு இருக்கும் கண் திருஷ்டி அகலவும், நம் வீட்டில் இருக்கும் ஒரு பொருளை வைத்தே எளிமையாக இந்த பரிகாரத்தை இந்த கிழமையில் மேற்கொள்ளும் போது அவை நமக்கு பல மடங்கு நல்ல பயன்களைத் தரும். அப்படிப்பட்ட அந்த பரிகாரம் என்ன என்பதை இந்த பதிவில் நாம் காண்போம்.

பொதுவாக நாம் அனைவரும் நம் வீட்டில் நல்ல செயல்களே நடக்க வேண்டும் என்று விரும்புவோம். அவ்வாறு விரும்பும் நாம் முதலில் நல்ல எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும். நேர்மறை எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொண்டாலே நம்மை சுற்றி நல்ல செயல்கள் நடைபெறும். அதோடு இந்த எளிய பரிகாரத்தையும் நாம் தொடர்ந்து செய்து வரும்போது நாம் எண்ணிலடங்கா நல்ல பலன்களை அடைவோம்.

- Advertisement -

ஒவ்வொருவர் வீட்டிலும் உப்பிற்கு தனி மதிப்பு இருக்கிறது. காரணம் உப்பில் மகாலட்சுமி குடி கொண்டு இருக்கிறாள். ஆதலால் தான் எல்லா வீடுகளிலும் கிரகப்பிரவேசத்தின் போது உப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து உப்பை முதலில் கொண்டு செல்வர். உப்பு எந்த அளவுக்கு நம் வீட்டில் இருக்கிறதோ அந்த அளவுக்கு மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்கும் என்று சொல்வார்கள்.

அப்படிப்பட்ட உப்பை வைத்து நாம் செய்யக்கூடிய இந்த எளிய பரிகாரம் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றலை அகற்றி, நேர்மறை ஆற்றலை உண்டாக்கி, நமக்கு இருக்கும் கண் திருஷ்டியை அகற்றி விடும். ஒருவருக்கு கண் திருஷ்டி இல்லை என்றால் அவர்கள் எடுத்த காரியம் எளிதில் நடைபெறும், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்ய நமக்கு உப்பு மட்டுமே போதும். இந்த பரிகாரம் செய்ய வெள்ளிக்கிழமை மிகவும் உகந்த கிழமை. செய்ய வேண்டிய நேரம் விடியற்காலை 3 மணி முதல் 5 30 மணி வரை, அதாவது பிரம்ம முகூர்த்த வேலையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்று பார்ப்போமா?

உப்பு பரிகாரம் செய்வது எப்படி | Uppu pariharam seivathu eppadi
வெள்ளிக்கிழமை காலையில் பிரம்ம முகூர்த்த வேலையில் குளித்து முடித்துவிட்டு கிழக்கு முகமாக அமர்ந்து, நமக்கு முன்பாக ஒரு வெள்ளை காகிதத்தை வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது நம்முடைய இரண்டு கைகளிலும் உப்பை ஒன்றாக சேர்த்து எடுத்துக்கொண்டு நமக்கு என்னென்ன நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த விஷயங்களை மட்டுமே நினைக்க வேண்டும்.

- Advertisement -

எதிர்மறையாக எதையும் நினைக்கக் கூடாது. அப்படி நல்ல விஷயங்களை மட்டுமே மனதார நினைத்து வேண்டிக்கொண்டு அந்த உப்பை நமக்கு முன்பு இருக்கும் காகிதத்தில் வைத்து மடித்து பூஜை அறையில் வைத்து விட வேண்டும். அன்று மாலை 6 மணிக்கு முன்பாக ஓடுகிற நீரில் அந்த உப்பு மடித்த காகிதத்தை போட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இதுவரை நீங்கள் அனுபவித்த துன்பங்களிலிருந்து மொத்தமாக விடுபட இலை பரிகாரத்தை இபப்டி செய்து விடுங்கள்

இவ்வாறு நாம் செய்வதன் மூலம் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றலை உப்பு ஏற்றுக் கொள்கிறது. நேர்மறை ஆற்றல் மட்டுமே நம்முடன் இருக்கும். அந்த நேர்மறை ஆற்றல் நம்முடன் இருப்பதினால், நமக்கு நடக்கும் அனைத்துமே நல்லதாகவே நடக்கும். உப்பை நம் கைகளால் எடுப்பதன் மூலம் நம்மிடம் இருக்கும் கண் திருஷ்டியும் அகன்று விடும். ஓடுகிற நீரில் போடுவதன் மூலம் நம்முடைய எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் கண் திருஷ்டிகள் அனைத்தும், உப்பு நீரில் கரைவது போல் கரைந்து விடும். இதுவே இந்த உப்பு பரிகாரத்தின் சூட்சமம். இந்த எளிமையான பரிகாரத்தை நாம் வாராவாரம் மேற்கொள்ளும்போது நம்மிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி, கண் திருஷ்டியும் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழலாம்.

- Advertisement -