25-01-2024 குபேர பௌர்ணமி வழிபாடு

gubera1
- Advertisement -

நாளை வியாழக்கிழமையோடு சேர்ந்து பௌர்ணமி திதி வந்துள்ளது. பூச நட்சத்திரமும் இருக்கிறது. தைப்பூசத் திருநாள். முருகருக்கு உரிய நாள் அதுமட்டுமில்லாமல், வியாழக் கிழமை அன்று பௌர்ணமி திதி வந்திருப்பதால், இது குபேரருக்கு உரிய பௌர்ணமியாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

பணக்கஷ்டத்திலிருந்து வெளிவர, செல்வ செழிப்பில் குபேரருக்கே அதிபதியாக மாற, கடன் பிரச்சனையில் இருந்து தப்பிக்க, ஒட்டுமொத்த கடனையும் ஒரேடியாக திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு செல்வந்தராக மாற, நம் வீட்டில் ஏற்ற வேண்டிய ஒரு எளிமையான தீபம் பற்றிய தகவலை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

நாளை குபேர பௌர்ணமி வழிபாடு

முருகர் வழிபாட்டை நீங்கள் வீட்டில் செய்தாலும் கூடவே சேர்த்து இந்த குபேர வழிபாட்டையும் செய்யலாம். நாளை மாலை 6:00 மணிக்கு மேல் பௌர்ணமி நிலவு உதயமான பிறகு நிலவைப் பார்த்து ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு, அதன் பிறகு வீட்டிற்குள் வந்து விளக்கு ஏற்றுக் கொள்ளுங்கள். சாதாரணமாக உங்கள் வீட்டில் ஏற்றக்கூடிய விளக்கு எல்லாம் எரியட்டும்.

கூடவே ஒரு சின்ன பித்தளை தாம்பல தட்டுக்கு மேலே ஒரு மண் அகல் விளக்கு வைத்து சுத்தமான நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி வையுங்கள். இந்த விளக்கை சுற்றி கொஞ்சம் சிலரை நாணயம் வைக்க வேண்டும். விளக்குக்கு அடியில் நாணயங்கள் வேண்டாம். விளக்கை சுற்றி நாணயங்களை வைத்து உதிரி புஷ்பங்களால் முடிந்தால் மஞ்சள் நிற புஷ்பங்களை உதிர்த்து இந்த விளக்குக்கு ‘ஓம் குபேராய போற்றி போற்றி’ இந்த மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்யுங்கள்.

- Advertisement -

27 முறை முதல் 108 முறை இந்த மந்திரத்தை சொல்லலாம். வானத்தில் நிலவு பிரகாசமாக இருக்கும். உங்கள் மனதில் எந்த குழப்பமும் இருக்காது. வியாழக்கிழமை மாலை குபேரரின் அருள் நிறைந்த நேரம். இந்த நேரத்தில் நெய் தீபம் ஏற்றி உங்கள் பண கஷ்டம் தீர, கடன் சுமை குறைய, குடும்பத்தோடு மனம் உருகி குலதெய்வத்தையும், குபேரரையும் நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும்.

இந்த சமயத்தில் கட்டாயம் நிவேதியமாக இரண்டு வாழைப்பழமாவது பூஜையறையில் வைக்க மறக்காதிங்க. இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். கையோடு அர்ச்சனை செய்த சில்லறை காசுகள் இருக்கிறது அல்லவா அதை எடுத்து பீரோவில் வையுங்கள். மூன்று நாள் கழித்து அந்த காசை எடுத்து சுப செலவுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். பூ வாங்கலாம் அல்லது பூஜை பொருட்கள் எதாவது வாங்கலாம்.

இதையும் படிக்கலாமே: தைப்பூசம் வெற்றிவேல் முருகன் வழிபாடு

அல்லது ஏதாவது உணவு பொருட்கள் வாங்கி இல்லாதவர்களுக்கு தானம் கொடுப்பது இன்னும் சிறப்பான பலனை கொடுக்கும். நாளை மாலை அற்புதம் வாழ்ந்த இந்த பௌர்ணமி நாளில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த வழிபாட்டை பின்பற்றுங்கள் கை மேல் பலன் கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -