வியாழக்கிழமை இந்த விளக்கை பூஜை அறையில் ஏற்றி வைத்தால் குபேரரின் பரிபூரணமான ஆசி முழுமையாக கிடைக்கும். கஷ்டம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.

gubera
- Advertisement -

குபேரரின் பரிபூரணமான ஆசீர்வாதத்தை பெறுவதற்கு வியாழக்கிழமை அன்று செய்யக்கூடிய குபேர வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பரிகாரத்தில் நாம் ஏற்றி வைக்கக்கூடிய விளக்குக்கு அதீத சக்தி உண்டு. இந்த விளக்குக்கு முன்பு அமர்ந்து குபேரரை வேண்டி என்ன வரம் கேட்டாலும் அது உடனே கிடைக்கும். மிக மிக சுலபமான முறையில் குபேரரை வசியம் செய்ய வியாழக்கிழமை அன்று செய்யும் இந்த ஒரு பூஜை போதும்.

வியாழக்கிழமை மாலை 6:00 மணிக்கு மேல் இந்த பூஜையை செய்ய ஆரம்பிக்க வேண்டும். குபேரரின் திரு உருவப்படம், அல்லது குபேரரின் சிலை இருந்தால் அந்த படத்தை சுத்தமாக துடைத்து மணக்க மணக்க ஜவ்வாது கலந்த மஞ்சள் போட்டு வைத்து குங்குமப்பொட்டு வைத்து வாசனை நிறைந்த பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பூஜை அறையில் ஒரு மண் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 1 ரூபாய் நாணயம், 2 ஏலக்காய்களை போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி மஞ்சள் திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும். உங்களால் முடிந்த இனிப்பு சுவை நிறைந்த ஏதாவது ஒரு நெய்வேத்திய தினத்தை வையுங்கள். முடியாது என்றால் பழ வகைகளை நிவேதனமாக வைக்கலாம்.

இந்த விளக்கிற்கு முன்பாக அமர்ந்து உங்களுக்குத் தெரிந்த மந்திரத்தை சொல்லலாம். உதாரணத்திற்கு ‘ஓம் குபேராய நமஹ’, ‘ஓம் மஹாலட்சுமியே போற்றி’ என்ற ஏதாவது ஒரு மந்திரத்தை சொல்லுங்கள். அல்லது உங்களுக்கு குபேரர் பிரத்தியேக மந்திரம் ஏதாவது தெரிந்தாலும் அதை உச்சரிக்கலாம். ஒருவரி மந்திரமாக இருந்தால் 108 முறை என்ற கணக்கில் மந்திரத்தை உச்சரிக்கவும். ஒவ்வொரு முறை மந்திரத்தை உச்சரிக்கும் போது உதிரி புஷ்பத்தால் நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் தீபத்திற்கு முன்பு அர்ச்சனை செய்ய வேண்டும். அந்த உதவி புஷ்பங்களை தீபத்திற்கு முன்பு போடுங்கள்.

- Advertisement -

கீழே அமர்ந்தபடி இந்த பூஜையை செய்ய தொடங்குங்கள். மந்திரத்தை உச்சரித்து முடித்த பின்பு பத்து நிமிடங்கள் தியான நிலையில் உங்கள் மனதார குபேரரையும் மகாலட்சுமியையும் நினைத்துக்கொண்டு குலதெய்வத்தை வணங்கி உங்கள் வீட்டில் இருக்கும் எல்லா கஷ்டத்திற்கும் தீர்வு கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

வீட்டில் இருக்கும் பணகஷ்டம், மன கஷ்டம், சண்டை சச்சரவு போன்ற பல வகையான பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு சின்ன பரிகாரம் தீர்வை கொடுக்கும். வாரம் தோறும் வரக்கூடிய எல்லா வியாழக்கிழமைகளிலும் இந்த பூஜையை செய்யலாம். முதல் வாரம் ஏற்றிய மண் அகல் விளக்கு, ஒரு ரூபாய் நாணயத்தை அடுத்தடுத்த வாரங்களுக்கும் பயன்படுத்தி வரலாம். ஆனால் அந்த பொருட்களை ஒரு துணியால் துடைத்து சுத்தம் செய்துவிட்டு மீண்டும் பயன்படுத்துங்கள்.

பழைய ஏலக்காய்களை மண்பாங்கான இடத்தில் கால் படாமல் போட்டு விடுங்கள். புதிய ஏலக்காய்களை போட்டு, புதியதாக எண்ணெய் ஊற்றி புதிய திரி போட்டு தீபம் ஏற்றி அடுத்த வாரம் பூஜை செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இப்படி 5 வாரம் அல்லது 7 வாரம், 11 வாரம் என்ற கணக்கை வைத்துக் கொள்ளுங்கள். பூஜை நிறைவான பின்பு எண்ணெயில் போட்டு வைத்திருக்கிறீர்கள் அல்லவா ஒரு ரூபாய் நாணயம் அதை துணியில் நன்றாக துடைத்து விட்டு அந்த ஒரு ரூபாய் நாணயத்திற்கு மஞ்சள் குங்குமம் போட்டு வைத்து அப்படியே குபேரரின் பெயரைச் சொல்லி பீரோவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பூஜையை நம்பிக்கையோடு மன நிறைவாக செய்து முடித்த பின்பு உங்கள் வீட்டில் செல்வ நிலையில் நிச்சயம் ஒரு நல்ல மாற்றம் தெரியும். நம்பிக்கையோடு செய்தால் இந்த சின்ன பூஜை குபேரரின் அருள் ஆசையை முழுமையாக பெற்று தரும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -