தடைகளை நீக்கும் குண்டு மஞ்சள்

gundu manjal success
- Advertisement -

ஒரு செயலை நாம் செய்யும் பொழுது அந்த செயலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செய்ய ஆரம்பிப்போம். அந்த வெற்றியை பெறுவதற்குரிய முயற்சிகளிலும் ஈடுபடுவோம். இருப்பினும் நம்மால் சில காரியங்களில் வெற்றி பெற முடியாத சூழ்நிலை உண்டாகும். ஒரு சிலருக்கோ தாங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் தடைகளும் தாமதங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு அவர்களை சுற்றி தீய சக்திகள் இருக்கிறது என்று பொருள்படும். இந்த தீய சக்திகளை விரட்டியடிப்பதோடு மட்டுமல்லாமல் தடையில்லாத காரியவெற்றியை பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

நம்மை சுற்றி எதிர்மறை ஆற்றல்கள் இருந்தால் நாம் மேற்கொள்ளும் காரியத்தில் நம்மால் வெற்றியை பெற முடியாது. எதிர்மறையான பலன்கள் தான் நமக்கு கிடைக்கும். அதனால் முதலில் நம்மை சுற்றி இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலகுவதற்குரிய வழிமுறைகளை பார்க்க வேண்டும். அப்படி எதிர்மறை ஆற்றல்கள் விலகி விட்டாலே நமக்கு இருக்கக்கூடிய காரிய தடைகள் அனைத்தும் படிப்படியாக நீங்க ஆரம்பித்து விடும். நம்மிடம் மட்டும் இல்லாமல் நம் வீட்டிலும் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை விரட்டி அடிக்க கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை வியாழக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். வியாழக்கிழமை என்பது குருபகவானுக்குரிய நாளாக கருதப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அன்றைய தினத்தில் குரு பகவானுக்குரிய பொருளான குண்டு மஞ்சளை வாங்கி வருவது மிகவும் சிறப்புக்குரியது. பெண்கள் குளிப்பதற்கு உபயோகப்படுத்தும் மஞ்சள் இருக்கிறது அல்லவா அந்த மஞ்சள் தான் குண்டு மஞ்சள்.

இந்த மஞ்சளை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளோ அல்லது மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் குரு ஹோரை வரும். இந்த இரண்டு நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை பயன்படுத்தி குண்டு மஞ்சளை கடையிலிருந்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். மாலை 4:30 மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும். நம்முடைய வீட்டின் அளவைப் பொறுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீரை பிடித்துக் கொள்ளுங்கள். சிறிய வீடாக இருந்தால் சின்ன சொம்பில் தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ளலாம். பெரிய வீடாக இருந்தால் பாத்திரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

அதில் ஒரு கிழங்கு மஞ்சள் போட்டு விட வேண்டும். சிறிது நேரம் அப்படியே விட்டு விட்டோம் என்றால் அந்த கிழங்கு மஞ்சள் இருந்து மஞ்சள் துகள்கள் வெளியேறி இருக்கும். இப்பொழுது இந்த தண்ணீரை வடிகட்டியும் பயன்படுத்தலாம் தெளிந்த தண்ணீரை மட்டும் தனியாக எடுத்தும் பயன்படுத்தலாம். அந்த தண்ணீரை தனியாக எடுத்துவிட்டு ஒரு வெற்றிலையை எடுத்து அந்த வெற்றிலையின் நுனிப்பகுதி அந்த தண்ணீருக்குள் படும்படி வைத்துக்கொண்டு வீட்டின் உள்பகுதியில் இருந்து மூலை முடுக்குகள் என்று அனைத்து இடங்களிலும் இந்த தண்ணீரை தெளித்து வீட்டிற்கு வெளியே வீட்டு வாசல் வரை இந்த தண்ணீரை முழுமையாக தெளித்து முடித்து விட வேண்டும்.

மீதம் தண்ணீர் இருக்கிறது என்று நினைப்பவர்கள் மறுநாள் குளிக்கும் தண்ணீரில் இந்த தண்ணீரை கலந்து குளித்துக் கொள்ளலாம். இந்த தண்ணீருக்குள் போட்ட கிழங்கு மஞ்சளை அப்படியே எடுத்து காயவைத்து அடுத்த வார வியாழக்கிழமை இதே போல் செய்வதற்கு நாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை நாம் செய்யும்பொழுது நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் தீய சக்திகளும் விலகி ஓடுவதோடு மட்டுமல்லாமல் நமக்கு காரிய வெற்றியையும் ஏற்படுத்தி தருவதோடு குரு பகவானின் அருளையும் பரிபூரணமாக பெறச்செய்யும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் மணி பிளான்ட் வைத்திருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வாஸ்து குறிப்பு

மிகவும் எளிமையான அதே சமயம் பல அற்புத பலன்களை தரக்கூடிய இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்து குரு பகவானின் அருளை பரிபூரணமாக பெற்றுக்கொள்வோம்.

- Advertisement -