வீட்டில் மணி பிளான்ட் வைத்திருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வாஸ்து குறிப்பு

money-plant
- Advertisement -

வீட்டில் மணி பிளான்ட் செடி வைத்தால் நல்லது. நிறைய பணம் சேரும் அந்த மணி பிளான்ட் வளர வளர நம்ம செல்வ செழிப்பும் உயரும். இது நாம எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் மணி பிளான் செடி வளர வளர நம்முடைய குடும்பம் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகள் என்னென்ன? பணம் காசு வருவதற்கு பின்னால், வரும் பிரச்சனைகள் தான் என்னென்ன ஆன்மீகம் சொல்லும் வாஸ்து சார்ந்த சில தகவல்கள் இதோ இந்த பதிவில் உங்களுக்காக.

வீட்டில் மணி பிளான்ட் எப்படி வைக்கலாம்

உங்க வீட்டில் மணி பிளான்ட் வைப்பதாக இருந்தால் தென்கிழக்கு மூலையில் சின்னதாக ஒரு தொட்டி வைத்து, அந்த தொட்டியில் மணி பிளான்ட்டை வைத்து தண்ணீர் ஊற்றி வளர்ப்பது சிறப்பு. மணி பிளான் செடி குட்டியா அழகா, மணி பிளான்ட் செடி போலத்தான் இருக்கணும். சில வீடுகளில் மணி பிளாண்ட்டை தண்ணீரில் போட்டு வளர்ப்பார்கள்.

- Advertisement -

ஒரு கண்ணாடி டம்ளரோ, குடுவையோ வைத்து அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இந்த மணி பிளான்ட் செடியை போட்டு வைத்தால், அதில் வேர்விடும் அப்படியே வளர தொடங்கும். இதுபோல உங்களுடைய வீட்டில் மணி பிளான்ட் செடியை வைத்திருந்தால், அந்த தண்ணீரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் கட்டாயம் மாற்ற வேண்டும். அந்த தண்ணீர் அழுக்காகி விட்டால், வீட்டில் பிரச்சனைகள் வரும். குறிப்பாக பெண்களின் மனநிலை பாதிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

மணி பிளான் செடியை வீட்டில் எப்படி வைக்க கூடாது

மணி பிளான்ட் செடியை வீட்டில் வைத்தவுடன் கொஞ்சம் அதிகமாக காசு சேர தொடங்கிவிட்டது. இந்த மணி பிளான்ட் செடியை இன்னும் தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்ப்போம். வீட்டை சுற்றிக்கொடி போல படர விடவோம் என்று அதிகமாக பேராசைப்பட்டு, இந்த சின்ன செடியை பெரிய கொடியாக மாற்றி நிலைவாசல் கேட்டில் சுத்தி வைப்பது, பால்கனியில் தொங்க விடுவது, வீட்டிற்குள்ளேயே இந்த கொடியை படர விடுவது போன்ற தவறை மட்டும் செய்யக்கூடாது.

- Advertisement -

இந்த கொடி என்பது கேதுவின் காரகத்துவமாக சொல்லப்பட்டுள்ளது. அளவோடு காசு வரட்டும் நல்லது. பெரிய அளவில் செடியை வளர்த்து நிறைய பணம் காசு வந்தால் அந்த காசுக்கு பின்னால், மன கஷ்டமும் துன்பங்களும் துயரங்களும் வரப்போகிறது என்று அர்த்தம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. பெரியவர்கள் எந்த விஷயத்தையும் சும்மா சொல்லவில்லை.

அளவுக்கு மீறி ஆசைப்பட்டு உங்க வீட்டில் மணி பிளான் செடியை இப்படி கொடி போல படரவிட்டு இருக்கீங்களா, பணம் வருவதற்கு பின்னால் என்ன பிரச்சனை வருகிறது என்பதையும் பாருங்கள். மணி பிளான்ட் இப்படி படருவதற்கு முன்பு வீட்டுப் பெண்களின் நிலை எப்படி இருந்தது, இந்த அளவுக்கு மணி பிளான்ட் செடி படர்ந்த பின்பு வீட்டுப் பெண்களின் மனநிலை எப்படி இருக்கிறது, பெண்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதையும் கொஞ்சம் கவனியுங்கள்.

- Advertisement -

மணி பிளான் செடி இப்படி படர்ந்த பிறகு நிறைய காசு பணம் வருதுங்க, ஆனா மருத்துவ செலவுக்கே போதவில்லை என்றால் பெரிய அளவில் இருக்கும் அந்த மணி பிளான்ட் கொடியை வெட்டி சின்ன செடியாக மாற்றி விடுங்கள். பிறகு பாருங்கள். வீட்டில் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்று. பணமும் அளவோடு வரும் ஆரோக்கியமும் சீராக இருக்கும் வீட்டில் சந்தோஷமும் நிலைக்கும். பெண்களின் மனநிலை சீராக நன்றாகவே இருக்கும்.

இதையும் படிக்கலாமே: திறமையை வெளிக் கொண்டு வரும் திலகம்

இல்லைங்க எங்களுக்கு எந்த பிரச்சனையுமே இல்ல. மணி பிளான் செடி கொடியாக மாறி படர்ந்த பின்பும் நாங்க நல்லா தான் இருக்கோம். அப்படின்னா ஒன்னும் பிரச்சனை கிடையாது. நீங்கள் உங்களுடைய வீட்டில் மணி பிளான்ட் கொடியை எப்படி வேண்டும் என்றாலும் வளர்த்துக் கொள்ளலாம். மணி பிளான்ட் பற்றி வாஸ்து நிபுணர்களால் சொல்லப்பட்ட கருத்துக்கள் தான் இவை. நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றலாம் நல்லது நடக்கும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

- Advertisement -