குரு அருள் பெற உதவும் தீபம்

guru deepam
- Advertisement -

குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள். ஒரு ஜாதகத்தில் குருவின் பலன் நிறைவாக இருந்தால் அந்த ஜாதகருக்கு எந்தவித குறையும் இருக்காது என்று தான் கூற வேண்டும். குரு இருக்கும் இடத்தை விட குரு பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம் என்று கூறுவார்கள். எந்த ஒரு சுப காரியத்தை செய்வதற்காக ஜாதகரிடம் சென்று பார்த்தாலும் அவர்கள் முதலில் குரு எந்த இடத்தில் இருக்கிறார் எப்படி பார்க்கிறார் என்பதை தான் பார்ப்பார்கள்.

அப்படிப்பட்ட குரு நமக்கு சாதகமான சூழ்நிலையில் இருந்தாலும் ஒரு சில நேரங்களில் அவரால் ஏற்படக்கூடிய நன்மைகள் நமக்கு ஏற்படாமலேயே போய்விடும். அந்த சூழ்நிலையிலும் குருவின் சாதகமான தன்மை அற்ற நிலை இருக்கும் பொழுதும் குருவின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தீபத்தை ஏற்றி வழிபடுவது என்பதுதான் மிகவும் சிறந்த வழிபாட்டு முறையாக திகழ்கிறது. சுபகாரியங்களாக இருந்தாலும், அசுப காரியங்களாக இருந்தாலும் அந்த இடத்தில் கண்டிப்பான முறையில் ஒரு தீபமாவது எரிந்து கொண்டுதான் இருக்கும். தீபம் எரியும் வீட்டில் எந்தவித தீய சக்திகளும் அணுகாது என்றும் கூறப்படுகிறது. தீபத்தில் பல வகைகள் இருக்கின்றன.

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு விதமாக தீபத்தை நாம் ஏற்றுவோம். அதைப்போல் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இத்தனை நாட்கள் இந்த முறையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பல வழிமுறைகள் இருக்கின்றது. அந்த வகையில் குரு பகவானின் அருளை பெறுவதற்கு எப்படி நாம் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.

- Advertisement -

இந்த தீபத்தை காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் தான் ஏற்ற வேண்டும். வளர்பிறையில் வரக்கூடிய வியாழக்கிழமை இந்த வழிபாட்டை தொடங்க வேண்டும். முதலில் இந்த தீபத்திற்கு தேவையான அனைத்தையும் நாம் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு குரு பகவானின் தானியமான கருப்பு கொண்டை கடலை வேண்டும். அரை கிலோ கருப்பு கொண்டை கடலையை வாங்கி சுத்தம் செய்து ரைஸ் மில்லில் கொடுத்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த இந்த கொண்டைக்கடலை மாவுடன் இரண்டு டப்பா பச்சை கற்பூரம் இரண்டு டப்பா ஜவ்வாது சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதில் நான்கு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். வெள்ளை நிற துணியை வாங்கி வந்து அதை சுத்தம் செய்து மஞ்சள் மற்றும் பன்னீர் கலந்த கலவையில் நனைத்து நன்றாக நிழலில் காய வைத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த மஞ்சள் துணியில் நாம் கலந்து வைத்திருக்கும் கொண்டைக்கடலை மாவை ஒரு ஸ்பூன் என்ற வீதம் வைத்து இந்த மஞ்சள் துணியை மஞ்சள் நிற நூலால் கட்டி முடிச்சாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்படி 108 என்ற எண்ணிக்கையில் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வியாழக்கிழமை காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு அகல் விளக்கில் சுத்தமான பசுமையை ஊற்றி தயார் செய்து வைத்திருக்கும் இந்த கொண்டைக்கடலை மாவு முடிச்சை வைத்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து 108 நாட்கள் இந்த தீபத்தை ஏற்றி வழிபட குரு பகவானின் பரிபூரண அருளை பெற்று அவரால் நடக்கக்கூடிய நன்மைகள் அனைத்தும் நடைபெறும்.

இதையும் படிக்கலாமே: இரவு நல்ல தூக்கம் வர பரிகாரம்
மிகவும் அதிசக்தி வாய்ந்த இந்த வழிபாட்டில் முழு நம்பிக்கை வைத்து செய்பவர்களுடைய வாழ்க்கையில் குரு பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -