இரவு நல்ல தூக்கம் வர பரிகாரம்

hanuman1
- Advertisement -

சில பேர் பகல் நேரங்களில் எல்லாம், எல்லா கஷ்டத்தையும் மறந்து சந்தோஷமாக நாளை கடத்திச் சென்று விடுவார்கள். ஆனால் எல்லா வேலையையும் முடித்துவிட்டு அமைதியாக இருக்கக் கூடிய அந்த இரவு நேரத்தில் தூங்க செல்லும் போது, எதிர்மறையான சிந்தனைகள் வரத் தொடங்கும். மனசு ஏதேதோ விஷயங்களை யோசிக்கும்.

கண்களை மூடி தூங்குவதற்கான வாய்ப்பே இருக்காது. தீராத பிரச்சினையால் மனக்குழப்பத்தால் எதிர்மறையான சிந்தனையால் விடிய விடிய கண் விழிப்பவர்கள் கூட நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காக ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரம்.

- Advertisement -

நல்ல தூக்கம் வர பரிகாரம்

இரவு உங்களுடைய வேலையை எல்லாம் முடித்து விடுங்கள். தூங்க செல்வதற்கு முன்பாக உள்ளங்கைகளில் 1 ஸ்பூன் காபித்தூள், 1 ஸ்பூன் கல் உப்பு, இரண்டையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும். இதை உங்களுடைய தலையை 27 முறை சுற்ற வேண்டும். ஆன்டி கிளாக் வைஸ், அதாவது அப்ரத்ஷணமாக உங்களுடைய தலையை 27 முறை சுற்றி, 1 டம்ளர் சுத்தமான தண்ணீரில் இந்த இரண்டு பொருட்களையும் போட்டு 1 ஸ்பூனை வைத்து கரைக்க வேண்டும்.

ஸ்பூனை தண்ணீரில் விட்டு, அந்த ஸ்பூனையும் ஆன்டி கிளாக் வைஸ் சுழற்றி இந்த தண்ணீரை கரைத்துக் கொள்ளுங்கள். இரண்டு பொருட்களும் அந்த தண்ணீரில் நன்றாக கரைந்த பின்பு, தண்ணீரை வாஷ்பேஷன் சிங்கிள் கொட்டி விடவும். பிறகு நீங்கள் ஒரு முறை குளித்துவிட்டு வந்து தூங்கவும். அவ்வளவுதான்.

- Advertisement -

ஆஞ்சநேயா நல்லபடியா தூங்க வரணும் அப்படின்னு நினைச்சுக்கிட்டே தூங்கப் போங்க. ஹனுமனின் பலம் உங்களுக்குள் வந்துவிடும். ஹனுமனை நினைத்தால் மன குழப்பம் நீங்கும் என்பது தான் நம்பிக்கை. பிறகு நிம்மதியான தூக்கம் வரும். தினமும் இந்த பரிகாரத்தை செய்யலாம் தவறு கிடையாது. இந்த பரிகாரத்தோடு சேர்த்து அனுமன் உங்களுக்கு துணையாக இருப்பார். மன பலத்தை கொடுப்பார். மன குழப்பத்தை நீக்குவார். ஆழ்ந்த தூக்கத்தையும் கொடுப்பார்.

நமக்கு நடந்த துன்பங்களை எல்லாம் நினைத்து நினைத்து வருத்தப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை. உங்களுடைய வாழ்க்கையில் நடந்த நல்லதை, உங்களுக்கு மனதிற்கு பிடித்த நபர்களை, உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிமையான தருணங்களை, மனதில் நினைத்துக் கொண்டு தூங்க செல்லுங்கள் நிச்சயம் நல்ல தூக்கம் வரும் மனசு சந்தோஷப்படும்.

இதையும் படிக்கலாமே: ராம நவமி அன்று உச்சரிக்க வேண்டிய ராம மந்திரம்

உங்களுக்கு இந்த ட்ரிக் வேலை செய்தால் உங்களுக்கு தெரிந்தவர்களோடும் இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். தூக்கம் இல்லாதவர்களுக்கு, தூக்கத்தையும் நிம்மதியையும் கொடுத்த புண்ணியம் உங்களை வந்து சேரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -