வியாழக்கிழமை இந்த மந்திரத்தை சொன்னால் வாழ்க்கையில் உங்களுக்கு ஜாக்பாட் அடிப்பது உறுதி. கஷ்டத்திலிருந்து முழுமையாக விடு பட வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை படிக்கவும்.

guru
- Advertisement -

நல்லது நடக்கும். நிச்சயம் எல்லோருக்கும் நல்லது நடக்கும். எந்த கஷ்டமும் நிரந்தரமானது கிடையாது. எந்த சந்தோஷமும் நிரந்தரமானதும் கிடையாது. வறுமையும் நிரந்தரமானது கிடையாது. நம் கையில் இருக்கும் பணமும் நிரந்தரமானது அல்ல. தினமும் இதை மனதில் நினைத்துக் கொண்டால் நிம்மதி உங்களை விட்டு எங்கும் செல்லாது. கஷ்டத்திலிருந்து நீங்கள் முழுமையாக விடுபடுவீர்கள். வாழ்க்கையில் ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் உங்களுக்கான அதிர்ஷ்டம் தேடி வரும். ஜாக்பாட் அடிக்கும். எப்பப்போ வாழ்க்கையில கஷ்டம் வருகிறதோ அப்போதெல்லாம் வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை. இதுவும் கடந்து போகும் என்ற வார்த்தையை மனதில் சொன்னால் நிச்சயம் வாழ்க்கையில் வரும் கஷ்டங்களை சுலபமாக கடந்து செல்லலாம் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

வியாழக்கிழமை சொல்ல வேண்டிய மந்திரம்:
என்னதான் பாசிடிவ் ஆக நாம் எண்ணத்தை வைத்துக் கொண்டாலும் கிரஹாச்சார சூழ்நிலை என்ற ஒன்று இருக்கிறது அல்லவா. இதன் அடிப்படையில் நம்முடைய கஷ்டங்களில் இருந்து வெளிவர வேண்டும் என்றால், அதற்கு குருபகவானின் ஆசிர்வாதம் தேவை. குறிப்பாக பண கஷ்டத்திலிருந்து வெளிவர கட்டாயம் இந்த குரு பகவானை வழிபட்டு தான் ஆக வேண்டும்.

- Advertisement -

வாரம் தோறும் வியாழக்கிழமை வந்துவிட்டால் மறக்காமல் பின் சொல்லும் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். வியாழக்கிழமை அதிகாலை வேளையிலேயே எழுந்து குளித்துவிட்டு முடிந்தால் மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொள்ளுங்கள். நீங்கள் பெண்களாக இருந்தால் முடிந்தால் மஞ்சள் நிற பூவை யாவது தலையில் ஒன்று வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்றிவிட்டு குலதெய்வத்தையும், குரு பகவானையும் நினைத்து விளக்கு ஏற்றி வைத்துவிட்டு பூஜையறைக்கு முன்பாக அமர்ந்து இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். குறிப்பாக காலை 6 மணிக்கு வியாழக்கிழமை விளக்கு ஏற்றி இந்த மந்திரத்தை சொன்னால் ரொம்ப ரொம்ப நல்ல.

குருமகவானின் பீஜ மந்திரம்:
ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ்

- Advertisement -

மந்திரத்தை உச்சரித்துவிட்டு பிறகு தினசரி வேலையை நீங்கள் தொடங்கலாம். வியாழக்கிழமை இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு குரு பகவானின் ஆசி முழுமையாக கிடைக்கும். பணக்கஷ்டம் தீரும். கடன் சுமை படிப்படியாக குறையும். வீட்டில் மங்களகரமான காரியங்களுக்கு ஏதேனும் தடை இருந்தாலும் அது விலகி விடும் என்பது நம்பிக்கை. படிக்கும் குழந்தைகளை இந்த மந்திரத்தை உச்சரிக்க சொன்னால் அவர்களுடைய கல்வித் திறன் உயரும்.

இதையும் படிக்கலாமே: இந்த பையில் நீங்கள் ஒரு ரூபாய் பணத்தை வைத்தாலும் கூட அது பல லட்சங்களாக மாறும் அதிசயம் நடக்கும். பணம் நகை என எதை வைத்தாலும் அதை பல மடங்காக பெருக்கி தரும்.

இந்த மந்திரத்தை உச்சரிப்பதோடு சேர்த்து முடிந்தால் வியாழக்கிழமை தோறும் தக்ஷிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலையால் மாலை கட்டி போடலாம். மஞ்சள் நிறத்தில் பிரசாதம் செய்து தட்சிணாமூர்த்திக்கு நிவேதனம் செய்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கலாம். மஞ்சள் நிற வாழைப்பழத்தை தானம் கொடுக்கலாம். வியாழக்கிழமைகளில் மேல் சொன்ன விஷயங்களை கடைப்பிடிப்பவர்களுக்கு நிச்சயம் ஜாக்பாட் அடிக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -