தொழிலில் வெற்றி பெற குரு பகவான் வழிபாடு

guru
- Advertisement -

குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்லுவார்கள் அல்லவா. அதே போல கோடி கோடியாக உங்களுக்கு லாபத்தை கொட்டி தர குரு பகவானை இந்த முறையில் வழிபாடு செய்தாலே போதும். உங்கள் தொழிலில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் சரியாகிவிடும். நஷ்டங்கள் எல்லாம் லாபமாக மாறும். வருமானம் பல மடங்காக பெருகும்.

பணத்தினால் இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறையும். ஆனால் சிரமம் பார்க்காமல் 16 வாரம் விடாமல் இந்த ஒரு வழிபாட்டை மட்டும் நம்பிக்கையோடு செய்து குரு பகவானின் பாதங்களை பற்றிக்கொள்ளுங்கள். தொழிலில் வெற்றி பெற குரு பகவானை எப்படி வழிபாடு செய்வது ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

வியாழக்கிழமை குரு பகவான் வழிபாடு

வளர்பிறை வியாழக்கிழமையில் இந்த பரிகாரத்தை தொடங்க வேண்டும். நீங்கள் பரிகாரத்தை தொடங்கும் அந்த முதல் வியாழக்கிழமை வளர்பிறை வியாழக்கிழமையாக இருக்கட்டும். வியாழக்கிழமை காலையிலேயே குளித்துவிட்டு வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி குருபகவானை நினைத்து வழிபாடை தொடங்க வேண்டும்.

எதுவும் சாப்பிடாமல் இருந்து விரதம் இருக்க முடியும் என்பவர்கள் இருக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சூழ்நிலை சரியில்லை, என்பவர்கள் உங்களுடைய ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு விரதம் இருந்து கொள்ளுங்கள். வியாழக்கிழமை மாலை குருபகவான் இருக்கக்கூடிய கோவிலுக்கு செல்ல வேண்டும். 16 மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி குரு பகவானுக்கு முன்பு வைத்து விடுங்கள்.

- Advertisement -

தக்ஷிணாமூர்த்திக்கு முன்பாக இந்த வழிபாட்டினை செய்ய வேண்டும். பிறகு அவருக்கு கொண்டைக்கடலையை தண்ணீரில் ஊற வைத்து மாலையாக கோர்த்து போட வேண்டும். மஞ்சள் நிறத்தில் இருக்கும் லட்டு 16 என்ற எண் கணக்கில் வாங்கிக் கொண்டு போய் அவருக்கு வைத்து அர்ச்சனை செய்து கொள்ளவும். உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.

குரு பகவானுக்கு நேர் எதிராக சிறிது நேரம் அமர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். வருமானம் லாபம் பெருக வேண்டும் தொழிலில் முன்னேற்றம் அடைய குரு பகவானின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வழிபாட்டை முடித்துவிட்டு நெய்வேதியமாக வைத்து அந்த லட்டுவை எடுத்து அந்த கோவிலுக்கு வருபவர்களுக்கு உங்கள் கையெல்லாம் பிரசாதமாக கொடுத்து விடுங்கள். வழிபாடு முடிந்தது.

- Advertisement -

இதே வழிபாட்டை 16 வாரம் தொடர்ந்து செய்து விட்டால், எந்த தடையும் ஏற்படாமல் வழிபாட்டை முடித்து விட்டால் உங்களை பிறகு தொழிலில் ஜெயிக்க யாராலும் முடியாது. இடைவிடாது 16 வாரம் இந்த வழிபாட்டை செய்து முடிக்கணும். அப்புறம் தொழிலில் நீங்க கிங்கா இருப்பீங்க.

இது பார்ப்பதற்கு எளிமையான வழிபாடு போல தெரியும். ஆனால் ஒரு தவமாக எடுத்து 16 வாரம் எவ்வளவு தடை வந்தாலும் அதை தாண்டி குருபகவானை இப்படி வழிபாடு செய்து விட்டால் உங்களுக்கு குரு பகவான் கோடி கோடியாக கொட்டி தருவார் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்கும் மயில் தோகை

தொழிலில் நொடிந்து போனவர்கள் புதுசாக தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தொழிலில் இன்னும் மேலும் வளர்ச்சி அடைந்து தொழிலதிபராக முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாம் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற வேண்டுதலை வைத்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -