சொந்த வீடு வாங்க பரிகாரம்

sondha veedu vanga pariharam
- Advertisement -

சொந்த வீட்டை போன்ற ஒரு மன நிறைவை தருகின்ற விடயம் எதுவும் இல்லை என்பதை சொந்த வீடு இல்லாதவர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள். தங்களுக்கு சொந்த வீடு மிக சீக்கிரத்தில் அமைய வேண்டும் என விரும்புவர்களுக்கு பலவிதமான காரணங்களால், அந்த கனவு தள்ளிக் கொண்டே போகும். வெகுவிரைவிலேயே தங்களுக்கென சொந்த வீடு வாங்க ( Sontha veedu vanga pariharam in Tamil ) அல்லது சொந்த வீடு கட்ட செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்னென்ன என்பது குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

சொந்த வீடு வாங்க செய்யவேண்டிய பரிகாரம்

தங்களுக்கென்று சொந்த வீடு அமைய வேண்டும் என விரும்புபவர்கள் முடிந்தவரை திருவள்ளூர் மாவட்டம் அருள்மிகு சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ஒரு முறையேனும் சென்று முருகப்பெருமானுக்கு மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு கோவிலில் முருகப்பெருமானுக்கு எதிரே உள்ள தீப மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு 9 நெய் தீபங்கள் ஏற்றி முருகப்பெருமான் உங்களுக்கு கூடிய விரைவில் சொந்த வீடு அருள வேண்டும் என மனதார வேண்டி வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

பிறகு கோயில் வளாகத்தில் இருக்கின்ற பிற உப தெய்வங்களையும் வழிபாடு செய்த முடித்ததும், திருக்கோயில் வளாகத்தில் உட்புறமாகவே முருக பெருமான் இருக்கும் கருவறை சன்னதியை சுற்றி 9 முறை வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். தங்களின் விருப்பப்படி முருகப்பெருமான் அருளால் சொந்த வீடு அமையப்பெற்றவர்கள் இக்கோயிலுக்கு மீண்டும் வந்து முருகப்பெருமானுக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வதால் புது வீட்டில் குடியேறுபவர்கள் முருகப்பெருமானின் பரிபூரண அருளைப் பெற்று சிறப்பான வாழ்க்கையை பெறுவார்கள்.

தங்களுக்கென சொந்த வீடு இல்லையே என வருந்தபவர்கள் மிக எளிமையான இந்த தெய்வீக பரிகாரத்தை செய்து பயன்பெறலாம். தினமும் காலை – மாலை வேலைகளில் பூஜையில் விளக்கேற்றும் பொழுது ஒரு மண் அகல் விளக்கில், இரண்டு பஞ்சு திரியை ஒன்றாக திரித்து போட்டு, அதனுள்ளே நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்ற வேண்டும். இதன்பிறகு அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து கீழே வைத்து, அதன் மீது இந்த மண் அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தினந்தோறும் தீபம் ஏற்றுவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். உங்களுக்கு சொந்த வீடு யோகம் அமைந்ததும் இந்த மண் விளக்கிற்கு அடியில் வைக்கின்ற ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து உங்களின் குலதெய்வ கோயில் உண்டியலிலோ அல்லது முருகப்பெருமான் கோயில் உண்டியலோ காணிக்கையாக போட்டு விட வேண்டும்.

- Advertisement -

தங்களுக்கென ஏற்கனவே ஒரு சொந்த வீடு அமையப் ( Sontha veedu vanga pariharam in Tamil ) பெற்று, மேலும் ஒரு வீட்டை சொந்தமாக கட்ட விரும்புபவர்கள். மேற்சொன்ன படி அகல் விளக்கில் பஞ்சுத் திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும். ஆனால் ஐந்து ரூபாய் நாணயத்தை அகல் விளக்கிற்கு அடியில் வைப்பதற்கு பதிலாக, அந்த அகல் விளக்கிற்குள்ளாகவே போட்டு தீபம் ஏற்ற வேண்டும். தாங்கள் விரும்பியபடி மேலும் ஒரு சொந்த வீடு யோகத்தை அடைந்ததும் விளக்கில் போட்டுக் கொண்டிருந்த அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து குலதெய்வ கோயில் அல்லது முருகப்பெருமான் கோயிலில் காணிக்கையாக செலுத்தி விட வேண்டும்.

தங்களுக்கென சொந்த வீடு அமைய விரும்புவார்கள் துதிக்க வேண்டிய ஒரு மந்திர பாடல் குறித்து இப்போது நாம் பார்க்கலாம். அபிராம பட்டர் எனும் அற்புத புலவரால் இயற்றப்பட்ட மந்திர சக்தி கொண்ட ஒரு அற்புதமான பாடல் தொகுப்பு தான் “அபிராமி அந்தாதி” .திருக்கடையூர் அபிராமி தாயாரை போற்றும் அபிராமி அந்தாதையில் பாடல் தொகுப்பில் 68 ஆவது பாடலாக வருகின்ற.

இதையும் படிக்கலாமே: வாஸ்து பரிகாரம்


பாரும் புனலும் கனலும் வெங் காலும் படர்விசும்பும்

ஊரும் முருகு சுவைஒளி ஊரொலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே.

எனும் இந்த பாடலை தினம் தோறும் காலை மற்றும் மாலை வேலைகளில் பூஜை அறையில், விளக்கேற்றி திருக்கடையூர் வாழ் அபிராமி அம்பாளை மனதில் நினைத்து துதித்து வருபவர்களுக்கு எல்லா வகையான செல்வங்களுடன், சகல வசதிகளுடன் கூடிய சொந்த வீடு அமையும் என அனுபவம் வாய்ந்தவர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -