இதை மட்டும் செய்தால் போதும். குரு பகவானும், மகாலட்சுமியும் மாறி மாறி உங்களுக்கு நல்லது செய்ய போட்டி போட்டுக் கொண்டு உங்கள் வீட்டிற்குள் வருவார்கள்.

guru-astro
- Advertisement -

வாழ்வில் நமக்கு நல்லது நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்றால், எப்போதும் குரு பகவானின் ஆசிர்வாதம் இருக்க வேண்டும். அதேசமயம் மகாலட்சுமியின் கடைக்கண் பார்வையில் இருந்து நாம் மறையவே கூடாது. இதற்காக பெரிய அளவில் செலவு செய்து எந்த பரிகாரமும் செய்ய வேண்டாம். பின் சொல்லக்கூடிய சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றி வந்தாலே போதும். உங்களுடைய வாழ்வு வளம் பெறும். சோகங்கள் நிறைந்த, இருண்டு போன உங்கள் வாழ்க்கையில் திடீரென்று ஒளி வீசத் தொடங்கி விட்டால், எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அந்த சந்தோஷத்தை கொடுப்பதற்காகத்தான் இந்த பரிகாரங்கள்.

குரு என்றாலே மஞ்சள். நாம் எல்லோருக்கும் தெரியும். அடிக்கடி மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். முழு மஞ்சள் நிற ஆடையை அணிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பெண்களாக இருந்தால் மேலே போடும் துப்பட்டாவை மஞ்சள் நிறத்தில் அணியலாம். ஆண்கள் என்றால் மஞ்சள் நிறம் கலந்த சட்டையை போடலாம். ஒரு வெள்ளை நூலை எடுத்து மஞ்சள் தண்ணீரில் நனைத்து, அந்த மஞ்சள் நூலை பூஜை அறையில் வைத்து 5 முடிச்சு போட வேண்டும். ஒவ்வொரு முடிச்சு போடும்போதும் குரு பகவானே மனதார நினைத்து போடுங்கள்.

- Advertisement -

அதன்பின்பு பூஜையறையிலேயே அமர்ந்து இந்த மஞ்சள் கயிறை உங்களுடைய கையில் கட்டிக் கொள்ளுங்கள். வியாழக்கிழமை காலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் இந்த மஞ்சள் கயிறு பரிகாரத்தை செய்வது மிகவும் சிறப்பு. இந்த மஞ்சள் கயிறானது உங்கள் கையில் இருக்கும் வரை உங்களுடைய எல்லா காரியங்களும் வெற்றி அடையும். தோல்வியடைய கூடிய காரியங்களை நினைத்து எப்போதும் துவண்டு போகக்கூடாது. தோல்வி அடையக் கூடிய காரியங்கள் உங்களுக்கு நன்மையை தராத காரணத்தால் தான் அந்த ஆண்டவன், நல்ல வாய்ப்பை உங்கள் கையை விட்டு நழுவ செய்கின்றான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த காலத்தில் பெண்கள் தினம் தோறும் மஞ்சள் பூசி குளிக்கும் பழக்கத்தை வைத்திருந்தார்கள். பெண்களுக்கு என ஒரு மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைவாக இருந்தது. ஆனால் இந்த காலத்தில் மஞ்சள் பூசி குளிக்கும் பழக்கம் படிப்படியாக குறைந்து, ஒரு காலகட்டத்தில் காணாமலேயே போய்விட்டது. நீங்கள் மஞ்சள் தேய்த்து குளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.

- Advertisement -

தினமும் காலையில் குளித்துவிட்டு ஒரு சொட்டு மஞ்சளில் தண்ணீர் ஊற்றி குழைத்து அந்த மஞ்சளை நெற்றியில் இட்டுக் கொள்ளும் பழக்கத்தையாவது வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு குருபகவானின் ஆசிர்வாதத்தை பெற்று தரும். மன மகிழ்ச்சியை தரும். சந்தோஷத்தை கொடுக்கும். ஆண்களும் இந்த மஞ்சள் திலகத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளலாம் தவறு கிடையாது.

மகாலட்சுமி நிலை வாசலுக்குள் நிலையாக வருகை தர வேண்டும் என்றால் உங்கள் வீட்டு வாசல் பகுதியில் இந்த செடியை வைக்க வேண்டும். அது எந்த செடி. மனோரஞ்சித செடி. மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான இந்த செடியை உங்கள் நிலை வாசலில் நட்டு வைத்து தான் பாருங்கள். மகாலட்சுமியின் வருகையை நீங்களே நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது. இது தவிர உங்கள் வீட்டிற்கு வரும் எதிரிகள் கூட இந்த செடியை பார்த்துவிட்டு வீட்டிற்குள் நுழையும் போது உங்களுடைய நண்பர்களாக மாறிவிடுவார்கள். அந்த அளவிற்கு ஒரு வசிய தன்மை கொண்ட செடி தான் இது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -