குரு பெயர்ச்சி பலன்கள் 2019 மீனம்

Guru peyarchi palangal meenam
- Advertisement -

மீனம்: ( பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

Meenam Rasi

பகைவரையும் மன்னிக்கும் தயாள குணம் கொண்ட மீன ராசிக்காரர்களுக்கு வரவிருக்கும் குரு பெயர்ச்சியானது எத்தகைய பலன்களை நல்க போகிறது என்பதை பார்ப்போம்.

- Advertisement -

இந்த குரு பெயர்ச்சியால் உங்களுக்கு பெரிதாக நற்பலன்கள் இல்லை, எனினும் கலக்கம் கொள்ளத் தேவையில்லை. உங்கள் ராசிக்கு 10ஆம் இடத்தில் குரு பகவான் குடி புகுவதால் பொதுவாக நஷ்டமும் மன சோர்வும் ஏற்படும். இருப்பினும் குருவின் பார்வை ஐந்தாமிடத்தை நோக்கி வருவதால் பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுவார். நட்பு வட்டம் விரிவடையும். திட்டமிட்டபடி குடும்பத்துடன் திருத்தலங்களுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள் அதனால் உற்சாகமடைவீர்கள்.

இதுவரை உங்கள் ராசியில் ஒன்பதாமிடத்தில் அமர்ந்து கொண்டு எதிலும் வெற்றியை கொடுத்த குருபகவான் தற்போது பத்தாம் இடத்திற்கு பெயர்வதால் ஒரு சில சோதனைகளை கொடுப்பார், எனினும் அதை நீங்கள் தைரியத்துடன் எதிர்த்து போராடி முன்னேறுவீர்கள். எந்தப் பிரச்சினையானாலும் மன தைரியத்துடன் போராடுவீர்கள்.

- Advertisement -
Guru peyarchi palangal Meenam
Guru peyarchi palangal Meenam

நீங்கள் அதிக விழிப்புணர்வுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டிய நேரம் இது. குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் வரக்கூடும். தம்பதியர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். சுருக்கமாக சொல்லப்போனால் நாவடக்கம் தேவை. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிற்காமல் அடுத்தவர் சொல்லையும் காது கொடுத்து கேட்பது நன்மை தரும்.

பொருளாதாரம்:
குருபகவானின் பார்வை 2, 4 மற்றும் 6ஆம் வீட்டில் பதிவதால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். இதுவரை மேலோங்கியிருந்த குடும்ப பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு வரும். வசூல் ஆகாமல் இருந்த பழைய கடன்கள் எல்லாம் விரைவில் கைக்கு கிடைத்துவிடும். தன வரவு திருப்திகரமாக இருக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நேரம் இது. அவரவர் ஜாதக தனித்தன்மையை பொறுத்து பரிகாரங்களை மேற்கொள்ளலாம்.

- Advertisement -
Guru peyarchi palangal Meenam
Guru peyarchi palangal Meenam

தொழில்:
வியாபாரத்தில் மந்தநிலை இருக்கும். நம்பிக்கைக்குரியவர்கள் கடைசி நேரத்தில் நம்பிக்கை இழக்கும்படி செய்து விடுவார்கள். சந்தர்ப்பங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்தாலும் அதனை உங்களால் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போகலாம். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல பலன்கள் காத்திருக்கிறது. உங்களுடன் சேர்ந்து பணிபுரிபவர்களிடத்தில் இருந்த மனகசப்பு தீரும். ஒற்றுமை உண்டாகும். ஊதிய உயர்விற்கு போராட வேண்டிய நிலை வரலாம்.

கல்வி:
கல்வி கற்கும் மாணவ, மாணவியர்களுக்கு மனத் தளர்ச்சி ஏற்படலாம். ஆசிரியர்களின் உதவியை நாடுவது நல்லது. குருவின் பார்வை பலத்தால் தேர்வில் வெற்றி பெற்று அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். நீங்கள் விரும்பிய பாடம் விரும்பியபடி கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

ஜாக்கிரதையாக இருக்கவேண்டியவை:
குடும்பத்தை விட்டு அல்லது ஊரை விட்டு பிரிய வேண்டிய நிலை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நலம் தரும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. அரசு வழி காரியங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

meenam

பரிகாரம்:
குல தெய்வ வழிபாட்டையும், சனிக்கிழமை அன்று சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தங்களால் இயன்ற வரை அனாதை ஆசிரமத்திற்கு சென்று பொருளுதவி செய்யுங்கள்.

- Advertisement -