கல்வியில் சிறந்து விளங்க வழிபாடு

studies pariharam
- Advertisement -

எல்லா காலக்கட்டத்திலும் பெற்றோர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான ஒரு வேண்டுதல் என்பது அவர்கள் குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பது தான். அப்படி குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்கு அவர்களின் கல்வி திறன்கள் சிறப்பாக இருக்க வேண்டும்.

அப்படி அவர்களின் திறன்கள் மற்றும் கல்வி ஆற்றல் உயர பல பரிகாரங்கள் மற்றும் பல வழிபாடுகள் உள்ளன. அதில் மிகச் சிறந்த ஒன்றான கருதப்படுவது ஹயக்ரீவர் வழிபாடு. அது என்ன என்பதை பற்றி இந்த ஆன்மிகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

குழந்தைகள் நன்றாக படிக்க மந்திரம்

ஹயக்ரீவர் என்பவர் விஷ்ணுவின் அவதாரமானவர். குதிரை உருவம் தெய்வீக உருவம் மற்றும் மனித உருவம் அனைத்தையும் கலந்த ஒரு ஞான திருஷ்டியை கொண்டவர். பிரம்மரிடமிருந்து வேத நூல்களை அசுரர்கள் திருடி சென்ற போது அவர்களிடம் இருந்து வேத நூல்களை திரும்ப பெறுவதற்காக எடுத்த அவதாரமே இந்த ஹயக்ரீவர் அவதாரம்.

அதனால் ஹயக்ரீவரை யார் ஒருவர் முழு மனதோடு வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய கல்வி அறிவு என்பது சிறப்பாக விளங்கும் என்று கூறப்படுகிறது. இவரின் அருள் முழுமையாக பெற வேண்டும் எனில் வீட்டில் அவரது சிறிய உருவப்படமாகட்டும் அல்லது பெரிய உருவப்படம் ஆகட்டும் உங்கள் வசதிக்கு ஏற்றபடி அவரின் உருவப் படத்தை வைத்து வணங்க வேண்டும்.

- Advertisement -

அதற்கு துளசி மற்றும் வாசனை மலர்களை சாற்ற வேண்டும். வாரத்தில் ஒரு முறை ஒற்றைப்படை எண்ணிக்கையில் ஏலக்காய் மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி வந்தால் அவரது அருளை முழுமையாக பெறலாம் என்று நம் ஞான முன்னோர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஏலக்காய் மாலை சாற்ற முடியாதவர்கள் தினமும் சிறிய அளவு பாலில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் போட்டு நெய்வேத்தியமாக வைத்து முழு மனதுடன் அவரை நினைத்து வழிபடுவதன் மூலம் அவரது அருளை முழுமையாக பெற முடியும் என்றும் நம்பப்படுகிறது. இந்த அனைத்து சிறிய காரியங்களும் நமக்கு மிகப்பெரிய பலன்களைத் தரும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அது மட்டுமின்றி “ஞானா நந்தமயம் தேவம் நிர்மலம் சுவடிகாக்கிருதே ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவ உபாசமகே” என்ற இந்த ஸ்லோகத்தை படிக்கும் பிள்ளைகள் காலையில் ஒரு முறை பள்ளி செல்வதற்கு முன் உச்சரித்து செல்வதன் மூலம் கல்வி சம்பந்தமான அனைத்து காரியங்களையும் எதிர்கொள்வதற்கும் மற்றும் வெற்றி பெறவும் உதவும்.

மேலும் அதில் வரும் அனைத்து தடைகளையும் வீரமாக எதிர் கொண்டு வெற்றி பெறவும் இந்த மந்திரம் உதவும். இந்த மந்திரம் மன உறுதியையும் ஞானத்தையும் அதிகரிக்கும். குழந்தைகள் நல்ல முறையில் படித்து உயர் பதவிகளை அடைய நம் முன்னோர்கள் காலத்திலிருந்து பின்பற்றி வந்த வழிமுறை தான் இது.

ஏனெனில் ஒரு குழந்தையின் எதிர்காலத்தை முடிவு செய்வது படிப்பு தான். நல்ல முறையில் படித்தால் நல்ல அறிவு ஞானத்தையும் அதைக் கொண்டு நல்ல வேலை வாய்ப்பையும் பெற முடியும் இதன் மூலம் சமூகத்தில் நல்ல நிலையில் வாழலாம். அதற்கான அச்சாரம் தான் இந்த ஹயக்ரீவர் வழிபாடும் மந்திரமும்.

இதையும் படிக்கலாமே: கடன் தொல்லை நீங்க செல்ல வேண்டிய ஆலயம்

எந்த ஒரு சிறிய மந்திரத்தை சிறிய விஷயம் தானே என்று தட்டி கழிக்காமல் செய்தால் நிச்சயம் காரியம் பெரிய வெற்றியைத் தரும். இந்த வழிபாட்டினை முழு மனதுடன் நம்பி இதைப் பின்பற்றி வாழ்வில் தன் குழந்தைகள் கல்வி அறிவில் சிறந்து விளங்கலாம் என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -