வாழ்நாள் முழுவதும் வற்றாத பண வரவையும், அதிர்ஷ்டத்தையும் ஒன்றாக பெற வேண்டுமா? இந்த தீபத்தை ஏற்றுங்கள் போதும். சகல சௌபாக்கியத்துடன் செல்வந்தராய் வாழ அற்புதமான தீபம்.

dakshinamurthy dheepam
- Advertisement -

குரு பார்க்கின் கோடி நன்மை இந்த வார்த்தையை கேள்வி படாதவர் இலர். ஒருவரின் மீது குருவின் பார்வையானது பட்டு விட்டால் அவர்கள் கல்வி ஞானம் செல்வம் பதவி வாய்ப்பு என எதிலும் குறைவில்லாத நிறைவான வாழ்க்கையை வாழ்வார்கள். எப்போதாவது குருவின் பார்வை நம் மீது படும் போதே இத்தனை நன்மைகள் பெற முடியும் எனில் எப்போதும் அவர் பார்வை நம் மீது படும் எனில் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். வாழ்நாள் இந்த குருவின் அனுகிரகத்தை பெறுவது குறித்த தகவலை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகத்திற்கான அதிபதி என ஒருவர் இருப்பார். அது போல குரு பகவானுக்குரிய அதிபதியான தெய்வம் என பார்த்தால் அவர் தட்சிணாமூர்த்தி. இதனால் தான் ஆலயங்களில் கூட குரு பகவானை பார்த்தபடி தட்சிணாமூர்த்தியும் அவரை பார்த்தபடி குருவும் இருப்பார்கள். குருவின் அனுகிரகம் முழுமையாக பெற வேண்டும் எனில் நாம் தட்சிணாமூர்த்தியை தான் வணங்க வேண்டும்.

- Advertisement -

குரு கிரகத்தின் பார்வை கிடைக்க தீபம்
இந்த இருவருக்குமே உகந்த நாள் எனில் அது வியாழக்கிழமை தான். இந்த வியாழக்கிழமை நாளில் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து தட்சிணாமூர்த்திக்கு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை முடிந்த வரையில் சிவாலயத்தில் ஏற்றினால் இன்னும் விசேஷ பலன்களை பெறலாம். ஏனெனில் இவர்கள் இருவருக்கும் அதிபதி அவரே. எனவே அங்கு இந்த தீபத்தை ஏற்றும் போது மிகப் பெரிய பலன் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த தீபத்தை முடிந்த வரையில் காலையில் ஏற்றி விடுங்கள். எந்த ஒரு வழிப்பாடு, ஆலயம் செல்வது போன்றவை எல்லாம் காலை வேளையில் செய்யும் பொழுது அதற்கென தனி பலன்கள் கிடைக்கும். வியாழக்கிழமை காலையில் எழுந்து குளித்து முடித்து பின் சிவாலயத்திற்கு சென்று அங்கு முதலில் சிவபெருமானின் வழிபாடு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அங்கு தட்சிணாமூர்த்திக்கு 24 தீபத்தை ஏற்றுங்கள். இந்த தீபத்தை நெய் அல்லது நல்லெண்ணெய் இரண்டில் எதை வேண்டுமானாலும் சேர்த்து ஏற்றலாம்.

- Advertisement -

இந்த தீபத்தை ஏற்றி தக்ஷிணாமூர்த்தி வழிபட்ட பிறகு அவருக்கு நேர் எதிர் இருக்கும் குரு பகவானிடம் சென்று அங்கும் இரண்டு தீபத்தை ஏற்றி நவகிரகத்தை சுற்றி வர வேண்டும். இந்த தீப பரிகாரத்தை தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை செய்து வரும் போது உங்களுக்கு வாழ்வில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழும். இதை உங்களால் கண்கூடாக பார்க்க முடியும். இதன் மூலம் குருவின் பார்வை உங்களுக்கு எப்போதும் கிடைப்பதுடன் தட்சிணாமூர்த்தி சிவபெருமானின் அருள் ஆசியும் உங்களுக்கு நிரந்தரமாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: நீண்ட நாட்களாக திருமணம் கைகூடாமல் கலங்கி நிற்பவர்கள் விநாயகருக்கு இந்த தீபத்தை ஏற்றி இப்படி வழிபட்டால் போதும், எல்லா விதமான திருமண தடையும் நீங்கி நல்லதொரு வாழ்க்கை துணை அமைவது உறுதி.

இந்த தீப பரிகார முறையை செய்து உங்கள் வாழ்க்கையில் எந்த வித துன்பமும் துயரமும் இல்லாமல் அதிர்ஷ்டத்தையும் பணவரவையும் பெற்று நல்ல செல்வாக்குடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -