நீண்ட நாட்களாக திருமணம் கைகூடாமல் கலங்கி நிற்பவர்கள் விநாயகருக்கு இந்த தீபத்தை ஏற்றி இப்படி வழிபட்டால் போதும், எல்லா விதமான திருமண தடையும் நீங்கி நல்லதொரு வாழ்க்கை துணை அமைவது உறுதி.

ma
- Advertisement -

ஒரு மனிதன் முழுமை அடைவது அவனுடைய திருமணத்தில் தான் என்பது மிகையாகாது. இந்த திருமணம் என்பது பல பேர் வாழ்க்கையில் வெறும் கனவாகவே உள்ளது. ஏதாவது ஒரு காரணத்தினால் திருமண தடைப்பட்டு கொண்டிருக்கும் பட்சத்தில் அது மிகவும் மன வேதனையை தரும். அந்த மனவேதனையை போக்கி திருமணம் விரைவில் நடக்க விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும் என்று தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

திருமண தடை நீங்க தீபம்
முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட்டு தான் நாம் எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிப்போம். அவ்வாறு ஆரம்பிப்பதன் மூலம் அந்த காரியத்தில் எந்தவித தடைகளும் இன்றி காரிய சித்தி ஏற்படும் என்பது அனைவரின் நம்பிக்கை. அந்த வகையில் திருமண தடையை விலக்கவும் விநாயகர் நமக்கு உதவி புரிகிறார்.

- Advertisement -

யாருக்கு திருமணம் தடைப்பட்டு இருக்கிறதோ அந்த நபர் ஞாயிற்றுக்கிழமை காலையில் சூரிய உதயத்தின் போது விநாயகர் முதன்மையான தெய்வமாக இருக்கும் கோவிலுக்கு செல்ல வேண்டும். அதாவது விநாயகர் கோவிலுக்கு செல்ல வேண்டும். மாறாக சிவன் கோவிலில் இருக்கும் விநாயகருக்கு அல்லது வேறு தெய்வங்களின் கோவிலில் இருக்கும் விநாயகருக்கு இந்த வழிபாட்டை மேற்கொள்ளக் கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு தேங்காயை வாங்கி அதை சரிசமமாக உடைத்து அந்த நீரை கீழே ஊற்றி விட வேண்டும். பிறகு அதில் சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும். மேலும் மஞ்சள் நிற துணியில் சிறிது கோதுமையை வைத்து மூட்டையாக கட்ட வேண்டும். அந்த மூட்டையை தேங்காய் எண்ணெயில் வைத்து விநாயகருக்கு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். திருமணம் தடைப்பட்டிருக்கும் நபரின் பெயரில் விநாயகருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு விநாயகரை 21 முறை வலம் வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 21 வாரங்கள் செய்துவர திருமண தடை விலகும். மேலும் அன்றைய தினம் முழுவதும் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் மதுபானங்களும் அருந்தக் கூடாது. அப்பொழுது தான் இந்த வழிபாட்டிற்குரிய முழுமையான பலன் உங்களை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்தடை இருக்கும் நபர் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். மாறாக அவருடைய தாயோ, தந்தையோ, தமையனோ, தமக்கையோ செய்வதால் எந்த பலனும் இல்லை. வெளிநாடுகளில் இருப்பவர்களால் இந்த பரிகாரத்தை செய்ய இயலாத அட்சத்தில், அவரின் தாய் அவருடைய உடையை மடியில் வைத்துக் கொண்டு இந்த பரிகாரத்தை மேற்கொள்ளலாம்.(முடியாத பட்சத்தில் மட்டுமே).

இதையும் படிக்கலாமே: விதியே என துயரங்களை தாங்கி கொண்டு துன்பக் கடலில் உழன்று கொண்டிருப்பவர்கள் இந்த தெய்வத்தை வழிபட்டால் போதும். உங்கள் தலைவிதியே மாற்றி விடும் சக்தி வாய்ந்த தெய்வ வழிபாடு

மேற்கொண்ட வழிபாட்டை முறையாக 21 வாரங்கள் முறையாக மேற்கொண்டால், விநாயகரின் பரிபூரணமான அருளைப் பெற்று திருமண தடை விலகி விரைவில் திருமணம் நடைபெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -