குரு பகவானின் அருள் கிடைக்க பரிகாரம்

guru1
- Advertisement -

குரு பகவானின் அருள் கிடைக்க வீட்டில் இருந்தபடியே செய்ய வேண்டிய எளிமையான விளக்கு பரிகாரம் இது. வீட்டில் பணக்கஷ்டம் உள்ளவர்கள், குருதிசை நடப்பவர்கள், கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள், எல்லாம் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் போதும்.

உங்களுக்கு குரு பகவானின் அனுக்கிரகம் கிடைத்துவிடும். பணவரவு அதிகரிக்கும். தொழில் முடக்கம் நீங்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். இப்படி பல நன்மைகளை கொடுக்கப் போகும் அந்த விளக்கு பரிகாரத்தைப் பற்றிய விரிவான தகவலை தெரிந்து கொள்ள இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படியுங்கள்.

- Advertisement -

குரு பகவானின் அனுகிரகம் பெற

முதலில் இந்த பரிகாரத்திற்கு கருப்பு கொண்டைக்கடலை நமக்குத் தேவை. 1/2 கிலோ அளவு கடையிலிருந்து கருப்பு கொண்டை கடலையை வாங்கி சுத்தம் செய்துவிட்டு அப்படியே ரைஸ் மில்லில் கொடுத்து நைசாக அரைத்து வாங்கிக் கொள்ளுங்கள். கொண்டைக்கடலை அரைத்த பவுடர் தான் நமக்குத் தேவை.

இந்த கொண்டைக்கடலை பொடியோடு கொஞ்சமாக ஏலக்காய் தூள், அரகஜா, பச்சை கற்பூரம், சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும். 5 ஏலக்காயை கொண்டை கடலையோடு சேர்த்து போட்டு அரைத்துக் கொண்டாலும் சரிதான் அது உங்களுடைய இஷ்டம்.

- Advertisement -

இப்போது நம்மிடம் பணத்தை வசியம் செய்யக்கூடிய, குருபகவானை வசியம் செய்யக்கூடிய பொடி தயாராக உள்ளது. மஞ்சள் நிறத்தில் 108 துணி தேவை. மஞ்சள் நிற காட்டன் துணியை சின்ன சின்ன துண்டுகளாக சதுர வடிவில் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் உள்ளே தயார் செய்து வைத்திருக்கும் பொடியை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து சின்ன சின்ன மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள்.

சனி பகவானுக்கு எள்ளு தீபம் எப்படி ஏற்றுவோம். அதேபோல குரு பகவானுக்கு கருப்பு கொண்டை கடலை பொடியின் தீபம் ஏற்ற போகின்றோம். இதுதான் பரிகாரம். தயார் செய்து வைத்திருக்கும் முடிச்சுகளை ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு சூரிய உதயத்திற்கு முன்பு காலை 6:00 மணிக்கு முன்பாக உங்களுடைய வீட்டில் இந்த தீபத்தை குரு பகவானின் மனதார நினைத்து ஏற்றி விட வேண்டும்.

- Advertisement -

ஒரு மண் அகல் விளக்கில் இந்த முடிச்சை வைத்து அதன் மேலே நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி அப்படியே அந்த தீபத்தை எறிய விடுங்கள். அந்த தீபம் எவ்வளவு நேரம் எரியுமோ எரிந்து தானாக குளிரட்டும். துணியோடு சேர்ந்து தான் தீபம் எரியும். வீட்டில் இந்த தீபத்தை ஏற்றுவதன் மூலம் எந்த ஒரு தவறும் கிடையாது.

108 நாள் உங்களுடைய வீட்டில் காலை நேரத்தில் இந்த தீபத்தை ஏற்றி குரு பகவானை வழிபாடு செய்தால் உங்களுக்கு குரு பகவானின் அனுகிரகம் முழுமையாக கிடைத்துவிடும். வீட்டுப் பெண்கள் மாதவிலக்கான சமயத்தில் வீட்டில் இருக்கும் மற்றவர்கள் இந்த விளக்கை ஏற்றலாம் தவறு கிடையாது. 108 நாள் தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்து முடித்து விட்டால் உங்களுடைய பண பிரச்சனை அன்றோடு முடிந்துவிடும். பரிகாரம் கொஞ்சம் கடினமான பரிகாரம்தான்.

இதையும் படிக்கலாமே: சொந்த வீடு கட்ட நந்தி பகவான் வழிபாடு

ஏனென்றால் 108 நாட்கள் என்பது கொஞ்சம் அதிக நாட்களாக தெரியும். இருந்தாலும் நமக்கு இருக்கும் கஷ்டத்தையும் கொஞ்சம் பார்க்க வேண்டும் அல்லவா. அதன் மூலம் நமக்கு எவ்வளவு துன்பம் வருகிறது. துன்பத்தைப் போக்கும் பரிகாரத்தை கொஞ்சம் சிரமப்பட்டு நம்பிக்கையோடு செய்து முடித்து விடுங்கள். நிச்சயமாக உங்களுக்கு நல்லது நடக்கும். இந்த பரிகாரம் நல்லதொரு வழியை காட்டித் தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -