சொந்த வீடு கட்ட நந்தி பகவான் வழிபாடு

nandhi
- Advertisement -

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை நம்மில் எல்லோருக்குமே இருக்கு. அதற்காக ஆன்மீகம் சார்ந்த சில வழிபாட்டு முறைகளையும் பரிகாரங்களையும் நாம் பின்பற்றுவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றோம். அந்த வரிசையில் இன்று சொந்த வீடு, சொந்த வாகனம் வாங்கக்கூடிய யோகத்தை பெறுவதற்கு உண்டான நந்தி பகவான் வழிபாட்டை பற்றிய சிறப்பு தகவலைத்தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த வழிபாட்டை நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு நிச்சயம் சொந்த வீடு வண்டி வாங்கக் கூடிய யோகம் கிடைக்கும். அது மட்டுமில்லாமல் வாகனம் வைத்து தொழில் செய்பவர்களுக்கும் அதில் நல்ல லாபம் பெருகவும், இந்த வழிபாடு கை கொடுக்கும்.

- Advertisement -

சொந்த வீடு வாங்க நந்தி பகவான் வழிபாடு

ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். மல்லிகை, முல்லை, மரிக்கொழுந்து, பாரிஜாதம், மாமரத்து பூ இந்த பூக்களை எல்லாம் சேகரித்துக் கொள்ளுங்கள். வாழை நாரை கொண்டு இந்த பூக்களை எல்லாம் கட்டி ஒரே மாலையாக நந்தி பகவானுக்கு போட வேண்டும்.

வெள்ளிக்கிழமை அன்று இந்த மாலையை உங்கள் கையால் நந்தி பகவானுக்கு போட்டு நந்தி பகவானை 9 முறை வலம் வந்து, நந்தி பகவானே என்னுடைய வேண்டுதலை சீக்கிரம் நிறைவேற்றி வை என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். சிவபெருமானையும் வழிபாடு செய்யுங்கள். பிறகு சிவன் ஆலயத்தை மூன்று முறை வலம் வந்து கோவிலில் நமஸ்காரம் செய்து சிறிது நேரம் அந்த திருத்தலத்திலேயே அமர்ந்து சிவபெருமானை வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய வேண்டுதலை சீக்கிரம் நிறைவேற்றி தருவார். இதேபோல தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் செய்வது சிறப்பு. உடனடியாக உங்கள் வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். வண்டி வாகனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். புதுசாக வீடு வண்டி வாகனம் வாங்க வேண்டும் என்ற உங்கள் கனவும் நிறைவேறும்.

மேலே சொன்ன பூக்களின் வகைகளில் உங்களுக்கு ஏதாவது ஒரு பூ கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. கிடைக்கும் வாசம் நிறைந்த பூக்களை ஒன்றாக தொடுத்து இந்த மாலையை நந்தி பகவானுக்கு நம்பிக்கையோடு சாத்தி வேண்டுதல் வைத்து வாருங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

- Advertisement -

இதோடு சேர்த்து தவறாமல் செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானை வழிபாடு செய்ய கூடிய வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேலை உங்களுடைய ஜாதக கட்டத்தில் செவ்வாய் பகவானின் அருள் ஆசி சரியாக இல்லை என்றாலும் இந்த நிலம் வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். சொந்த வீடு கட்டுவதற்கு உண்டான யோகம் இல்லாமல் போகும்.

இதையும் படிக்கலாமே: சண்டை சச்சரவு குறைய பரிகாரம்

ஆகவே 9 வாரம் வெள்ளிக்கிழமை நந்தி பகவானை கும்பிடும் போது, செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்தபடியே முருகரை நினைத்து ஒரே ஒரு விளக்கு ஏற்றினாலும் போதும். உங்களுடைய வழிபாடு 200 சதவிகிதம் பலனை கொடுக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -