செம்பருத்தி பூவுடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து தேய்த்தால் போதும் ஒரு முடி கூட உதிரவே உதிராது. முடி உதிர்வுக்கு செலவே இல்லாத சுலபமான தீர்வு.

Hair Tips
- Advertisement -

அழகான நீண்ட கருகரு கூந்தல் வேண்டாம் என்று நினைப்பவர்கள் யாராவது உண்டா என்ன? இப்போதெல்லாம் அப்படி முடி வளரவில்லை என்றாலும் கூட பரவாயில்லை இருக்கும் முடி உதிராமல் இருந்தாலே போதும் என்று யோசிக்கும் நிலைமைக்கு ஆளாகி விட்டோம். இந்த அழகு குறிப்பு பதிவில் முடி உதிர்வு பிரச்சனைக்கு ரொம்பவே சுலபமான ஒரு தீர்வை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

முடி உதிராமல் இருப்பதற்கு நாம் என்ன தான் இது போன்ற குறிப்புகளை பயன்படுத்தினாலும், முதலில் நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்கள், அதிகமான அளவு தண்ணீர் குடிப்பது, மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, தலையை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது போன்றவற்றையெல்லாம் நாம் சரியாக செய்ய வேண்டியது மிக மிக அவசியம். இதையெல்லாம் சரியாக கடைப்பிடித்தாலும் கூட சிலருக்கு முடி உதிர்வு பிரச்சினைகள் இருக்கத் தான் செய்கிறது. அப்படியானவர்கள் இந்த முறையை பின்பற்றினால் நிச்சயம் முடி உதிர்வுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

- Advertisement -

முடி உதிர்வை தடுக்கும் வழி:
முடி உதிர்வு பிரச்சனைக்கு நமக்கு தேவையான இரண்டு பொருட்கள் ஒன்று ஒற்றை செம்பருத்தி பூ இதற்கு அடுக்கு செம்பருத்தி பூவை பயன்படுத்தக் கூடாது. ஒரு வேளை உங்களுக்கு செம்பருத்திப் பூ கிடைக்கவில்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் செம்பருத்தி பூ பொடி கிடைக்கிறது அதை வாங்கிக் கொள்ளுங்கள். அடுத்ததாக வெந்தயம் இதற்கு வெந்தயத்தை ஊற வைத்து எடுத்துக் கொள்ளலாம். அல்லது வெந்தயத்தை மிக்ஸியில் சேர்த்து பொடித்தும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் ஆக அரைக்கக் கூடாது.

இப்போது அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். தண்ணீர் காய்ந்தவுடன் ஐந்து செம்பருத்தி பூக்களை காம்பு நீக்கி போட்டு விடுங்கள். இத்துடன் ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து கொள்ளுங்கள். அது பொடியாகவும் இருக்கலாம் அல்லது ஊற வைத்ததாகவும் இருக்கலாம். இவை இரண்டையும் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் அரை டம்ளர் ஆகும் வரை கொதிக்க விடுங்கள். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு இந்த தண்ணீரை ஆற வைத்து வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தண்ணீரை நீங்கள் தலைக்கு குளிப்பதற்கு முன்பாக ஏதாவது ஒரு எண்ணை வைத்து உங்கள் தலையில் தேய்த்து லேசாக மசாஜ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த தண்ணீரை முடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து அரை மணி நேரம் வரை அப்படியே விட்டு விடுங்கள். இந்த தண்ணீர் முழுவதும் உங்கள் முடியும் வேர்க்கால்களின் உள்ளே இறங்க வேண்டும். அதன் பிறகு தலைக்கு குளித்து விடலாம்.

இப்படி தேய்த்துக் குளிக்கும் போது ஷாம்பூ கூட தேவைப்படாது. செம்பருத்தி பூ, வெந்தயம் இரண்டுமே நல்ல ஒரு குழகுழப்பு தன்மையுடன் இருக்கும். நீங்கள் ஷாம்பு கூட பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது ஒரு வேளை நீங்கள் விருப்பப்பட்டால் மைல் டான ஷாம்பு அல்லது சீயக்காய் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: முல்தானி மெட்டி அழகு குறிப்புகள்: (Multani Mitti Beauty Tips Tamil)

இது முடி உதிர்வை முற்றிலுமாக தடுத்து புதிய முடிகள் வளர உதவி செய்வதோடு, உங்கள் தலைமுடிக்கு ஒரு நல்ல கண்டிஷனராகவும் செயல் படும். இதனால் முடி நல்ல பட்டு போல சாஃப்ட் ஆகவும் இருக்கும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் டிரை பண்ணி பாருங்க கண்டிப்பா உங்களுடைய முடிவு பிரச்சனைக்கு இது ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

- Advertisement -