முடிவில்லாமல் தொடரும் முடி பிரச்சனைக்கு கூட முற்றுப்புள்ளி வைக்க, இந்த 3 பொருள் போதும். கத்தை கத்தையா முடி வளர்க்க ஆசைப்படுபவர்களுக்கு சூப்பர் டிப்ஸ்.

hair4
- Advertisement -

கத்தை கத்தையாக முடியை வளர்த்து பின்னிக் கொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால் ஒரு கீரை கட்டு அளவுக்கு கூட இப்போது முடியின் அடர்த்தி இருப்பது கிடையாது. யாருக்கு பார்த்தாலும் முடி உதிர்வு, இளநரை, வழுக்கை. பெண்கள் முழுமையான அழகை பெற வேண்டும் என்றால், அவர்களுக்கு முடி அழகும் மிக மிக அவசியம் தேவை. அந்த காலத்தில் ஆறு அடி கூந்தல் கொண்ட அழகிய பெண்கள் என்று சொல்லுவார்கள். இப்போது கூந்தல் எல்லாம் யாருக்கும் கிடையவே கிடையாது. எல்லோருக்கும் இருப்பது இத்தனூண்டு முடி அவ்வளவுதான். உங்களுக்கும் அழகான ஆறு அடி கூந்தலை, கத்தை கத்தையாக வளர்க்க ஆசையாக உள்ளதா. பின் சொல்லக்கூடிய இந்த எளிய அழகு குறிப்பு பின்பற்றினாலே போதும்.

கத்தை கத்தையாக முடியை வளர்க்க ஹேர் பேக்:
இரண்டு வகையான குறிப்புகளை பார்க்கப் போகின்றோம். முதல் குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் வெறும் செம்பருத்திப்பூ. உங்கள் தலைமுடிக்கு எத்தனை பூக்கள் தேவையோ அதை பறித்து கழுவி சுத்தம் செய்து விடுங்கள். காம்பை நீக்கிவிட வேண்டும். வெறும் செம்பருத்திப் பூ இதழ்களை மட்டும் மிக்ஸி ஜாரில் போட்டு ஒருமுறை தண்ணீர் ஊற்றாமல் அரைத்து விடுங்கள்.

- Advertisement -

பிறகு இதில் இரண்டிலிருந்து மூன்று டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அரைக்க வேண்டும். மொழு மொழுன்னு பேஸ்ட் போல ஒரு பேக் கிடைத்திருக்கும். (உங்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் தேங்காய் எண்ணெய் தேவைப்பட்டாலும் ஊற்றி அரைக்கலாம் தவறு இல்லை.) அந்த பேஸ்டை தலை முழுவதும் வேர்க்கால்களில் படும்படி தடவி விட வேண்டும். மீதம் பேக் இருந்தால் நுனி முடி வரை தடவிக் கொள்ளலாம்.

15 நிமிடம் கழித்து தலைக்கு குளித்து விட வேண்டும். ஜென்டில் ஆன ஷாம்பு அல்லது சீகைக்காய் போட்டு. வாரத்தில் இரண்டு நாள் இதை முயற்சி செய்து பாருங்கள். முடி உதிர்வு குறைந்து முடி அடர்த்தியாக வளர்வதை பார்க்கலாம். சிவப்பு நிறத்தில் கிடைக்கும் நாட்டு செம்பருத்தி பூ கிடைத்தால் குறிப்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது.

- Advertisement -

முடி உதிர்வதை தடுத்து நிறுத்த இரண்டாவது குறிப்பு:
இரண்டாவது குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் கருவாப்பிலை, வெங்காயத்தின் தோல், சிவப்பு வெங்காயத்தின் மேலே இருக்கும் தோல். கருவேப்பிலை 1/2 கைப்பிடி அளவு, வெங்காயத்தோல் 1/2 கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். 1/2 லிட்டர் தண்ணீரில் இந்த இரண்டு பொருட்களையும் போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். அந்த தண்ணீர் கொதித்து சுண்டி கால் லிட்டர் தண்ணீர் அளவு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, இந்த கலவை நன்றாக ஆறியதும், இந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி தனியாக எடுத்து ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்தால் 10 நாட்கள் கெட்டுப் போகாது.

இந்த ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரை தினமும் தலையில் ஸ்பிரே செய்து, 10 நிமிடம் கழித்து காய வைத்து விட வேண்டும். தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. முடியில் கெட்ட வாடையும் வீசாது. அப்படியே காய வைத்து விட்டு முடியை பின்னிக்கொண்டு வெளியே செல்வதாக இருந்தாலும் செல்லலாம். உங்களுக்கு அப்படியும் பிடிக்கவில்லை என்றால் வாரத்தில் இரண்டு நாள் தலைக்கு குளிப்பதற்கு முன்பு இந்த ஸ்பிரேவை தலையில் அடித்துக் கொண்டு, 20 நிமிடம் கழித்து தலைக்கு குளித்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கண்களை சுற்றி உள்ள கருவளையம் நிரந்தரமாக போக இதை மட்டும் போட்டால் போதும். அப்புறம் பாருங்க கருவளையம் மறைஞ்சு உங்க கண்ணு ஆயிரம் வாட்ஸ் பல்பு போல பிரகாசமா மின்னும்.

இந்த இரண்டு குறிப்பை மாறி மாறி முயற்சி செய்து வாருங்கள். வேறு எதுவுமே தேவையில்லை. உங்கள் முடி காடு போல அது பாட்டுக்கு வளர்ந்து கொண்டே செல்லும். என்னதான் தலைக்கு மேலே ஹேர் பேக் போட்டாலும் நாம் சாப்பிடும் உணவு பழக்க வழக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இந்த அழகு குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -