முன் நெற்றியில் வழுக்கை விழுகிறதா? உங்களுக்கு தீர்வளிக்கும் இந்த கலவையை வீட்டிலேயே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்

hair
- Advertisement -

உடல் உஷ்ணத்தினாலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டினாலும், விட்டமின் குறைபாட்டினாலும் முடி கொட்டும் பிரச்சனை ஏற்படுகிறது. நமது தாத்தா பாட்டி காலத்தில் எல்லாம் பெண்கள் அனைவருக்கும் இடுப்பிற்கு கீழ் வரை முடி இருக்கும். ஆனால் இப்பொழுது இருக்கும் பெண்களுக்கு நடு முதுகு வரை கூட முடி இருப்பதில்லை. ஒரு சிலர் ஃபேஷன் என்றுஇருக்குமம் முடியையும் வெட்டிக் கொள்கிறார்கள். ஒரு சிலருக்கு முடி வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் கூட முடியின் வளர்ச்சி அவ்வளவாக இருப்பதில்லை. இதற்கு நாம் உண்ணும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்து குறைபாடும் காரணமாக இருக்கலாம். இந்த குறைபாடுகளை இயற்கையான பொருட்களை வைத்து தான் சரி செய்ய முடியும். முடிக்கு தேவையான ஊட்டச்சத்தை நேரடியாகவே அளித்து முடி வளர்ச்சியை தூண்ட முடியும். அவ்வாறு எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு கலவையை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

hair4

முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் கிராம்பு எடுத்துக்கொண்டு, அதனுடன் 5 பிரியாணி இலை மற்றும் மளிகை கடைகளில் கிடைக்கக்கூடிய ரோஸ்மேரி இலையையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை மூன்று பொருட்களுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

- Advertisement -

கிராம்பு பிரியாணி இலை மற்றும் ரோஸ்மேரி இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருக்கின்றன இவற்றில் முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தும் பொழுது நல்ல பலனைக் கொடுக்கிறது.

biriyani-ilai

இவை மூன்றும் தண்ணீரில் நன்றாக கொதித்து நாம் ஊற்றிய தண்ணீர் பாதி அளவாக மாறிய பின்னர் அடுப்பை அனைத்து, இதனை அப்படியே ஆற வைக்கவேண்டும். பிறகு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பயன்படுத்தும் முறை:
தலைக்கு குளித்த முதல் நாளோ அல்லது மறுநாளோ தலையில் எண்ணெய் இல்லாமல் முடியை சிறு சிறு பகுதிகளாக பிரித்து முடியின் வேர் கால்களில் படுமாறு இந்த தண்ணீரை ஸ்பிரே செய்ய வேண்டும். அவ்வாறு ஒவ்வொரு பகுதியாக பிரித்து தலை முழுவதும் ஸ்பிரே செய்துவிட்டு கைகளினால் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். தொடர்ந்து 15 நிமிடம் மசாஜ் செய்து அப்படியே தலைமுடியை சேர்த்து கட்டிக் கொள்ள வேண்டும்.

hair5

இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முடி கொட்டிய இடத்திலலும் புதிய முடி வளர ஆரம்பிக்கும். முடி கொட்டும் பிரச்சனை இருந்தாலும் அது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமல்லாமல் முடியின் வளர்ச்சி அதிகமாகவும், அடர்த்தியாகவும் இருக்கும். அவ்வாறு முன்னேற்றறியில் வழுக்கை இருந்தாலும் அந்த இடத்திலும் இந்த தண்ணீரை ஸ்பிரே செய்து மசாஜ் செய்து வந்தால் சிறிது நாட்களிலேயே அந்த இடத்திலும் முடி வளர ஆரம்பிக்கும்.

- Advertisement -